Friday, August 26, 2011

கடுக்கரை சுடலையாண்டி வைத்தியர்

கடுக்கரையில் மருத்துவ வசதி இல்லாத நாட்கள்.1950-65 -ல் பெரிய மருத்துவ வசதி வேண்டுமானால் நாகர்கோவிலுக்கோ அல்லது பூதப்பாண்டிக்கோ செல்ல வேண்டும்.

நாடிபிடித்து பார்த்து அவசியப் பட்டால் நாகர்கோயிலுக்கு போய் டாக்டரிடம் பாருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கும் ஒரு வைத்தியர் கடுக்கரை ஊருக்கே வைத்தியம் பார்த்தவர் உண்டு.அவர்தான் சுடலையாண்டி வைத்தியர்.அவருக்கு ஒரே மகன். பெயர் முருகன்.

காய்ச்சல் வந்தால் அவர் மருந்து தருவார்.விளையாடும்போது கீழெ விழுந்து காயம் பட்டவர்களுக்கு தைக்க வேண்டியிருந்தால் தைக்கவும் செய்து குணப்படுத்திவிடுவார்.

ஊருக்குள் அவருக்கு மதிப்பு கூடுதல்.அன்பாகப் பேசுவதும் ,மிகக் கோபப்பட்டு பேசுவதும் அடிக்கடி அவருடைய சிறிய மருத்துவமனைக்கு அருகில் போனால் கேட்கலாம்.மலைக்கு போய் மரம் வெட்டும் தொழிலாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள்,கூலிவேலை பார்ப்பவர்கள்,எல்லோருக்குமே மிகவும் குறைந்த கட்டணம் தான்.

நான் எனக்கு சுகமில்லை யென்றால் முதல் மருத்துவம் அவரிடம்தான்.என் பையன்களுக்கும் அவர்தான்.

பெரிய டாக்டர்கள் இன்செக்ஸன் மருந்து தந்தால் அவரிடம் கொடுத்து இன்செக்ஸன் போடுவது உண்டு.

அவரது மகனை டிப்லொமா படிக்க வைத்தார்......

அவர் மறைந்த பின்னும் அவரை அடிக்கடி நினைத்த்ப் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment