Wednesday, June 29, 2011

மகனின் ஆசிரியரை மதித்த தந்தை

அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சினில் இன்று

ஒரு நாள் காலையில் (1979 அல்லது 1980) காலை கல்லூரிக்கு போகும் வழியில் ஒரு பழைய B.Sc Maths மாணவன் வேணுவைச் சந்தித்தேன்.seventh rank எடுத்த வேணு M.Sc Maths & Msc Physics படித்து முடித்திருப்பதாகவும் சென்னையில் Telephone Department ல் இருப்பதாகவும் நாகர்கோவிலில் புதிய Telephone Exchange ஒர்க்குக்கு வேண்டி வந்திருப்பதாகவும் சொன்னான். கொஞ்ச நெரம் பேசிவிட்டு நான் அவனிடம், ‘கடுக்கரையில் எங்க வீட்லெ போண் சரியில்ல.எனக்கு புதுசு ஒண்ணு வேணுமே’. அவன், ‘சார்,இண்ணைக்கு சாய்ந்த்ரம் ஒரு ஆள்ட்ட கொடுத்தனுப்புகேன்’

அன்று இரவு ஏழரை மணிக்கு நான் வீட்டின் உள்ளே இருந்தேன்.வெளி வராந்தாவில் இருந்த என் அப்பா , ”தங்கம்..... இங்க வா... உன்னைத்தேடி ஒரு பையன் வந்திருக்கான்”

வெளியே வந்து பார்த்தால் போணோடு அந்த மாணவன் வேணு. நான் அவனிடம், ‘வா..வா..நீ எதுக்கு கொண்டு வந்தே’..

சிரித்த முகத்துடன் வேணு சொன்னது. “என் உதவியாளரிடம் தான் சார் உங்க வீட்ல கொண்டு தரச்சொன்னேன். எங்க அப்பா யாருக்குடா-னு கேட்டார். எங்க கடுக்கரை சாருக்கு-ண்ணேன். ‘என்னடே நீ பெரிய ஆளாயிற்றியா.? ஒரு சாருண்ணு மரியாதை வேண்டாம்.நீயே பஸ்ஸில போய் கொண்டு கொடுத்துட்டு வா. அதான் சரி'...."

ஒரு மாணவனின் தந்தை என்னை மதித்தது பெரிய விசயமே அல்ல. வேணு பெரிய உயர் பதவியில் இருந்த பின்னும் தன் தந்தையின் வாக்கை மந்திரமாக மதித்ததைத் தான் பெரிதாக நினைத்தேன். இவனைப் பெற என்ன தவம் செய்தாரோ அவர்?

1 comment: