Monday, August 1, 2011

தினமலர் நிறுவனர் வாழ்க்கை வரலற்று நூலான கடல் தாமரையில் நமது ஊர்ப் பெரியவர்.

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை

கடல் தாமரை வரிகள்

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர்.

அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர்.

நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணியகரம்’ என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி, மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது. மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர்.

கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு [ 26-1-1988] என்ற நூலில் உள்ள வரிகள்

திருவிதாங்கூர் நில உடமை சம்பந்தமாகவும் அதன் தன்மைகள் சம்பந்தமாகவும் ஆதாரபூர்வமாக கேள்வி கேட்டு PhD பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்தவர்கள் இவரைக் கண்டு பல தகவல்களைப் பெற்று பலனடைந்தார்கள்

இவர் கம்யூனிஸ்டு கட்சியில் பற்றுடையவராக , விவசாயிகளின் பிரச்சனையில் ஈடுபட்டு விவசாய சங்கம் காரியதரிசியாக பொறுப்பேற்று,அச்சங்கத்தில் தீவிரமாக செயல் பட்டார்

கடுக்கரையில் K.B. பெருமாள் பிள்ளை அவர்களை தலவராகக் கொண்டு கமிற்றியை ஆரம்பித்து அதன் செயலாளராகயிருந்து அதன் மூலம் விவசாயிகளின் மகாநாட்டைக் கூட்டினார். மணியங்கரம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ரூ.10லட்சம் வரை வரிப்பழு குறைந்தது.

No comments:

Post a Comment