Friday, July 15, 2011

கடுக்கரையில் பாழாய்ப்போன ஒரு நினைவு நிலையம்

ஒருநாள் காலை 11 மணி இருக்கும். என் பள்ளித் தோழனும் அடுத்தவீட்டுக்காரருமான கணபதி சர்வோதயசங்கத் தலைவர் சிவன்பிள்ளையுடன் என் வீட்டுக்கு வந்தார்.எனது அப்பா மறைந்து ஒரு சில மாதங்களே ஆன சமயம் அது. கடுக்கரையில் சர்வோதய சங்கத்துக்கு கட்டிடம் கட்ட 5 சென்று மனை தருவதாக வாக்களித்திருந்தேன் கணபதியிடம்.அதற்கு நன்றி சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டிருந்த என்னிடம் , “நீங்க இன்னும் கூடுதலாக தரவேண்டும். சோப் உற்பத்தி நிலையம் கட்ட உத்தேசித்துள்ளோம்”கூறினார். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.அவ்ர், “ உங்க அப்பா பெயரை நாங்க கட்டும் கட்டிடத்துக்கு வைக்கப்போகிறோம்.25 சென்ற் தாருங்கள்”.
நான் எந்தவித ம்றுப்பும் சொல்லாமல் , “சரி” என்று சொன்னேன்.

சொன்னபடியே பூதப்பாண்டிக்குப் போய் எழுதியும் கொடுத்து விட்டேன். அந்தப் பத்திரத்தை தலைவரிட்ம் கன்னியாகுமரியில் நடந்த சர்வோதய விழாவில் கொடுத்தது என் மகன் ஆறுமுகப்பெருமாள்.


Posted by Picasa


இன்று எந்த வித உபயோகமும் இல்லாமல் பாழடைந்த மண்டபமாக காட்சி அளிப்பதைக் கண்டு மனம் வெம்புகிறது.

No comments:

Post a Comment