Saturday, April 30, 2011

எம்மா.......எம்மா........

 
Posted by Picasa



என் அன்னையே....

முதல் அன்னம் கன்னம் நெருங்க

எந்தனுக்கு தந்த என் அன்னையே

பந்தமாய் பாசமுடன் மகவாய்

வந்துதித்த எனை வாரியணைத்த தாயே

மூவைந்து வருடம் உருண்டோடின நேற்றோடு

...
நீ எனைவிட்டு வானுலகம் போன அந்நாள்

இன்று மகளிர் தினம் ,உனக்குத் தெரியுமா...

என்னன்னையாம் உன் போன்ற தாயும்

பெண் தானே வஞ்சமில்லா நெஞ்சமே

உனை வணங்குகிறேன் இன்றும்....

உனை நானின்று எப்படிக் கூப்பிடுவது

அன்னையே..... தாயே....சரியாய் இல்லையே.

வாயால் சத்தம் போட்டுனை கூப்பிடுகிறேன்...

அம்மா......அம்மா.....எம்மா.........எம்மா....

உன் செவியில் கேட்கிறது..... எனக்கும் புரிகிறது

நான் கூப்பிட்டால் கேட்காமலா இருப்பாய்...

மறைந்தாலும் மறவாத என் அம்மையே

நான் இங்கு நலம்.. நீஅங்கு நலமா?.....

1 comment:

  1. நான் படித்தேன்.கண்ணீல் நீர் வந்தது.
    மனைவி படித்தாள்..... தேம்பி அழுதே விட்டாள்

    ReplyDelete