Friday, August 26, 2011

கடுக்கரை பெருமாள் தேவர்

கடுக்கரையில் பல் வேறு இனத்தவர்கள் இருந்தாலும் மதம் என்னவோ ஒரே மதம், இந்து மதம் தான்.
எல்லா விழாக்களிலும் குடும்ப திருமண சடங்குகளிலும் எல்லோருமே கலந்து கொண்டு ஒரே
குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போது காடுகளுக்கு சென்று வேட்டையாடும் பழக்கம் உண்டு.ஒரு சிலரிடம் நாட்டுத்துப்பாக்கி உண்டு. அதர்க்கான லைசன்ஸ் எல்லாம் அவர்களிடம் உண்டு.தேவர் ஒருவரும் துப்பாக்கி வைத்திருந்தார். அவர் தினமும் காட்டுக்கு போவார். சானல் பக்கம் மாடு மேயும்போது புலிகள் அவற்றைத் தாக்கி கொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் அவ்வப்போது நடக்கும்.

ஒருதடவை பெருமாள்த்தேவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு புலி இவரைதாக்க முற்பட்டபோது தன் துப்பாக்கியால் தன்னைக் காப்பாற்ற புலியினைச் சுட்டார். ஆச்சரியம்.... புலி செத்து விட்டது. உடனே ஊருக்கு கொண்டு வந்து ஒரு வாகனம் போல் அதனை ஊர் தெரு முழுவதும் சுற்றினார்கள்.எல்லோரும் பணம் பரிசாக கொடுத்தார்கள்.

புலி நகம் ,தோல் எல்லாம் விரும்பிய மக்கள் வாங்கிச் சென்றனர்.

நான் அவரைத் தனியாக அவர் வீட்டில் போய் பார்த்து ருபாய் கொடுத்தேன்.

என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டுபோய் எனக்கு அழகான புலி நகம் இரண்டு தந்தார். என்ன செய்வது...? எனக்கு வேண்டாமே...!அவர், “ நீ இதை அப்பாட்ட கொண்டு கொடு”.

எனக்கு தேவரை மிகவும் புடிக்கும்.அவருக்கும் என்னைப் பிடிக்கும்....அவர் மிகவும் அன்பாகத்தந்தார்.

நான் அதனை என் அப்பாட்ட கொண்டு கொடுத்தேன்....அப்பா அதனை வாங்கி வைத்துக் கொண்டார்.

அய்யோ...! அவருக்கு ருபாய் கொடுக்கணுமே..மீண்டும் அவர் வீட்டுக்குப் போனேன்.

நான் கொடுத்ததை வாங்கவில்லை.அவர், “அப்பமே ருபாய் தந்தேல்லா...அதுவே கூடுதல் தான் .நானும் என் பிள்ளையும் பட்டினி கிடக்காமல் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே அப்பாவும் உங்க குடும்பம்தான். நான் உனக்கு தருவதற்காகத்தான் அதைத் தனியாக எடுத்து வைத்தேன்.ருபாய் வேண்டாம்போ....”

‘வறுமையிலும் கொடுப்பது’...ஒரு பெரிய விசயம். இருப்பவன் கொடுப்பது அதிசயம் இல்லை....தேவர் தந்ததுதான் அதுவும் வைத்திருந்து கேட்காமலே தந்ததை என்ன வார்த்தைகளால் பாராட்டுவது....அந்த நகங்கள் என் நெஞ்சினை அதிக வருடங்கள் வருடிக் கொண்டிருந்தன.....அதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தேவர் என் நினவில் வந்து போகிறார்.

No comments:

Post a Comment