Tuesday, May 10, 2011

விவாதம்....
by A Ponnappa Pillai on Tuesday, February 1, 2011 at 3:18pm.மனதில் தோன்றியது



முகநூலில் அரசியல் விவாதம் சில கண்டேன். என் மனதில் தோன்றியதை பதிவு செய்ய விரும்பினதால் .........................................

நாகரீகமான வார்த்தைகளைப் புறம் தள்ளி KEY BOARD

கீயே உருகிடும் கடும் சுடு சொற்களை உபயோகித்திடும்போது

வாதம் தடுமாறித் தடம் மாறி இடம் மாறிப் போகுது

உருவம் தெரியாத யாரோ ஒரு முகனூல் நண்பரால்

உருவம் தெரிந்த நண்பர் ஒருவரை கடுமையான

வரிகளால் சுடும்போது வேதனை தான் மிஞ்சுகிறது

இருப்பினும் நம் நண்பரின் பொறுப்பான பதில் வரிகள்

பொன்னான வரிகளாய் மின்னிடு்ம்போது மனம் இதமாகிறது

“வன் சொற்களும் வேணடாம்,வரம்பும் மீற வேண்டாம்;

யாகாவாராயினும் ‘கை’ காக்க” என்ற சுயகட்டுப்பாடுடன்

பதிவு செய்யப்பட்ட மரபும் மீ்றா மின்னிய வரியின் உரிமயாளரை

உவகையுடன் உள்ளன்போடு பாராட்டுகிறேன்

கருத்துக்கள் உருவாகவேண்டும்

கருவிலேயே கலைத்து விடவேண்டாம.

பயனில்லா வரிகளை புறம் தள்ளிடல் வேண்டும்.

நேரடியான விமர்சனமும் வேண்டாமே...............

No comments:

Post a Comment