Sunday, August 7, 2011

நாஞ்சில் நாட்டில் 1948-ல் இருந்த கல்வி முறை

பறக்கை ஊர் கு.காந்தி சென்னை போர்ட் ட்றஸ்டில் செயலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற,காந்திய நெறிப்படியே வாழ்ந்து வரும் 80 வயதினை கடந்த பெரியவர் . அவர் ஒரு கல்விமான். எப்பொழுதும் படிப்பதுதான் அவரது வேலை.இன்றய நாட்டு நடப்புகளையும் தினமும் பத்திரிகை படிப்பதன் மூலம் தெரிந்து வைத்திருப்பவர்.

சமச்சீர் கல்வி பற்றி நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருடைய பள்ளிக்கூட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.எனக்கு அவர் சொல்வதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

தெரிசனங்கோப்பு ஊரைச் சார்ந்த எனது ஆரம்பக் கல்லூரி ஆசிரியர் 80 வயதுக்கும் அதிகமான திரு. பகவதிப்பெருமாள் சார். அவர் வீட்டுக்குப் போய் இந்தக் கல்வி முறையைப் பற்றி அவரிடம் பேசினேன். இருவரும் சொன்னது ஏகதேசம் ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மூலம் அறிந்தவை தான்........

ஆரம்ப வகுப்புகள் அதாவது ப்ரைமரி ஸ்கூளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை (தமிழ் அல்லது மலையாளம்)தான் உண்டு.கல்விக் கட்டணம் எதுவும் கிடையாது. 4-ம் கிளாஸ் ஜெயித்தபின் அதன் பிறகு படிக்க வேண்டிய வகுப்பை தமிழ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5-ம் கிளாஸ் படிக்கணுமா அல்லது இங்க்ளீஸ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து preparatory class படிக்கணுமா என தீர்மானிக்கணும்.

தமிழ் பள்ளிக்கூடத்தில் 5 முதல் 9 வரை படிக்கலாம். கல்விக்கட்டணம் மாதம் தோறும் திருவிதாங்கூர் நாட்டு நாணயம் 14 சக்கரம் (அரை ரூபாய்).
5 முதல் 7 வரை Lower primary school .8 & 9-Higher school
5 முதல் 7 வரை தமிழ் ஆசிரியர்கள் புலவர்கள் பட்டம் பெற்றவர்கள்.
7-ம் வகுப்புக்கு லோயர் பப்ளிக் எக்சாமினேஷன் நடைபெறும். 9-ம் வகுப்புக்கு Higher Public Examination. 8 and 9 க்கு தமிழ் ஆசிரியர்கள் பண்டிதர்கள்.

ஆங்கில பள்ளிகூடத்தில் Preparatory class ,Ist form to IIIrd form வரை மாதம்தோறும் இரண்டே கால் ருபாய் ஃபீஸ் கொடுத்து Middle school-லும் IVth,Vth,VIth form வரை High school-லும் படிக்கலாம். IVth முதல் VIth வரை எல்லாப்பாடங்களும் English medium. மாதம் Fees 5/-. பெண்களுக்கு மூணே முக்கால் ருபாய்தான் கட்டணம்.

VIth form மாணவர்களுக்கு Selaection Examination உண்டு. அவர்கள் அதில் ஜெயித்தால் தான் ஆண்டு இறுதியில்தேர்வு எழுத முடியும். அதன் பிறகு ENGLISH SCHOOL LEAVING CERTICATE ஒன்று புத்தக வடிவில் கொடுப்பார்கள்.E.S.L.C book-ல் IVth form mark & Vth form mark, School Average, State Average இருக்கும் .VIth form mark-டன் State Average mark-ம் இருக்கும்.மாணவனின் அங்க அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும்.ஈ.எஸ்.எல்.சி தேறியவுடன் கல்லூரியில் சேர்ந்து Intermediate,two year B.A course,two year M.A course படிக்கலாம்

தமிழ் பள்ளியில் படித்தவர்கள் 9-ம் வகுப்பு தேறியவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டுமானால் தனியாக தமிழ் அறிஞர்கள் மூலம் கல்வி கற்று மதுரை தமிழ் சங்கம் நடத்தும் தேர்வு எழுதி புலவர், பண்டிதர் பட்டம் பெறலாம். இவர்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியலாம். பி.ஓ.எல் தமிழ்நாட்டில் மதுரையிலோ, அண்ணாமலை பல்கலைகழகத்திலோ
படிக்கலாம். பின் அவர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரியலாம்.

தமிழ் பள்ளியில் படித்தவர்கள் ஆங்கிலப் பள்ளியில் படிக்க விரும்பினால் 9-ம் வகுப்பு தேறியவர்கள் ஆங்கிலப் பள்ளியில் IVth form-ல் சேர்ந்து தொடர்ந்து படிக்க வேண்டும்.
1948 வரைதான் இந்தக் கல்விதொடர்ந்ததாக சொன்னார்கள்.ஆனாலும் சரியா? தெரியவில்லை,

அந்த சமயத்தில் பள்ளிக்கட்டணம் கட்ட முடியாமல் பலர் பள்ளிக்கு செல்வதில்லை. யாருக்கும் ஜாதி அடிப்படையிலோ, வேறு எந்த வகையிலும் Fees Concession கிடையாது.தமிழ் பள்ளியில் படித்தவர்கள் தமிழை அதிகம் படித்தார்கள். மிகவும் கடினமான sylubbus.

தென் திருவிதாங்கூரில் முதல் ஆங்கிலப் பள்ளி RINGLE TAUBE Hr.Sec. School, Mylaudy.
It had been established in the year 1809.

1 comment:

  1. மிக முக்கியமான மிக அருமையான தரவுகள். இவை எல்லாம் பதிவு செய்யப்பட வேண்டும் நன்றிகள் பல.

    ReplyDelete