Saturday, June 25, 2011

ஏதோ ஒரு பாட்டு ஒவ்வொரு வயதிலும்

பிடித்த பாடல்கள்

ஒருவயதில் எனை உறங்க வைத்தது தாயின்தாலாட்டு
ஒன்பது வயதில் எனை உணர வைத்தது தந்தையாரின் பாட்டு
பதினெட்டில் எனைக் கிறங்க வைத்தது திரைப்பாட்டு
இருபத்தேழில் மயங்க வைத்தது தாரத்தின் பாட்டு
இருபத்தொன்பதில் இனிது எதென உணர்த்தியது மழலைப்பாட்டு
இப்பமென் அறுபதில் பிடித்தது பேரன் பாடும் தாத்......தாத்.......தாத்தாப்பாட்டு
எப்பவும் பிடிப்பது தினமும் வணங்கிப்பாடும் ’அம்மா’ என்ற நான் பாடும் பாட்டு.

No comments:

Post a Comment