Sunday, July 31, 2011

மறக்கலாமா நல்லவைகளைச் செய்த பெரியவர்களை

கடுக்கரை ஆ.அணஞ்சபெருமாள்,கடுக்கரை .

இவர் திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.
மணியங்கரம் ஒழிப்பு இயக்கத்தில் கலந்து பணியாற்றியுள்ளார்.

கடுக்கரை ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக்கவும் பக்கத்து ஊரான குறத்தியறை ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக ஆக்கியதுடன் பெரும் முயற்சி எடுத்து 1963-ல் அதை உயர் நிலைப்பள்ளியாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

நாகர்கோவிலில் பொன்னப்பநாடார் நகரில் நியூகவிமணி காலனி என்ற 51 மனைகள் கொண்ட குடியிருப்பை உருவாக்கியவர் மறைந்த அந்த பெரியவர். அவர் தம் பெயரால் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு வடக்காக செல்லும் அகலம் கூடிய அந்த சாலையின் பெயர் “அணஞ்சபெருமாள் சாலை”.

இவரது மூத்தபுலவர் திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ஓய்வு பெற்ற இந்துக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்.

No comments:

Post a Comment