Thursday, June 16, 2011

என் கிராம மக்களோடு சிவன் கோயிலில் ஒருநாள்

 
Posted by Picasa

வைகாசி மாதம் 32(ஜூன் 15)புதன் கிழமை சந்திரகிரகணம்

இந்த மாத 22-வது கிரிவலம் அன்னதானம் நடக்கும் போது வரவேண்டும் என என் ஊருக்கே என்னை அழைத்தார்கள். நானும் என்மனைவியும் கோயிலுக்குப்போனோம்.கோயிலில் இருந்த கூட்டத்தையும் இளைஞர்களின் சுறுசுறுப்பான பணிகளையும் பார்த்து சந்தோசப்பட்டேன்.சிவன் அலங்காரம் பிரசித்திபெற்ற கோயிலில் பார்த்த சிவன் போன்று மிக அழகாய் இருந்தது...முருகன் ,சிவகாமிஅம்மன் சன்னிதானமும் மிகவும் அழகாய் இருந்தது. நான் பழகிய ஊர்க்காரர்கள் சிலரை அடையாளம் கண்டு அவர்களிடம் போய் பேசிவிட்டு ஓரமாய்
படிப்பெரையில் போய் இருந்தேன். என் நினைவுகள் என்னைப் பின்னோக்கி அழைத்துச் சென்றது “......முப்பது வருடங்களுக்கு முன்னால் இந்தக்கோயில் எப்படி இருந்தது. ஊரெல்லாம் ஒளிவெள்ளம் . ஆனால் சிவன் கோயிலில் மட்டுமே மின் வசதி இல்லாத இருள் சூழ்ந்த நிலை.........நாங்கள் முயற்சி எடுத்தோம் .அரசின் அனுமதி பெற்று ஊர்மக்களிடம் பணம் பெற்று அந்த வரவு மூலம் கோயிலில் வெள்ளை , பெயின்று அடித்து,Artist காந்தியை வைத்து கோயிலின் பெயரான ஸ்ரீ கண்டேஷ்வரமுடைய நயினார் திருக்கோயில் என்ற பெயரையும் எழுதி வைத்து, ஒயரிங் பண்ணி மின் வசதி எல்லாம் செய்தோம். புஷ்பாபிசேகம், அன்னாபிசேகம் நடத்தினோம். பக்தர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்து ஒவ்வொருமாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தோம்.குப்பைக்கிடங்காய் மாறி இருந்த கிணறை ஒரே நாளில் தூர்வாங்கினோம் .கோவிக்குளத்து படித்துறைகளை சரியாக்கினோம்.ஒவ்வொரு வருடமும் ஊரில் நன்றாகப் படித்த ஏழை மாணவர்களுக்கு புக்,நோட்டு வாங்கிக்கொடுத்தோம்.......”

‘வணக்கம் எப்பம் வந்தீங்க........ஒரு குரல்’.குரல் வந்த திசையைப்பார்த்தேன்....குரலின் சொந்தக்காரர் அன்னதானத்தை நல்லமுறையில் நடத்திக்கொண்டிருக்கும் பேச்சினாதன்.

’கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் வந்தேன்’

“நீங்க தானே ‘ கடுக்கரை திருமுருக பக்தர்கள் சங்கத்தை’ ஆரம்பித்து இந்த கோயிலுக்கு எல்லாம் செய்தீர்கள். அப்பம் நாங்களெல்லாம் சின்னப் பிள்ளைகள். இப்பம் நாங்க தொடர்ந்து
இந்தக் கோயிலில் எல்லா முக்கிய சிறப்புகளை செய்து வருகிறோம்.....” கேட்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது...அன்னதானத்து அன்னத்தை அருந்துவதற்கு முன்னரே என் மனம் நிறைந்ததோடு வயறும் நிரம்பியது. எல்லாமே அவன் செயல் தானே. ஓய்வு பெற்ற எனக்கு இது போன்ற இதம்தரும் பேச்சுதானே சுவைதரும் அருமருந்து...

1 comment:

  1. nalla manam vazha, nangal aduthu kanthasasti(soorasamgaram) nadha ullom, bugjet Rs.4,00,000, ungalidam nalla uthaviyai eathirparkirom


    s.subramonian
    s/o s.sasthankuttypillai STHC
    kadukkarai
    9444936010

    ReplyDelete