Friday, September 30, 2011

புத்தேரி தினேஷின் மகன் பகவத்தின் பிறந்த நாள்

 
Posted by Picasa


என் மகன் தினேஷ் ,“ புத்தேரி தினேஷ் அவரது மகனின் பிறந்த நாள்-க்கு உங்களையும் கூட்டிற்று வரச்சொன்னார்.இங்கு கோஹினூர் ஹோட்டலில் வியாழக் கிழமை சாயந்திரம் 7 மணிக்கு போணும்”.

என்னுடைய அனுபவத்தில் இது ஒரு புது அனுபவம். அதுவும் முதல் அனுபவம். மறக்க முடியாத அனுபவம். விழா நடந்த இடம் வெளிநாடாக இருக்கலாம்.உள்ளே நுழைந்ததும் பல தெரிந்த முகஙகள்,கடுக்கரை,தோவாளை,புத்தேரி,சீதப்பால்,பறக்கை .சுசீந்திரம் ஊர்களில் இருந்த அனைவரையும் கண்டேன்....நாகர்கோவிலில் இருந்தது போன்ற உணர்வு தான் இருந்தது.

எங்கள் பக்கத்தில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தார்.என்னிடம்,“ நல்லா சாப்பிடுங்க...நாம் தான் சாப்பிடணும்...அப்பம்தான் சார் மிச்சம் ஒன்ணும் இருக்காது....”

பெப்பர் சிக்கன் திங்கணுமே..... நல்லா இருந்தது...நான் போய் எடுத்து வந்தேன்...

அழகான அரங்கத்தில் குமரி மாவட்டமே சங்கமமாய் கூடிய அந்த நாளில் நான் ஒருவனே 65 வயது இளைஞன்.

Face book -ல் பார்த்து ராமனாதன் சோணாசலம் குவைத்தில் இருப்பதாக அறிந்து கொண்டேன்.அவனை பார்க்கணும் என்று என் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.ஆனால் அது சூழ்நிலை காரணமாக பார்க்க முடியவில்லை.

நான் அரங்கில் நுழைந்த கொஞ்ச நேரத்தில் ஒருவர் என்னருகே வந்து வணக்கம் சொன்னார்.

நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.அவர் தான் ராமனாதன்.அவரது ஊரும் எனது ஊர் என்பதால் நாங்கள் இருவரும் அதிக நேரம் பெசிக் கொண்டிருந்தோம்.அவருடைய அப்பா,தாத்தா......பழைய ஆட்கள் பற்றியே பேசி மகிழ்ந்தோம்.

நேரம் ஆனதால் எல்லோரும் விடை பெற்று சென்று கொண்டிருந்தார்கள் .

புத்தேரி மாதேவன்பிள்ளையிடம் ,“இங்கே வந்திருப்பவர்களில் பாதிக்கும் மேல் உங்களால் தான்....எனக்குத் தெரிந்து நம்ம ஒசரவிளையைச் சேர்ந்த O.P.K பிள்ளை தான் நிறைய பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கார்.அவருக்கு அடுத்தது நீங்கள் தான்...”.

பிள்ளையிடம் விடை பெற்று,தினேஷிடமும் விடை பெற்று வெளியே வந்தால் , ஓஓ..ஓ நாம் இவ்வளவு நேரமும் இருந்தது குவைத்திலா....

தோவாளை மகாதேவனது காரில் வீடு வந்து சேர்ந்தோம்.மிகவும் சந்தோசமாய் இருந்தது...

Thursday, September 29, 2011

என் மனைவி சொன்னாள்.சொன்னதைச் செய்தேன்

கணிதத்துறையின் தலைவர் ஆவதற்குமுன் நான் நாகர்கோவில் செண்ட்ரல் றோட்டறி சங்கத்தில் தலைவர் பதவியைத் தவிர சில முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றி இருக்கிறேன்.என்னை தலைவராக்க எல்லோரும் விரும்பிய சமயத்தில் தலைவராக விரும்பாத ஒரே காரணத்தினால் சங்கத்தில் இருந்து விலகி விட்டேன். நான் சங்கத்தின் பல நண்பர்களிடம் (மறைந்த P.N.S முதலாளி மிக முக்கியமானவர்)
வேண்டிக் கேட்கும்போது கல்லூரியில் படித்த பல மாணவர்களுக்கு அவர்கள் பண உதவி செய்தனர்.கடுக்கரை ஊர் பையன்களுக்கும் School books கொடுத்தார் P.N.S அவர்கள்

நான்,பேராசிரியர்கள் முருகன், ராஜையன் மூவரும் மட்டுமே சேர்ந்து தேவையான சமயத்தில் சில ஏழை மாணவர்களுக்கு பண உதவி செய்து வந்தோம்.யாரிடமும் இதைப் பற்றி அதிகம் சொல்வதில்லை.எங்களுடன் ஒரு சில ஆசிரிய நண்பர்களைச் சேர்க்க நினைத்து அது முடியாமல் போனது மட்டுமல்ல...கிண்டல் செய்ததால் சொல்வதில்லை.

அந்த சமயத்தில் எங்க வீட்டுக்கு பால் போடும் பையன் என்னிடம் -----த்தில் இருந்து ஒரு பையன் ஃப்ஸ்ட் ஈயர் மேத்ஸ் படிக்கிறான் ---ணு பேரு...தெரியுமா சார் எனக் கேட்டான்.
அவனது நிலமை பற்றியும் கூறினான்.என் மனதினில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

செருப்பு கூட காலில் போடாமல் பேண்ட் அணிந்து வந்த கதையையும் அடுத்தநாள் கல்லூரிக்குப் போனதும் அறிந்தேன்.

என் மனைவி என்னிடம்,“ நீங்கள் அந்த சங்கத்தில் இருந்த போது எவ்வளவு பணம் செலவழித்திருப்பீர்கள்....இந்த பையனுக்கும் என்னமாம் ஹெல்ப் பன்ணுங்களேன்.”

------ கோயிலுக்குப் போன ஒரு நாள்.....சுற்றுப்பிரகாரத்தை சுற்றி வரும்போது என் மனைவியிடம், “ அந்தப் பையனின் அண்ணன் இந்தக் கோயிலில் தான் வேலை பார்க்கிறான்.இண்ணைக்கு இந்தக் கோயிலில் வைத்து அவனை நாம் கண்டால் மூன்று வருட படித்த செலவை நாமே எடுத்துக்கலாம்” என நான் சொன்னேன்.

நேரம்தான் ஒடிக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பையனைக் காணவில்லை. சரி...நாம் போவோம் என இருந்த இடத்தை விட்டு எழுந்தேன். கொஞ்சம் இரிங்கோ...வெய்ட் பண்ணுவோம் என மனைவி கூற போகாமல் நின்று கொண்டிருந்தேன்.

என் முதுகில் ஒரு ஆள் தட்டி பொன்னப்பா எப்படி இருக்கே என்ற சப்தம் கேட்டு நான் திரும்பினேன்.அவன் என்னுடன் குறத்தியறையில் படித்தவன்.பகவதீஸ்வரன் அவன்.பல ஆண்டுகளுக்கு அப்புறம் அன்று தான் அவனை பார்க்கிறேன்.

--- த் தெரியுமா ? நான் கேட்டேன்.

விசயத்தைச் சொன்னேன். உடனே அவன் போய் அந்தப் பையனை அழைத்து வந்தான்.

அவனைக் கண்டதும் என்னைத் தெரியுமா ? என கேட்க அவன் தெரியாது எனச் சொன்னான்.
“ஒன் அன்ணன பாக்கணுமே. எங்கெ இருக்கார்”

அண்ணனைப் பார்த்தோம்.அவரிடம் கவலைப்பட வேண்டாம்.மூன்று வருடமும் படித்தச் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தோம்.அதன்படியே அவன் படித்து பாஸாகி போனான்.

2001 ஜுனில் H.O.D ஆனதும் ஒரு ஃப்ண்ட் உருவாக்கினேன். கணிதத் துறை ஆசிரியர்கள் மாதம் 50/-ருபாய் போட்டு அந்தப் பணத்தை பேராசிரியர்கள் சுந்தரேசன்,சுவாமினாதன் பொறுப்பில் தனலட்சுமி வங்கியில் deposit பண்ணினோம்.முருகன் சார் மாதம் 100/- தந்தார். வசதியில்லா பல மாணவர்கள் அதனால் பயன்பெற்றனர்.

எனது மகள் பெயரில் தட்சணாமூர்த்தி சாமி சன்னதியில் அர்ச்சனை பண்ணுவதற்காக ------ கோயிலுக்கு ஒரு வியாழக்கிழமை போனோம்.எங்கேயோ போய்க் கொண்டிருந்த ஒரு T.V.S 50 எங்கள் அருகாமையில் வந்து நின்றது. பார்த்தால் அந்தப் பையன் ---.
அவரே வந்து மிகவும் திருப்தியாக நீண்டநேரம் அர்ச்சனை பண்ணி ப்ரசாதம் தந்தார்.

நான் ,’ படிக்கல்லியா மேற்கொண்டு’ எனக் கேட்டேன். “Forward-ஆக இருப்பதால் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை....வீட்டுச் சூழ்நிலையால் வெளியேயும் போகமுடியல்ல....” என்று சொல்லிவிட்டு எனக்கு வேறொரு கோயிலுக்குப் போணும்.உங்கள பாத்ததினால தான் வந்தேன் எனக்கூறி விட்டு போய் விட்டார்.

2004-ல் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த போது ஒருவர் என் பின்னாலேயே வந்து சார் என்னத் தெரியல்லையா....நான் தான் -------.இப்ப ஒரு கல்லூரியில் Physics lecturer ஆக இருக்கிறேன். நீங்களும் ராஜையன் சாரும் தான் சார் படிக்கும்போது உதவி செய்தீங்க......ராஜையன் சார நான் கேட்டதாச் சொல்லுங்க...
நின்று பேசவும் முடியவில்லை. சரிப்பா....ரெம்ப சந்தோசம் எனச் சொல்லிவிட்டு நான் ரயிலில் ஏறினேன்.

2004-ல் M.S.University Convocation function-ல் ஆறுமுகப்பெருமாள் டாக்டர் பட்டம் வாங்குவதை முன்னிட்டு நான் ராமகிருஷ்ணனுடன் போனேன்.பட்டம் அளிப்பு விழா முடிந்தது.
ஒருவர் என் அருகே வந்தார்.

“சார்...என்னத் தெரியல்லியா...நாந்தான் சார்-------.நாரூல்ல railwar station-ல வச்சு பாத்தோம்லா.....”

நான் அவனுக்கு கை கொடுத்து வாழ்த்தும் கூறினேன்.அவன் மகிழ்ந்ததை என்னால் விவரிக்க முடியவில்லை

“சார்....ராஜையன் சார்ட்ட இதச் சொல்லணும் சார்...அவர் இல்லாட்டா நான் இல்ல...”

முடிக்குமுன் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சர்ச்சை.

“இதையெல்லாம் எழுதினால் செய்ததை சொல்லிக் காட்டுவது போல் இருக்குமே.அந்தப் பையன்களே படிக்க நேர்ந்தால் உங்களைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார்களா” இது அவள்.

நான் சொன்னேன், “ நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். நான் Blog எழுத ஆரம்பிக்கும்போதே இதை எழுத நினைத்துக் கொண்டிருந்தேன்.என் மனசிலும் தம்பட்டம் அடிக்கக்கூடாதே என்ற எண்ணம் வந்து எழுதவில்லை.ஆனால் இதை படித்தவர்களுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நல்லதுதானே...”

போற்றுபவர்கள் போற்றட்டும்....அதனால் நான் எழுதினேன். எழுதி முடித்தபின்னும் என் மனைவியின் பேச்சு அச்சுறித்தியதால் பெயர், ஊர்,சில நெருடலான தகவலைத் தவிர்த்து பதிவு செய்திருக்கேன்...

நல்லதை யார் சொன்னாலும் கேட்க வேண்டும்லா.

என் மனைவி சொன்னாள்.சொன்னதைச் செய்தேன்

மேல்மாடிகளை இணைக்கும் நடைபாதை

 

நானும் மகாதேவனும் 3 மணிக்கு மங்காஃபில் இருந்து புறப்பட்டு சபாத்துக்குப் போனோம்.அவரது இந்திய நண்பர் அலுவலக வேலையாக குவைத்துக்கு வந்தார்.அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.பெங்களூரில் வேலை பார்ப்பவர்.அவர் படித்தது திருச்சி N.I.T -ல். நான் நாகர்கோவில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் கன்னியாகுமரிக்கு அவரது அப்பாவுடன் வந்ததைக் கூறினார். அவரது வயது 24. Civil HOD Dr.C,Natarajan-தெரியுமா எனக் கேட்க தெரியும் என்றார்.

நாங்கள் மூவரும் சால்மியாவில் உள்ள சில இடங்களுக்குப் போனோம்.இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி. Banana leaf Restaurant-ஐ காட்டினார். நம் ஊர் உளுந்த வடை,மிளகு பஜ்ஜி,சமோசா,பக்கடா எல்லாம் வாங்கி சாப்பிட்டோம்.மிகவும் ருசியாக இருந்தது.அவர் எங்களிடம் இருந்து விடைபெற்று அவரது ரூமுக்குப் போனார்.

நாங்கள் இருவரும் CITY CENTRE-க்கு சும்மா நேரம் போவதுக்கு வேண்டி போனோம்.

மரீனா மால்-க்குப் போனோம்.எல்லாப் பொருள்களின் விலயும் நம்மால் கற்பனையில் கூட வாஙக முடியாத எட்டாத விலை ...ஒரு வாச்சின் விலை 1000 K.D (178000/-)

நான் கண்டு அதிசயித்தது விலையைப் பற்றியே அல்ல.ஒரு வித்தியசமான நடைபாதைதான் அது.
மரீனா மால் சாலைகளின் இரண்டு பக்கத்திலும் அமைந்திருக்கின்றன .ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் ஏறி ஒரு அழகான நீண்ட நடைபாதையில் நடந்து சென்றால் அடுத்தபக்கத்தில் உள்ள கடைக்குப் போகலாம்.அந்த நடைபாதையில் இரண்டு இடத்தில் நடக்காமல் நின்றபடியே செல்ல Escalator இருகின்றன.நடைபாதை ஒரு விமானத்தினுள் இருப்பது போன்ற உணர்வு வரும்படியான அமைப்பு.

பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ,சாகர் ரெஸ்டாரண்டில் போய் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 
Posted by Picasa

Wednesday, September 28, 2011

நானும் அ,ஆ... சொல்லிக் கொடுத்தேன்.

நவராத்திரி இன்று ஆரம்பம்....

கொலு வைப்பது என்பது எங்க வீட்டில் அதாவது எனது சின்னவயதில் கிடையாது. 9-ம் நாள் பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தையும் மற்றும் விநாயகர் படம்,லட்சுமி படத்தை எடுத்து ஈரத்துணியால் துடைத்து எங்க அப்பா தன் பூஜை அறையில் வைப்பார்.மாலையில்
நாங்கள் புஸ்தகத்தை சரஸ்வதி படத்தின் முன் வைப்போம்.அன்று பொரியும் கடலையும் உண்டு.கடுக்கரையில் சில வீடுகளில் கொலு வைப்பதும் உண்டு. அதிசயமாக அந்த வீடுகளுக்கு போய் கொலு பார்ப்போம். அங்கு கிடைக்கும் கடலைக்கு ருசி கூடுதல் போன்ற உணர்வு இருக்கும்.

என் நணபர்கள் என்னிடம் ,“ உங்க வீட்ல ஏன் கொலு வைக்கல” எனக் கேட்கும்போது மனதில் வருத்தமும் கோபமும் வரும்.

கடலை இருக்கு எடுத்துட்டுப் போ.அவனுக்கு கொடு இவனுக்கு கொடு என எங்க அம்மா சொன்னதைக் கேட்டு இண்ணைக்கு எவம்மா கடல கொடுத்தா வாங்குவான் எனச் சொல்லி கோபத்தைக் காட்டுவேன்.

ஏம்மா.. நம்மவீட்ல கொலுவே வைக்கல.. நான் கேட்டால் என்னிடம் “அப்பாட்ட போய் கேழு” என்பாள். அப்பாவின் முன்னே நின்று பேசவே பயப்படும் நான் போய் இதைப் போய் கேட்பது என்பது நடக்காத காரியம்.

பத்தாம் நாளில் 5 வயதான பிள்ளைகளுக்கெல்லாம் ஏடு தொடங்குவார்கள்.அப்பொழுது ஆசிரியர்களின் வீட்டிற்குப்போய் அ,ஆ,இ,ஈ......என ஏடு தொடங்குவார்கள்.அரிசியில் பிள்ளையின் கையினைப் பிடித்து எழுதுவார்கள்.சிலேட்டிலும் எழுதுவார்கள்.எனக்கு ஏடு தொடங்கியது ஆசிரியர் அல்ல...ஊர் முதலடியாய் இருந்த வடக்குத்தெரு ஆறுமுகம்பிள்ளை. பனை ஓலையில் எழுத்தாணியால் அ முதல் ஃ வரையிலும் 1 முதல் 10 வரையும் எழுதி எழுதிய எழுத்துக்கள் தெளிவாய் தெரிய மஞ்சள் தடவி கையில் தந்தார்.அது தான் ஏடு.

என் மகனுக்கு ஏடு தொடங்கியவர் வீரமணி சார். தெரிசனம்கோப்பில் அவன் தத்தா வீட்டில் வைத்து சிலேட்டில் எழுதித் தொடங்கினார்.

என் பையன்கள் கொலுவைக்க ஆசைப்பட்டு என்னை பொம்மை வாங்கி வர நச்சரித்தார்கள்..
தாத்தாக்கு இதெல்லாம் புடிக்காது. தாத்தாட்ட கேழு சம்மதிச்சா நான் வாங்கீட்டு வாறேன்.
கேட்டது தன் பெயரன் அல்லவா. பொம்மை வாங்க பணமும் கொடுத்தார்.கொலு முதன் முதலாக வந்தது என் பிள்ளைகளல் தான்.

ஒருதடவை என் தம்பி செல்லத்தின் மகளுக்கு கீழத்தெரு வீட்டில் நடந்த ஏடு தொடங்கும் நிகழ்ச்சிக்கு நாங்கள் போயிருந்தோம்.ஏடு தொடங்க வரவேண்டிய ஆசிரியர் வரவில்லை.குறிப்பிட்ட நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. ஆசிரியர் வரவே இல்லை. என்ன செய்யலாம்.....எனது சின்னப்பா கணேசபிள்ளை...ஒரு வாத்தியார்தானே ஏடு தொடங்கணும்...தங்கமும் வாத்தியார்தானே...அவன இங்கவந்து இருக்கச் சொல்லு....
பெரி்யவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை. அ,ஆ ...ஒழுங்கா வருமா...போய் இருந்தேன்.பிள்ளை அவள் பெயரும் தங்கம் தான் ...
ஏடு தொடங்கி முடிந்ததும் குருதட்சணையாக தட்டத்தில் ருபாய் போட்டார்கள்...ஒரு புதுமையான அனுபவம்....பணம் எதனையும் எடுக்காமல் எழுந்த என்னிடம் என் சின்னப்பாவே எடுத்து என்னிடம் தந்து மிக மகிழ்ச்சியாய் , தஙகத்துக்கு தங்கம் ஏடு தொடங்கியது ரொம்ப சந்தோஷம் எனக் கூறியது இன்றும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

என் மருமகள் புஸ்கலை மிகவும் விரும்பி நான் தான் ஏடு தொடங்கவேண்டும் என விரும்பியதால் பேரன் அறிதிக்கும்,பேத்தி பூஜாவுக்கும் நான் தான் ஏடு தொடங்கினேன்.

குவைத்தில் இருந்து கொண்டு இதனை எழுதும் போது என் நினவுகள் என் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்கிறது.

Monday, September 26, 2011

சில விவரங்கள்..நான் தெரிந்து கொண்டவை

நான் குவைத்துக்கு வந்து பல இடங்களுக்கும் காரில் போகும் போது சாலைகளில் பச்சைப் பசேல் என்று சின்னச் செடிகளும் மரங்களும் நிற்பதைக் கண்டு என்னுடன் வந்தவர்களிடம் என் ஆச்சரியத்தைக் கூறினேன்.

குவைத்தின் climate-க்கு ஏற்ற செடி அவைகள். எல்லாமே ஒரே செடிதான்.வெட்டி விட்டால் அவை குற்றுச்செடி...வெட்டாமல் விட்டால் மரம். மிகக்கொஞ்சம் நீர் போரும்.வெயிலிலும் தாக்குப் பிடிக்கும்.அதிக நேரம் அந்த மரத்தின் பக்கம் மனிதர்கள் நிற்பது நல்லதல்ல என்றும் கூறுகிறார்கள்

நான் மேலும் குவைத்தைப் பற்றி அறிய விரும்பினேன். நண்பர் மகாதேவன் அனுப்பிய மெயிலில் இருந்த தகவல் இதனை எழுத மிகவும் உதவியாய் இருந்தது......

குவைத் ஒரு சிறிய நாடு. நாட்டின் தலைநகரத்தின் பெயர் KUWAIT CITY. மத்திய கிழக்கு நாடுகளில் மிக வசதியான பணக்கார நாடு. மொத்த நிலப்பரப்பு 7500 சதுர மைல் (19424 சதுர கீமீ)

குவைத்தின் வடக்கு மேற்குப் பக்கம் ஈராக்கு என்ற ஒரு அரபு நாடும், தெற்குப் பக்கம்
Soudi Arabia நாடும் இருக்கிறது.கிழக்குப் பக்கம் Arabian gulf.

Failaka,Bubiyan,Werba....எனச் சின்னத் தீவுகளும் இந்த நாட்டில் உள்ளன. ஆறுகளோ,நதிகளோ
இங்கு இல்லை.

மொத்த ஜனத்தொகை-----1.2 million. இவர்களில் 6 லட்சம் பேர் இந்நாட்டினர்.இவர்களை Kuwaithi எனக் கூறுகிறார்கள்.

குவைத்நாட்டின் HEAD அமீர் என அழைக்கப் படுகிறார். இவர் அரசியல்,நிர்வாகம் நடத்த ஒரு பிரதான மந்திரியை நியமிக்கிறார்......

இங்கு அரபிக் மொழிதான் தேசியமொழி. English is also an official language. இந்தமொழியை வலமிருந்து இடமாக (right to left) எழுதுகிறார்கள்....வாசிக்கிறார்கள். நாம் இடமிருந்து வலமாக எழுதுகிறோமல்லவா.

இங்கு இந்தி் மொழி அதிகம் பேசப்படுகிறது. Tagalog என்ற ஒரு மொழியும் பேசப்படுகிறது..

நிர்வாக வசதிக்காக நாட்டை 5 பகுதிகளாக அதாவது 5 GOVERNATES எனப் பிரித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கவர்னேட்டுக்கும் தலைநகரம் உண்டு.They are KUWAIT CITY,HAWALI,Faewaniya,Jahra,Ahmedi.

இது எப்படி இருந்தாலும் நமக்கு பழக்கத்தில் மிகவும் தெரி்ந்த பகுதிகள் மூன்றுதான்.

குவைத் சிற்றியும் அதன் அண்மையில் இருக்கும் புற நகர் பகுதி 6th ring road-ன் தெற்குப் பக்கமா இருக்கும் இடங்கள்.....,Messilah to தெற்கு நோக்கிச் செல்லும் Ahmedi,மேற்குப் பகுதியான Jahra,....

ஜூலை ,ஆகஸ்டில் வெயில் மிகக் கூடுதலாக இருக்கும்....55 டிகிரிச் சூடு. குளிர் காலத்தில் குளிர் கூடுதலா இருக்கும்.....0 டிகிரி குளிர்.

பெட்றோல் விலை 9 ருபா.தண்ணீர் விலையும் அதிகமில்லை.கடல்நீரை குடிநீராக்கும் ப்ளாண்ட் தான் குவைத் முழுவதும் தண்ணீர் தருகிறது.

எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 8 முக்கிய தொழிற்சாலைகள் உள்ளன.

petroleum refinery,Chemicals,Liquified natural gas,HeavyIndustry (Steelpipe and truck asembly,Ship building,Cement,Food processing,Light Industry (building material,furnitures,paper)

இவை எல்லாமே நெட் தந்த தகவல்.எப்போ பதிவு செய்யப்பட்டது எனத் தெரியவில்லை.எதனையாவது மாற்ற வேண்டுமானால் எனக்கு தெரிவித்தால் திருத்தலாம்...

நான் காரில் முன்சீட்டில் அமர்ந்ததும் பெல்ட்டை இப்பொழுதெல்லாம் நானாகவே போட்டுருவேன்.போடாவிட்டால் போலீஸ் பிடித்து விடுவாரே.மறக்காமல் பாஸ்போர்ட்டையும் விசாவையும் எடுத்துருவேன்.Traffic police யாரையும் எங்கேயும் தெருவில் நிற்பதை பார்க்கவில்லை.மூன்று வண்ண விளக்கு பளிச்..பளிச் என எரிந்து கொண்டிருக்கும் போலீஸ் காரை பல இடங்களில் பார்த்தேன்....சட்டப் படியே மிகவும் ஒழுங்காக எல்லாம் நடக்கின்றன.காரின் வேகம் குறிப்பிட்ட வேகத்தை விட தாண்டிப்போனால் சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கேமரா காரின் நம்பரை பதிவு செய்து விடும்....கார் ஓணர் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்...

இதுவே எனக்கு இப்படியும் சட்டத்தை மதிக்கிறார்களே மக்கள் என்பதும் நம்ம ஊரில் இந்த நிலை இல்லாததால் வியப்பு தானே.

Saturday, September 24, 2011

குவைத்தில் சச்சினுடன் ஒரு நாள்

24 செப்டெம்பர் 2011 காலையில் சச்சினுடன் காரில் குவைத்தில் உள்ள AVENUES MALL-க்குப் போனோம்.மத்திய கிழக்கு நாடுகளில் இதுதான் பெரியது.அதில் பெரிய கடைகள் பல இருப்பதாக தெரிய வந்தது. நாங்கள் போனது IKEA SHOW ROOM. இது போல் பல உள்ளன. ஒவ்வொரு க்ஷோ ரூமுக்கும் தனிதனியாக கார் பார்க்கிங் உள்ளது. இதற்கு மாத்திரம் 500-க்கும் அதிகமான கார்கள் நிறுத்தலாம்.பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பார்க்கிங்க் ப்ளேஷ்-ல் கொண்டு காரை விட்டதும் சிவப்பு விழக்கு எரியும். கார்கள் அதிகம் ஆனதும் எங்கு இடம் காலியாய் இருக்கிறது என்பது நுளைவாசலில் கார் வரும்போதே தெரிந்து கொள்ளலாம்.

மணி 9.30.இன்னமும் திறக்கவில்லை.10 மணியாகும்.....

Columbus Cafe-ல் காபி குடிக்கலாமா எனச் சச்சின் கேட்டான்.வேண்டாமே என நான் சொன்னதை கண்டு கொள்ளவே இல்லை.காப்பிக் கொட்டையை பொடியாக்கி ஒரு கப்பில் பிடிக்கிறாள்.பின் அதுபோல் சீனி,பால்,சாக்லேட் ஃப்ளேவர் பிடித்து மூடி சூடாகத் தந்தாள்.கை சுடாமல் இருக்க கப்பை கட்டியான அட்டை வளையத்தில் வைத்துத் தந்ததினால் கையில் சூடு தெரியவில்லை.மூடியில் சிறிய சதுர வடிவிலான துவாரம்.வாய் வைத்து குடிக்கும்போது ரெம்பவும் சரிக்காமல் இருக்க மேல் உதடு பதிய செவ்வக வடிவிலான பள்ளம் மூடியிலிருந்தது. நான் குடித்தேன்.....சூடு அதிகம்....coffee is fine....super....
ஒரு கப் காப்யின் விலை 1.4 KD .காப்பி குடித்து முடிக்கவே 20 நிமிட ஆனது. மணியும் பத்தானது.அங்கு போய் பொருட்காட்சியில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ம ஊர் உளுந்த வடை இருந்தது.வித விதமான மீன்கள்,.....ஒட்டக மீட்,....

பேட்டரிக் காரில் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தான் ஒருவன். என்னண்ணு பாத்தால் தரையை clean செய்து கொண்டே போகிறது கார்.

சச்சின் தரையில் போட Fancy mat வாங்கினான் .

360 டிக்ரீ மால் தான் பெரிதென நினைத்தேன்.அது வட்ட வடிவமானது.ஆனால் அதைவிட இதுதான் பெரியது என நினைக்கிறேன்.

Vaasthu செடி வாங்க போனோம். வித விதமான பலவகைச் செடிகளை முதன் முதலாகப் பார்த்தேன்.வீட்டின் உள்ளே வளர்க்க,வெளியே வளர்க்க என்று தனித் தனியாக ஷோ ரூம் இருக்கிறது.Friday Market-க்குப் போய் fish food வாங்கினோம்.பச்சைக்கிளி,வெள்ளிக்கிளி. குருவி,....தவளை....கடல் நீரில் வளக்க கடல்வாழ் உயிரினங்கள் (என் வாழ்நாளில் இது வரை பார்த்ததில்லை) பாத்தேன்.
Cleaning materials வாங்க ஒரு கடைக்குப் போனோம்.
LULU HYPERMARKET-க்கு போனோம். அதுவும் பெரிய மால்தான்.சாப்பிடும் நேரம் நெருங்கியதால் ஸேண்ட் விச் சாப்பிட்டோம்.

அதன் பிறகு கார்ப்பெட் கடைக்குப் போனோம்.

எங்களுடன் சச்சினின் அத்தை மகன்( குவைத்தில் வேலை பார்க்கிறார்) எங்களுடன் வந்தார்.
சால்மியா ஹோட்டலுக்குப் போய் தோசை சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேரும்போது மணி 4.

நிறைவேறிய பாட்டியின் ஆசை

என்ன...இண்ணைக்கு எழுத ஒண்ணும் இல்லையா என்ற என் மனைவியின் கிண்டல் என்னை மீண்டும் எழுதத் தூண்டியது.

என்னத்த எழுத ..........எழுதுவோம்...ரசிக்கும்படி இல்லேண்ணா டிலீட் பண்ணீரலாம்

கதை கேளு ...கத கேழு.....ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு பாட்டி.....

கடுக்கரையில் பொன்னம்மாள் என்று ஒரு பாட்டி இருந்தாள்.அந்தப் பாட்டியின் கணவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலை பார்த்த அதிகாரி. இவர்களுக்கு ஒரே மகன்,4 மகள்.

கடைசி மகள் பாப்பாத்தி.

உள்ளூரிலேயே பாப்பாத்திக்கு கல்யாணம்.மாப்பிள்ளை ஆறும்பிள்ளை.

இவர்களுக்கு 3 மகன்கள் ,2 மகள்.

பாட்டியின் ஒரே மகன் என்பதால் மிக ஆடம்பரமாக மகனுக்கு திருமணம் நடந்தது....அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்...அவள் பெயர் பொன்னம்மாள்....அந்தப் பாட்டியின் பெயர் தான் அது.

பொன்னம்மாளின் ஒன்றரை வயதில் அவளது அம்மா சுப்பம்மை ரெண்டாவது பிரசவத்தின் போது இறந்து போனாள்.

பொன்னம்மாளின் அப்பாவுக்கு மறுமணம் நடக்கிறது.....அவள் ஆச்சியின் பராமரிப்பில் வளர்கிறாள்....இறந்து போன அம்மைக்கு வீடும் நிலங்களும் உண்டு...அந்த அம்மையின் அம்மை வேலம்மையை கண்ணாடி ஆத்தாள் என எல்லோரும் சொல்வார்கள்.

கண்ணாடி ஆத்தாளுக்கு வேறு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில் அவளது மாப்பிள்ளையும் இறந்து போகிறார். இப்படிப்பட்ட நிலையில் அவளது சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தாறுமாறாக மற்ற உறவினர்களால் செலவழிக்கப் பட்டது....

நிலங்களை மைனர் சொத்து என்பதால் விக்கவும் முடியாது.சொத்துக்கு வேண்டி பேத்தியை யாராவது என்னமாம் செய்து விடுவார்கள் என பயந்துபோய் தெரிசனம்கோப்புக்கு பொன்னம்மாளை கடுக்கரையில் தன்னுடன் வைத்து வளர்த்த பாட்டி அனுப்பவே மாட்டாள்.

கண்ணாடி ஆத்தாள் பேத்தியை பார்க்க ஆசைப்பட்டால் பேத்தியை அனுப்பி வைப்பார்கள்...பேத்தி வில்வண்டியில்தான் போவாள்....காலையில் போனால் சாயந்திரம் திரும்பி வந்துவிடுவாள்.ஆத்தாளைத் தவிர வேறு யார் யெது கொடுத்தாலும் பேத்தி சாப்பிடமாட்டாள்.....

பொன்னம்மாள் வளர்கிறாள்.பெரியவள் ஆகிறாள்.அவளது மதினி அதாவது பள்ளத்து அத்தையின் மகள் காளியம்மையும் தன்னுடனே வளர்கிறாள்.இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்தார்கள்.

காளியம்மைக்கு பார்த்த மாப்பிள்ளை கறுப்பு எனபதால் வேண்டாம் என பொன்னம்மாள் சொன்னதைக் கேட்டு வேறு மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கிறது.

பொன்னம்மைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்....பெரியவர்கள் ஒரு மாப்பிள்ளையை
நிச்சயம் செய்தார்கள்.....அந்த மாப்பிள்ளை வேறு யாருமில்லை. கறுப்பு என ஒதுக்கப்பட்டாரே.... அந்த நபர்தான்....அவர் பப்பனா பிள்ள..

காலங்கள் சென்றன.கண்ணாடி ஆத்தாளுக்கு வயதானதால் ஏக வாரிசான பொன்னம்மாளின் நிலங்களைப் பாதுகாக்கணுமே அதுக்கு வேண்டி தெரிசனங்கோப்புக்கு நிரந்தரமாக தாமசத்துக்கு போகிறாள் பொன்னம்மாள் தன் கணவருடனும் பிள்ளைகளுடனும்.

கடுக்கரைப் பாட்டிக்கு ஒரே வருத்தம் தன் அருமைப் பேத்தி நம்மை வீட்டுப் போகிறாளே என.
அடிக்கடி வந்து பார்ப்பேன் என்று சொல்லிவிட்டுப் போனாள் பொன்னம்மாள்.

இன்னொரு பேத்தி காளியம்மை தாழக்குடியில் கல்யாணமாய் அங்கே வசித்து வந்தாள். காளியம்மைக்கு 4 ஆண்,5 பெண்.

பாட்டி தன் பேத்தி பொன்னம்மாளிடம், ‘நீ ஒன் மதினிக்கு நிறைய பிள்ள.அதனால அவ மகளில் ஒருத்தியை ஓம்மகனுக்குக் கட்டணும்.பாப்பாத்தியின் கடைசி மகனுக்கு ஒன் கடைசி மகளைக் கட்டணும்.அப்பம் நான் உசிரோட இருக்க மாட்டேன்....’.....எப்பமும் பாட்டியை பாக்க வரும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்.

நல்ல ஆட்களின் வாக்குக்கு சாவு கிடையாது. 1963-ல் பாட்டி மரணத்தை தழுவினாள்.

1975-ல் பாட்டியின் ஆசைப்படியே இரண்டு கல்யாணமும் நடக்கிறது.

1975 மார்ச்சு மாதம் பாப்பாத்தியின் கடைசி மகனுக்கும் பொன்னம்மாளின் கடைசி மகளுக்கும் தெரிசனம்கோப்பில் வைத்து கல்யாணம் நடந்தது.

பொன்னம்மாளின் முதல் மகனுக்கும் காளியம்மையின் ஒரு மகளுக்கும் திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் கல்யாணம் நடந்தது.

பாப்பாத்தியின் கடைசி மகனது பெயர் பொன்னப்பபிள்ளை.
பொன்னம்மாளின் மகள் சுப்பம்மாள்.

திருமண போட்டோவில் மணமக்களின் பின்னால் இருந்த சுவரில் ஒரு உருவம் மணமாலையுடன் நின்று கொண்டிருந்த புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது.

அந்த உருவம் தான் பாட்டி பொன்னம்மாள்.

Thursday, September 22, 2011

கையில காசில்லாம போகலாம்....பாஸ்போர்ட்,விசா இல்லாமல் வெளியே போகக் கூடாது

தமிழ் சினிமா பார்க்கப் போலாமா.......

 

நாங்கள் குவைத்துக்கு வந்த அடுத்தநாள் என் மகன் என்னிடம்,“ அப்பா...நாம் எங்காவது போகலாம்....இண்ணைக்கு நான் லீவு எடுக்கப்போறேன்....”

“ஒரண்டையும் போகாண்டாம்....நீ இண்ணைக்கு வேலைக்குப் போப்போ....ரெண்டு மாசம் இங்கதான இருக்கப்போறோம்”

“உங்களுக்கு போரடிக்கும்லா....அதான் சொன்னேன்”

வேலைக்குப் போன அவன் அங்கிருந்து போணில் , “ மங்காத்தா சினிமாவுக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணட்டுமா ?” கேட்டான்.

“நீ பாத்தாச்சுல்லா..நான் மட்டும் தான் வாறேன்...சுதா பிள்ளைய வச்சிட்டு வர முடியாதுங்கிறா அதனால அம்மையும் வரல்ல”

7 மணிக்கு படம் ஆரம்பிக்கும். கொஞ்சம் நேரத்த போனால் தமிழ் புஸ்தகம் வாங்கலாம்...

6 மணிக்கு நானும் தினேஷும் வீட்டை விட்டு கீழே லிஃப்டில் இறங்கி ரோட்டுக்கு வந்தோம்..

பஸ்ஸில போலாம் என்று நடந்து போய்க் கொண்டிருக்கும்போது அந்த வழியே வந்த டேக்ஸியை நிறுத்தி அதில் போனோம்...கடைகள் நிறைந்த ஒரு இடத்தில் இறங்கினோம்...

ப்ளாட்பாரத்திலும் சின்னக் கடை விரித்து மொபைல் விற்பனை நடந்து கொண்டிருந்தது....ஆச்சரியமாக இருந்தது...போலீஸ் வந்தால் கடைக்காரன் அங்கிருந்து ஓடிருவான் அவங்க கண்ணில் படாமல்.....

விகடன்,குமுதம்,ராணி,தேவி...வங்கினான்....விலை தலை சுற்றியது
6.45 க்கு தியேட்டர் இருந்த ஒரு இடத்துக்கு வந்தோம்....அது பல மாடி பில்டிங்க். சூப்பர் மர்க்கட், த்யேட்டர்.....இருக்கு....விலை கூடுதலான ஐ-போண் இன்சால்ட்மெண்டில் கொடுக்கும் கடையயும் பார்த்தேன்....

டிக்கட் எடுக்கணுமே....On line-ல் reserve பண்ணலாம். ATM -ல் அவன் வைத்திருந்த கார்டை போட்ட உடனே தியேட்டரின் பெயர்,நம்பர்...Ajial Cinema (3) Mankatha-Tamil (No Arabic Subtitle).....ticket வந்தது. ஒரு நபருக்கு 2 K.D.

அந்த இடத்தில் 4 தியேட்டர் இருந்தது.....

மிகச்சரியாக 7 மணிக்கு விளம்பரப் படம் ஓடியது....

படம் முடிந்து டேக்ஸிக்காக நடந்து போகும்போது பஸ் ஒன்று நின்றதைப் பார்த்து அதில் ஏறினோம்.பஸ்ஸெல்லாமே AC தான். கண்டக்டர் கிடையாது...ட்ரைவர் காசு வாங்கி ஒரு ஆட்டமெட்டிக் மெசினில் 2 டிக்கட் எடுத்துத் தந்தார்


ஞாயிறு மாலை வேலை முடிந்து ,கடைக்குப் போலாம் ,Fish market-க்கும் போய் மீனும் வாங்கலாம் என கிழம்பும் போது மகாதேவன் வந்தார்.அவரது காரில் நாங்கள் எல்லோருமே பொனோம். வாசல் கண்ணாடிக் கதவு மூடியபடியேதான் இருக்கும். நாம் அருகே போனதும் அது இரு புறமும் நகர்ந்து வழி விடும் .உள்ளே போனதும் அது மூடிக்கொள்ளும்.கடைக்குப் போய் தேவையானதை வாங்கி விட்டு அதன் பக்கத்தில் உள்ள fish market=க்குப் போனோம்.

நல்ல மீன் . அன்று அதுதான் இருந்தது....பெரியதாக இருக்குதே...வேற மீனப் பாக்கலாம் என தினேஷ் கூறினான். என் மனைவி இத வெட்டித் தாருங்களேன் என கூற தினேஷ் சிரித்துக் கொண்டே நிண்ணான்....அவன் சிரித்துக் கொண்டே, “ நம்ம ஊரிலதாம்மா வெட்டுனத வாங்குவாங்க...இங்க யாரும் வாங்க மாட்டாங்க” மலையாளத்தில் சொன்னான்.

வெளிநாட்டில் இருக்கும்போது அனைவருக்கும் ஒரே ஊர்தான். இந்தியாதான்....

எப்பவுமே அவன் கடையில் வாங்குவதால் சொன்ன விலையில் இருந்து குறைத்து மீனை 5 நாள் உபயோகிக்க வெட்டி 5 கவரில் வைத்து கொடுத்தான்.

தேங்காய் வாங்கினால் திருவித் தருகிறார்கள். மரச்சீனி கிழங்கு கிடைக்கிறது.சம்பா புட்டு மாவு இங்கே கிடைக்கும்.

நாகர்கோவிலில் வெளியே போனால் கையிலோ பையிலோ காசு இல்லாமல் இருக்காது. காசு எடுக்காமல் காலையில் Walking கூட போனது கிடையாது.இங்கோ நான் வெளியே போகும்போது என் கையில் காசிருக்காது...ஆனால் பாஸ்போர்ட்டும் விசாவும் கையில் இருக்கும். இதெல்லாம் இல்லாம வெளியே போகக் கூடாது. ஆனால் இங்கு வேலை பார்ப்பவரகள் Civil ID வச்சிருப்பாங்க.......

கையில காசில்லாம போகலாம்....பாஸ்போர்ட்,விசா இல்லாமல் வெளியே போகக் கூடாது

Tuesday, September 20, 2011

மழைன்னா என்னங்க....

 
Posted by Picasa


போட்டோ எடுத்தது யாருங்க....நல்லா இருக்கே...

போட்டோ எடுத்தது மகாதேவனுங்கோ....ஆனா கேமரா என்னதுங்கோ.....

****** ****** ****** ****** ****** *********

வெயில்ல ரெம்ப நேரம் நிக்கேளே... மேலெல்லாம் அனல் காற்றுப் பட்டு சுடல்லியாங்கும்......

பழகப் பழகப் பாலும் புளிக்கும்லா....குவைத் வெயிலும் குளிருதுங்க.....

******************************************************************************

ஆட்டோ குவைத்தில கிடையாதாமே....

நீரை சிக்கனமா செலவளிங்கோ என அறிவிப்பும் இல்ல தண்ணீரே இல்லா இந்த ஊரில்.பல இடங்களில் குடிநீர் வசதி இருக்கு....

மின்வெட்டு....அப்படின்னா என்னங்க.....

தல சுத்துது .....ஏங்க...என்ன ஆச்சு...

தாங்க முடியல்லீங்க....சொல்லுங்க என்ன விசயம்னு...

பெட்ரோல் ஒரு லிட்டர் என்ன வில இருக்கும் சொல்லு பாப்போம்.

என்ன இந்தியாவ விட குறவாத்தானே இருக்கும்.....ஒரு 50 ருபா இருக்குமா....

அய்யோ...அய்யோ....12 ருபா கூட இல்ல.அதை விட குறவுதான். இங்க தினார் தான் நமக்கு ருபா மாதிரி

ஒரு K.D சமம் நமது 175 ருபாய்....

தமிழ் புக் போடும் பையன் இங்கேயும் சைக்கிள்ளதான் வாறான்.... விகடன்...60 ருபா...சினேகிதி...85/- தேங்காய்...50/-

இங்கு குவைத்து மக்கள் சாப்பிடும் உணவு குப்பூஸ்...

விசா extension க்காக போனால் 5 நிமிடத்தில் கிடைத்ததைப் பார்த்து...இப்படியும் நடக்குமா...!

மழை எப்பங்க வரும்..? மழையா... அது எப்படீங்க இருக்கும்...

மஞ்சள் புடிக்குமா.....கருப்பு புடிக்குமா...

மஞ்சள் தங்கம் வேணுமா.....கருப்புத் தங்கம் வேணுமா

அதென்னங்க கருப்பு தங்கம்......அது தான் குவைத்தில் கிடைக்கும் க்ரூடாயில்.

நான் பாத்த மீன்சந்தை

 
Posted by Picasa


நானும் மகாதேவனும் குவைத் சிற்றிக்கெல்லாம் சனிக்கிழமை சுற்றிப் பார்த்து வரும் வேளையில் இந்தக் கடல் பக்கம் போனோம். கடற்கரை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குளத்தின் கரை போன்று அமைக்கப் பட்டிருந்தது. பிளாட்ஃபார்ம் அழகாக இருக்கிறது.வெயில் இருந்தாலும் அனல் இல்லா காற்றை அனுபவித்தேன்.குவைத்தின் நான் போன இடங்களிலேயே இந்த இடத்திலேயும் சிற்றியின் மற்ற சில இடங்களிலும் இதமான வெளிக்காற்று படும் சுகத்தை உணர்ந்தேன்.

அந்த நீண்ட பிளாட்பாரத்தில் நடந்து வந்தோம். கடல் அருகிலேயே ஆழம் கூடுதலாக இருக்கும் என அவர் சொன்னார். சிலர் அந்த வெயிலிலும் செயரில் இருந்து எதனையோ சிந்தித்து கொண்டிருந்தனர். நாங்கள் கடலின் உள்பக்கமாய் செல்லும் மரப் பாலத்தில் நடந்தோம்.அந்தப் பாலத்தின் மறுமுனையில் அந்த நாட்டுச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.பாதி வரைப் போன நாங்கள் திரும்பி வெளியே வந்து நேரே எதிர் திசையில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை நோக்கிச் சென்றோம். அது சூப்பர் மார்க்கட் போல் இருந்தது. குண்டூசியில் இருந்து நவீன 3D,H.D,LED TV,சோனி கேமரா,நிக்கான் ,கேனான் கேமரா, .....என்னவெல்லாமோ இருந்தன.பிரமிப்பு நீங்குவதற்குள் Fish Market-க்குப் போகலாமா என அழைத்துச் சென்றார்.

உள்ளே சென்று பார்த்தால்....பெரிய Hall-ல் சின்ன பக்கெட்டுகள் நிரம்ப காணப்பட்டன. அத்தனையிலும் மீன்கள் ஐஸ் கட்டிகழுடன்...அருகே சென்று பார்த்தேன்...நான் பார்த்ததில் எல்லாமே விரால் மீன்கள்....போட்டொ எடுத்தேன். அவற்றை ஏலம் போட்டு விப்பதாக அறிந்து கொண்டேன்.

பல விதமான மீன்கள்...நம்ம ஊர்ச்சந்தை என் கண்முன்னே தோன்றி என் மூக்கை என்னவோ செய்தது.நடந்து செல்லும் பாதையை ஒருவன் clean பண்ணிக் கொண்டிருந்தான்.வாங்கிய மீனைப் பச்சை கலர் ப்ளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுக்கிறார்கள். நம்ம ஊரில் கறுப்புக் கலர் கவர்.....வாங்கிய மீனை வெட்டியும் கொடுக்கிறார்கள்...மீனை வெட்டித்தருபவர்கள் கையில் பிளாஸ்டிக் உறை...மிகவும் சுத்தமாக எல்லாமே இருந்ததைப் பார்த்து பிரமிப்பு...பிரமிப்பு... ஒரே பிரமிப்புதான் .

காரில் திரும்பினோம்....நாய் கிடையாதா...எங்கேயும் பாக்கல்லியே. மாடுகள் இல்ல...காக்கா
இல்ல...பூனை ,புறாக்கள் பார்த்தேன். ஒட்டகம் உண்டுமாம். நான் பாக்கல....

நம்ம ஊருல பெரிய கல்யாணம்னா எதை வைத்துச் சொல்வோம்....இங்கே எத்தனை ஒட்டகத்தை வெட்டுகிறார்கள் என்றக் கணக்கை வைத்துதான் பெரிய கல்யாணமா சின்னக் கல்யாணமா....சொல்வார்கள். பெண்களுக்குதான் வரதட்சணை கொடுப்பார்கள்....
எத்தனை பிள்ளைகள் வேணுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்....இன்னமும் என்னவெல்லாமோ தெரிந்து கொண்டேன்...

இந்த நாட்டு ஆண்கள் அவர்களுக்கே உரித்தான வெள்ளை உடை.தலையில் துணி.அதன் மேல் வட்டமாக கறுப்பு நிறக் கயிறு....

வெளிநாட்டவர்கள் தான் கூடுதலாக இருக்கிறார்கள்.

தமிழ்,மலையாளம் பேசும் மக்களை அதிகம் கண்டேன். எல்லாக்கடைகழுமே மலையாளிகள் தான் நடத்துகிறார்கள்.ஆனால் அதன் லீகல் உரிமையாளர் நிச்சயமாக ஒரு குவைத்தியாகத்தான் இருப்பார்....

தாஜ்மகால் போல குவைத்தில்

 
Posted by Picasa

தோஹா ஏர்போர்ட்டில் காத்திருந்த வேளையிலே

 
Posted by Picasa


எப்பங்க குவைத் ஃப்ளைட் வரும்....?

நேரமாகுமா....மத்தியான சாப்பாடும் தருவார்களாமே..!

இங்கேயும் சாமியின் ஹோட்டல் இருக்குல்லா...! அங்க போயாவது தினேஸுக்கு போண் பண்ணுங்களேன்....!

பாருங்கோ....அன்னா போறா அவ....அவள்ட்ட போய் போண வாங்கி தினேஷிட்ட பேசீருங்கோ...

பாத் ரூம் கூட என்ன க்லீனா இருக்கு.....பொம்பளயாங்கும் க்லீன் பண்றாங்க லேடீஸ் பாத்ரூம்ல.

குவைத்து ஃப்ளைட்ல எப்படியும் என்னமாம் திங்க தருவாங்களா ?....திருவோணத்துக்கு பட்டினி தானா?

செருக்கும் செருப்பும் இல்லா தியாகி பகவதி

கடுக்கரையில் பிறந்த திரு தெ.வே. பகவதிப்பெருமாள் தெரிசனம்கோப்பில் வாழ்ந்து வருகிறார். தெ.வே.பகவதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவர் 1947 ல் தெரிசனங்கோப்பில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்வில் தனது 11 வயதில் கலந்துகொண்டு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியவர்

1954 ஆகஸ்டு 11 ம் தேதி நடந்த திருத்தமிழக விடுதலை தினமாக கொண்டாடப்பட்டபோது இவர் புதப்பாண்டி அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் அப்போது மாணவர்களை ஒன்று திரட்டி அரசாங்கத்தின் தடையை மீறி ஊர்வலமாக சென்று திட்டுவிளை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது பூதை சோ. அண்ணாமலை கடுக்கரை தம்புரான் தோழப்பிள்ளை ஆகியவர்களுடன் கைது செய்யப்பட்டு புதப்பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பள்ளிப்படிப்பு தடையாகி படிப்பு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1981 1982 ஆகிய ஆண்டுகளில் அரசின் சார்பில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களுக்கு அடிகோலியாக இருந்து செயல்பட்டார்.

1986 ல் இருந்து 1991 வரையிலும் தெரிசனங்கோப்பு ஊராட்சியின் தலைவராக தேர்வுசெய்யப்பட்டு 5 ஆண்டுகாலம் அரிய பல நலத்திட்டப்பணிகளை மேற்கொண்டார்.

2006 ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்மாநில பொன்விழாவில் எல்லைப்போராட்ட தியாகிகளை அழைத்து தமிழக அரசு கௌரவப்டுத்தி விருதுகளை வழங்கியது. அதில் கலந்து கொண்டு அன்றைய முதலமைச்சர் அவர்களால் விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

2006 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டுவரும் 72 வயதான ஒரு சுறுசுறுப்பான மனிதத்தேனியாக வாழும் தியாகி விருது பெற்ற இளைஞர்
இவர் கால்களில் செருப்பு போடுவதில்லை.

இவர் தனது இளமைக் காலத்தில் ‘கலைச்சுடர்’ என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்.

AD-World என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் அதன் ஆண்டு விழாவினை கொண்டாடும் போது சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவிப்பார்.

2011 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆண்டுவிழா நடந்தது.திரைச்சீலை நூலை எழுதிய கோவை ஜீவானந்தனும் கௌரவிக்கப்பட்டார். நான் பெங்களூர் சென்றதால் ஒரு வாழ்த்துச் செய்தியை எழுதி என் உறவினர் மூலம் கொடுத்தனுப்பினேன்.

அந்த வாழ்த்து இது தான்:

கடுக்கரையில் விதையாய் வீழ்ந்த
தெரிசையில் தருவாய் உயர்ந்த
ஊருக்குத் தலைவனாய் சேவகனாய்
வாழும் கலைச்சுடர் பகவதியே

நம் மாவட்ட சாதனை படைத்த
வல்லோனை எல்லோருக்கும் காட்ட
நடத்தும் பாராட்டு விழாவே நாளை
உன் சாதனைப் பட்டியலில் சேரும்

தலையில் செருக்கு இல்லை
காலில் செருப்பும் இல்லை
ஆனால் பெருமை ஒன்று உண்டு.அது
இது போல் நடத்துபவன் நீயொருவனே என்று

எம் மண்ணின் மைந்தனே
என் அண்ணனே
விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Monday, September 19, 2011

என் வரிகளையும் ரசித்தவருடன் ஒரு நாள்

சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் தோவாளை மகாதேவன் பிள்ளையின் காரில் சும்மா ஊரைச் சுற்றி பார்க்கலாமே என்று அவர் அழைத்ததாக தினேஷ் போண் பண்ணிக் கூறவே சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் உள்ளநாளில் இன்று பள்ளிக்கூடம் போகவேண்டாம் எனச் சொன்னால் மகிழுமே அதே போன்று நானும் மகிழ்ந்தேன்.

நானும் அவர் காரில் முன்சீட்டில் பெல்ட் போட்டு அவருடன் போனேன்.

என்னுடன் பேசிக்கொண்டே காரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தார். ஸ்பீடாகப் போனது போன்ற ஃபீலிங்கே இல்லை. காரணம் இங்குள்ள ரோடு தான்.எல்லா கார்களும் எங்களை விட வேகமாகச் சென்று கொண்டிருந்தன.

“ உங்கள் ப்ளாக்கை நான் தினமும் படிப்பேன்.நன்றாக இருக்கிறது.நாஞ்சில்நாடன் எழுதுவது போலவே எழுதுகிறீர்கள்.”

அவர் நமக்காக எழுதுகிறார்.... நான் எனக்காக எழுதுகிறேன். எங்கள் காலேஜுக்கு வந்த அவரிடம் பேசியிருக்கேன்.தலைகீழ்விகிதங்கள் படிச்சிருக்கேன். நாஞ்சில் நாட்டுப் பேச்சும் கலந்த அவரது எழுத்து மிகவும் அருமையானது. சிவாஜி கணேசன் நடித்தார்.அவருக்குப்பின் கமலஹாசனாகட்டும்,ரஜினிகாந்தாகட்டும் நடிப்பதற்கு வேண்டி நடந்தால் கூட அது சிவாஜியைப் போல் தான் இருக்கும் .நாஞ்சில்நாடனைப் படித்தபிறகு தான் நான் எழுதவே ஆரம்பித்தேன்.இதுபோன்று ப்ளாக் ஒன்று create பண்ண idea கொடுத்ததும் ஒரு நாஞ்சில்நாட்டுக்காரர் தான்....கோவையில் வாழும் பூதப்பாண்டி ஊர்க்காரர்...அவரும் ஒரு நூலை எழுதிய எழுத்தாளரே...திரைச்சீலை எழுதிய ஜீவானந்தன்.ஆகவே அவரைப் போலத்தான் என்னால் எழுதவே முடியும்.....

மகாதேவன்பிள்ளை “எனக்கு நாஞ்சில்நாடனையும் தெரியும்,ஓவியர் ஜீவாவையும் நன்றாகத் தெரியும்”என்றார்.

அவர் மேலும் சொன்னார்: “நேரில் சொல்வதைவிட...சொல்லமுடியாததைக் கூட எழுதினால் அதற்கு effect கொஞ்சம் கூடுதல்தான்”.

ஆம்..அது உண்மைதான்.

நான், “எனக்கு ரெம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எல்லோருமே இலக்கிய எழுத்துக்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு படிச்சிருக்கீங்களே. வேலைப் பழு அதிகமா இருக்கும்.வீட்டிற்கு வருவீங்க...சாப்பிடுவீங்க...தூங்குவீங்க...TV பாப்பீங்க...இப்படித்தான் நான் நினச்சேன்...அண்ணைக்கு புத்தேரி தினேஷ் வந்து பேசிக் கொண்டிருந்தார்;நாஞ்சில் நாட்டு வரலாறு பற்றிய பேச்சு அது. அவர் என்னிடம் கேட்ட கேள்விகள் என்னை மிகவும் சந்தோசப்படுத்தியது.ஒரு கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.ஊருக்கு போனபின் தான் விடையைத் தேடணும்.மனம் திறந்த அந்தப் பேச்சு அவர் போன பின்னும் என்னுள்ளே இருந்து கொண்டே என்னை தட்டிகொடுத்து மேலும் எழுதணும்னு ஊக்கப் படுத்தியது. கடுக்கரையைப் பற்றிய அவரது நினப்பு என் வரிகளைப் படித்ததால் மாறியதாக சொன்னார்....குவைத்தில் இருந்தாலும் குமரி மாவட்ட வரலாறு எழுதிய அ.கா.பெருமாள் பற்றியும் தினேஷ் பேசுகிறார் . நாடு விட்டு நாடு வந்தபின்னும் நாகர்கோவிலைப் பற்றியும் என்னால் பேசமுடிகிறதே...இந்தப் பேச்சு தொடர்ந்தது.

நான் கேட்டேன்,“ வந்த அண்ணைக்கே கேக்கணும்னு நினைச்சேன், நாங்க வந்தோம்லா முத நாள். காலையில் வந்த கத்தார் ஏர்வேய்சில நாங்க வராததால் தினேஷின் மனசு ரொம்ப கஸ்டப்பட்டிருக்கும்.அவனது அம்மைக்கு அது தான் பெரிய விசயமாய் தோணி என்னை எப்படியாவது தினெஷுக்கு சொல்ல முடியுமா பாருங்கள் என்றாள். அவள் ஃப்ளைட்ட விட்டதுக்குக் கூட கவலைப் படாமல் மகன் தேடித் தடுமாறுவானே என்று தான் புலம்பிக் கொண்டிருந்தாள். நாம் வந்தது பஸ்ல இல்ல. நாம் இங்கே காத்திருப்பது அவனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.கவலைப்படாதே என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். நீங்க என்ன செய்தீங்க”

”காலைல நான் வரல்ல...தினேஷும் மாதவனும் வந்தார்கள்.அவர்கள் கத்தார் ஏர்வேய்ஸில் விசாரித்தார்கள்.நீங்கள் தோஹா ஏர்போர்ட்டில் இறங்கியதையும் 2.30 மணி ஃப்ளைட்டில் வருவார்கள் எனவும் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு வீட்டிற்குப் போய் திரும்பி குவைத் ஏர்ப்போர்ட்டுக்கு வரும்போது என்னுடைய காரில் வந்தோம்”

நானும் மகாதேவன் பிள்ளையும் ஒரு பெரிய சூப்பர் மார்க்கட்,தாஜ்மகால் போன்ற மாஸ்க்,தண்ணீர் சுத்தீகரிப்பு ப்ளாண்ட்,கடற்கரை ,சுல்தான் செண்டர், பெரிய ஃபிஷ் மார்க்கட்
எல்லாம் பார்த்தோம். இந்தியன் ரெஸ்டாரெண்ட்-ல் போய் என்.வி சாப்பாடு சாப்பிட்டோம்.

திரும்பி வரும் போது காரில் இருந்தே குவைத் டவ்வரை பார்த்தேன். 4 மணியளவில் என்னை வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போனார்.

லிஃப்ட்டில் 8-ஆவது மாடிக்கு வந்து வீட்டுக்கு வந்தேன் .

தினேஷ் படிக்க தந்த நாஞ்சில்நாடன் எழுதிய ‘எட்டுத் திக்கும் மதயானை’-ஐ எடுத்துப் படிக்க எடுத்தேன்.

அட்டையின் அடுத்துள்ள பக்கத்தில் எழுதியிருந்த வரிகள்:- அன்புள்ள நண்பர் திரு.சி.மகாதேவன் அவர்களுக்கு நட்புடன் நாஞ்சில்நாடன் - 15/4/03.

Sunday, September 18, 2011

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு

இன்று ஞாயிறு 18-ம் தேதி. நான் நாகர்கோவிலில் இருந்து வந்து இன்றோடு 10 நாளாகிறது. நேற்று இரவு தூங்கப் போகும்போதே காலை 8 மணிக்கு கல்யாண மாலை சண் டீவியில் பாக்கணும் என்று நினைத்துக் கொண்டே படுத்தேன்.

போனவாரம் 8 மணிக்கு டீவியை ஆண் பண்ணி சண் டீவியைப் பார்த்தால் அங்கே ராஜேந்தர் பெண்கள் வேலைக்குப் போவது சந்தோசமா,சங்கடமா ,காலத்தின் கட்டாயமா......கேட்டுக் கொண்டிருந்தார்.

அய்யய்யோ....குவைத் ட்டைம் 5.30 க்குல்லா கல்யாணமாலை.....

அதனால் இண்ணைக்கு காலை 5.30 க்கு முன்பே எழுந்து கல்யாணமாலை பார்த்து விட்டேன்....

இல்ல...இல்ல... கண்ணீர் விட்டேன்...கன்னம் முழுவதும் கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதை பார்த்த என் மனைவியின் கண்ணிலும் ......

பார்ப்பவர்கள் பேசியவரது பேச்சின் நயத்தால் ,அவரது நெகிழ்ந்த முகத்தால் சினிமாவில் பத்மினியோ, சாவித்திரியோ பணம் வாங்கிக் கொண்டு அழும்போது காசையும் கொடுத்து அழுவோமே அது போல நானும் உணர்ச்சி பிழம்பாய்....சே..ச்சே.....

சென்றிடுவிர் எட்டுத் திக்கும்...வெளிநாட்டுக்கு சென்றதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?

இழந்தது அதிகம் எனப் பேசிய பாங்கு கேட்போரை மட்டுமல்ல பார்ப்போரையும் அழ வைக்கும்.

இவர் பெற்றது அதிகம் எனப் பேசினாலும் மிக நன்றாகவே இருந்திருக்கும்.

பேசியதில் உணர்வும் இருந்தது உண்மையும் இருந்தது......மறுக்கவே முடியாது.ஆனால்

‘திரைகடலோடித் திரவியம் தேடு’ என்று என்றோ ஒருவன் சொன்னானே....அது ஏன்?

ரங்கூனிலும்,சிங்கப்பூரிலும் போய் வணிகம் செய்து நம் நாட்டின் செல்வத்தையும் பெருக்கினார்களே....அது தவறா ? அதுவும் எந்த வசதியும் இல்லாத அந்த நாட்களில்....

மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் வாய்ப்பு கிடைத்தவன் வளமோடு வாழ்வான். வாய்ப்பு கிடைக்காத மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ? இன்று உலகமே உள்ளங்கையில்
அல்லவா உருண்டு கொண்டிருக்கிறது.


இன்று சினிமா தியேட்டரில் கூட்டமே இல்லை. பாஸ்போர்ட் ஆபீஸ்லதான் கூட்டம் அலைபாய்கிறது ஏன்....? முன்னாலெல்லாம் நினைத்த நேரத்தில் வரமிடியாத சூள்நிலை. ஆனால் இன்று அப்படியா..?

பாசம்,நேசம்.....எத்தன நாள்தான் இதச்சொல்லியே காலத்தக் கழிக்கப் போறோம்.

கல்யாணம் பண்ணிக் கொண்டால் பெற்றவர்கள் மீது பாசம் குறையுமா? குறையாதா ?

படிக்கவைத்தால் மகன் அப்பாவைப் பின்னால் கவனிப்பானா ? கவனிக்க மாட்டானா?

பிள்ளை பிறந்தால் பெண்ணுக்கு அழகு குறையுமா ? கூடுமா?

இப்படி எத்தனையோ.......விவாதிக்கலாம்.

கூளுக்கு ஆசைப்பட்டால் மீசைக்கு ஆசைப்படக்கூடாது.எதையோ ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும்.

எட்டுத்திக்கும் என்ன எல்லாத் திக்கும் எட்டும் திக்கே.எட்டாத்திக்கென்று எதுவுமே இல்லை...இல்லவே இல்லை.

வெளிநாட்டுக்குப் போயே ...போய்தான் வாழவேண்டும் என நினைத்தால் அது சரியில்ல....ஆனால் போவதே தப்பு என்று சொன்னால் அது தப்பு....

எதையும் எதற்காகவும் எப்போதும் யாரும் அதிகமாய் இழந்ததும் இல்லை......அளவுக்கு அதிகமாகப் பெற்றதும் இல்லை......

எதைக் கொண்டு வந்தோம் நாம் இழப்பதற்கு

Friday, September 16, 2011

ஆள்வார்கோயில் வெங்கட்ராமன் போற்றியும் குவைத் ஹோட்டலும்

நாங்கள் பொன்னப்ப நாடார் காலனியில் வீடு கட்டும்போது அந்த இடத்தில் ஒரே ஒரு ஆள் தான் அஸ்திவாரம் மட்டும் கட்டி முடித்திருந்தார்.தண்ணீர் தந்து உதவியவர்கள், பொருளைப் பாதுகாக்க இடம் தந்து உதவியவர்கள்,....எனப் பலர் உண்டு.

நான் முதலில் ஒரு store room தான் கட்டினேன்,அதனைக் கட்டுவதற்கு லாறியில் கொண்டு வந்த தண்ணீரை அவரது வீட்டுத்தண்ணீர்த் தொட்டியில் தான் பிடித்தோம்.

நான் அவரைப் பார்த்ததே இல்லை.....அவரது மனைவி தான் தண்ணீர் பிடித்துக் கொள்ள அனுமதி தந்தாள். அவரது வீடும் கட்டி முடிந்து பால் காய்ச்சுக்கும் நான் போனேன்.

என் வீட்டுக்கு வந்த அவரிடம் பேசி கொண்டிருந்தேன்.

அவர்தான் வெங்கட்ராமன் போற்றி.

குவைத்தில் வேலை பார்ப்பதாக கூறினார். அவரது அப்பா ராமகிருஷ்ணன் போற்றி. சொந்த ஊர் தக்கலைப் பக்கத்தில் உள்ள ஆழ்வார்கோயில். P.U.C வரை படித்திருக்கிறார்.

அவர் மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்ததால் வறுமை பற்றி அதிகம் அறிந்தவர்.

காலங்கள் உருண்டோடின. என் மகன் தினேஷ் குவைத்துக்கு அவரது உதவியால் வந்து வேலை பார்த்தான்....

போற்றி குவைத்தில் வேலை பார்ப்பதோடு உடுப்பி ஹோட்டலும் வைத்திருக்கிறார். நாகர்கோவிலிலும் வடசேரியில் உள்ள Hotel Udupi Internationalன் உரிமையாளரும் இவர் தான்.நாங்கள் அனைவரும் அவரை சாமி என்று தான் அழைப்போம்...

நானும் என் மனைவியும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி குவைத்துக்கு வந்தோம்.எங்களை அழைத்துக் கொண்டு போக வந்த தினேஷ் அவனது வீட்டில் சாப்பிட விரும்பினான்.ஆனால் தினேஷிடம் போண் பண்ணி அவரது ஃபாஹீலில் உள்ள உடுப்பி ஹோட்டலுக்கு அழைத்து வரச்சொன்னதால் நாங்கள் அங்கேயே போனோம். இதுதான் பொன்னப்ப சார் எனச் சொன்ன உடனே அங்கிருந்த ஊழியர் தெரியுமே எனச் சொன்னது ஆச்சரியமாகவே இருந்தது.

13-ஆம் தேதி செவ்வாய்கிழமை நாங்கள் ஃபாஹீலில் உள்ள உடுப்பி இண்டர்நேஸனல்-க்குப் போனோம்.சாமி கத்தார் போய் புதன்கிழமை வருவாதாகச் சொன்னார். ஊழியர்கள் இருவர் எங்களை நலம் விசாரித்தார்.டிஃபன் சாப்பிட்டோம்.அங்கு வேலை பார்த்த முருகன் எனக்குத் தெரிந்தவர் வடசேரியைச் சேர்ந்தவர்...அங்கும் நாங்கள் சாமி இல்லாத போதும் விருந்தினராகவே கௌரவிக்கப் பட்டோம்,

வியாழன் காலையில் அவர் காரில் வந்து அழைத்துச் சென்றார்.மதிய உணவு உண்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம்.அவரது எல்லா ஹோட்டலுக்கும் எங்களை கூட்டிக் கொண்டுபோனார்.ஐந்து ஹோட்டலிலும் இதுதான் பொன்னப்ப சார் என்று அறிமுகப் படுத்தினார்.எல்லோருக்குமே என் பெயர் தெரிந்திருக்கிறது....

நான் அவரிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.காரையும் ஓட்டிக் கொண்டே பதிலும் சொன்னார்......

1981-ல் முதல் தடவையாக குவைத்துக்கு வேலைக்கு வந்தார். 1994 க்குப்பின் தான் நண்பர்களின் ஐடியா படி முதன்முதலாக ஒரு ஸ்பான்சர் உதவியால் ஃபாஹீலில் உடுப்பி ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தார். இப்போ ஐந்து ஹோட்டல்கள் இருக்கின்றன.ஸால்மியா, ஸர்க்,
அப்பாசியா-லும் ஃபாஹீதில் ஒரு கட்டிடத்தில் 15- வது மாடியில் உடுப்பி இண்டர்நேசனல் ஹோட்டலும் நடத்தி வருகிறார்.

தினேஷ் ஆரம்பகாலத்தில் வியாழக்கிழமை தோறும் குவைத் சிற்றியில் உள்ள ஹோட்டலுக்கு வந்து வந்து போற்றியைப் பார்க்க வருவான்.அவனுக்கென்று தனியாக ஒரு இடம் ,பெட் உண்டு...அவன் தங்கி அடுத்த நாள்தான் போவான்.அந்த இடத்துக்கு நாங்கள் வந்ததும் தினேஷ் என்னிடமும் அங்கிருந்தவர்களிடமும் கூறி மகிழ்ந்தான்.

சாமியின் நண்பர் ஒருவர் குவைத்தை சேர்ந்தவர்.எஞ்சீனியர்.அவர் நாகர்கோவிலுக்கு வந்தபோது என் வீட்டுக்கும் அவரை அழைத்து வந்தார் சாமி. அவரை குவைத்தில் அவருடைய அலுவலகத்தில் போய்ப் பார்க்கப் போனோம்.

என்னை சாமி அவரிடம் அறிமுகப் படுத்தினார்.அவர்..WELCOME TO KUWAIT .....
தேனீர் தந்தார்.....புறப்படத் தயாரானோம்...

தினேஷ் போட்டோ எடுக்கலாமா என விரும்பிக் கேட்க அவர் தன் சீட்டில் இருந்து எழுந்தார்.
சாமி அவரிடம் ,“நீங்கள் சீட்டில இருங்கோ” னச் சொல்ல அவர் மறுத்து எங்களோடு நிற்க போட்டோ எடுத்தான் தினேஷ்.

அடுத்த நாளும் சாமியின் இன்னொரு சின்ன பஸ்ஸில் குவைத்தைச் சுற்றிப் பார்த்தொம்.பஸ் ஸ்டேண்ட்,லிபரேசன் டவ்வர் பக்கம்,ட்விஸ்ட் பில்டிங்க்,சிற்றி முழுவதும் பார்த்தோம்.

திரும்பி வரும் போது சாமி என்னிடம் நான் பொன்னப்ப சாரோடு இப்படி குவைத்தில் சுற்றுவேன் எனக் கொஞ்சமும் எதிர் பார்க்கல...என்றார்.

நான் அவரிடம்,“எனக்கும் ரெம்ப ஆச்சரியமாக இருக்கு சாமி.....நான் குவைத்தில் வந்து சேர்ந்த உடனேயே ஒரு இந்தியர் நடத்தும் ஹோட்டலில் திருவோணச் சாப்பாடு. குவைத்தைச் சேர்ந்தவரின் அன்பான விருந்தோம்பல்....இதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு உங்களால் தானே.......”

அவர் தான் நடத்தும் கத்தார் ஹோட்டல் நஷ்டமாய் போய்க் கொண்டிருப்பதைக் கூறினார் .

சொன்னதை எல்லாம் எழுதக் கூடாதல்லவா.....

சொன்னதில் என் மனதை தொட்டது.....அவர்,“ ஆள்வார்கோயில்ல இருந்து வரும் போது நான் எதுவும் கொண்டு வரல்ல நான் நஷ்டப்படுவதுக்கு....70 க்கும் அதிகமான குடும்பங்கள் என் ஹோட்டலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...இந்தியன் ஹைக்கமிசனில் நடக்கும் விழாக்களுக்கு அழைப்பு வரும்....நான் போவதில்லை....நான் இன்னமும் அதேக் கம்பனியில் தான் வேலை பார்க்கிறேன்....”

சாமி அரபி மொழியில் நன்றாகப் பேசுகிறார். இந்தி,இங்க்லீஸ் சரளமாகப் பேசுகிறார்,துளு, மலையாளம் தெரியும்.

ஆள்வார்கோயிலில் தன் தந்தையின் சொற்ப வருமானத்தில் வாழ்ந்ததை இன்றும் சொல்கிறார்.

குவைத்தில் இருந்தாலும் ஆழ்வார்கோயிலை தினமும் நினவில் கொள்கி்றார்.சிவராத்திரிக்கு ஆழ்வார் கோயிலில் கச்சேரி நடத்த நல்ல ஒரு பாடகரைக் கொண்டுவர இப்பமே முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

வேர்களை மறவாத போற்றியை என்னாலும் மறக்க முடியாது......

Thursday, September 15, 2011

எங்கள் இனிய இல்லம் “பகவதி”

செப்டம்பர் மாதம் 14.எங்களால் மறக்க முடியாத நாள்.21 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் தான் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் நகரில் இருக்கும் எங்கள் வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது .

பால் காய்ச்சுக்கு முந்தின நாள் சந்தை சாமான் வந்தது.விறகு கொண்டுவர வண்டி கிடைக்க வில்லை.பெனெடிக்ட் தனது காரிலேயே வங்கி வந்தார்.....அதனை இறக்கி வைக்க அவருக்கு உதவியது ஸ்ரீகுமார். இரவு முழுவதும் முழித்திருந்து தச்சுக் கழிப்பு முடிந்ததும் வீடு முழுவதும் தண்ணீர் வீட்டு சுத்தம் செய்தது என் மருமகன் மோகன்.

அதிகாலை 4 மணிக்கு பெனடிக்ட் காரில் அம்மையுடன் நாங்கள் எல்லோரும் புது வீட்டுக்கு வந்தோம்.என் மனைவி விளக்கை ஒர் கையிலும் ,ஒரு குடம் தண்ணீரை இடுப்பிலும் சுமந்து வீட்டினுள் வைத்தாள்.என் அம்மையை மெதுவாக நடத்திக் கூட்டிக்கொண்டு போய் ஒரு ரூமில் இருக்க வைத்தோம்.இன்றும் அந்த ரூமின் பெயர் ஆச்சி ரூம் .

கணபதி ஓமம்,பூஜை யெல்லாம் நடந்து கொண்டிருந்த அந்த வேளையில் எங்களை பிள்ளைகளுடன் கிழே அமரச் சொன்னார் பூஜை நடத்திய அய்யர்

பாலைக் காய்ச்சி எல்லோருக்கும் தந்தார்கள். நண்பர்கள் அனைவரும் வந்தார்கள்.

சாயந்திரம் கட்டில்களை வீட்டினுள் போட்டோம்.அம்மை இருக்கும் ரூமை எப்படி அமைத்தேன் தெரியுமா ? எல்லா ரூம்லயும் மொஸைக். அந்த ரூம் மாத்திரம் தரை ஓடு.அம்மைக்கு மற்ற தரைகள் எதுவும் ஒத்து வராது வயதானதால். கட்டில் பக்கத்தில் ஸ்விச்.பாத் ரூம்.யூரோப்பியன் க்ளோஸட். மற்றும் எல்லா வசதிகளும் அந்த ரூமில் அம்மைக்காகவே அமைக்கப் பட்டிருந்தது....

வீட்டைக் கட்டிய கொத்தனார் ,கடுக்கரையில் எங்க வீட்டைக் கட்டும்போது கையாளாக வேலை பார்த்த நிருபதி. மர வேலை செய்தவர் கடுக்கரை இசக்கிமுத்து ஆசாரி. வீட்டின் பெயரான “பகவதி” ஐக் சிவப்புக் கல்லில் மைலாடியில் பதித்து கொண்டு வந்தவர் தான் அம்மி,ஆட்டொரல்,திருவை தந்தார்.அவர் சுப்பையாத் தேவர்.கடுக்கரை ஐயப்பன் தான் பொறுப்பாய் இருந்து எல்லா வேலைகளையும் கவனித்தவன்.

வீட்டுக்கு வந்த எல்லோரும் விடை பெற்றுப் போனதும் வீட்டுக்குள் போனேன்.

அம்மை என் ரூமில் இருந்ததைப் பார்த்து என்னம்மா இங்க இருக்க எனக் கேட்டேன்.

நான் இந்த ரூமிலயே இருக்கேன் என்றாள்.

ஏனம்மா...?

அந்தக் கக்கூஸ் எனக்கு புதிசு... பழக்கமில்ல....

அம்மை 15 நாட்களுக்கும் மேலாக அங்கேயே தான் இருந்தாள்.... நிருபதியை கூப்பிட்டு அம்மையின் ரூமில் கக்கூஸை மாற்றச் சொன்னேன்.

அவர் என் அம்மையிடம், “நீங்க 3 நாள் யூஸ் பண்ணிப் பாருங்க.80 வயசுல இதுதான் கொள்ளாம். புடிக்கல்லண்ணா மாத்திரலாம்.”

அம்மையும் சம்மதித்து அதன்படியே யூஸ் பண்ணி்னாள்.....பிடித்து விட்டது.

என் மகள் ஆச்சியைப் பாத்து, வீட்டுக்கு பேரு உன் பேரா என் பேரா எனக் கேட்டாள்

என் பேருதான்....ஒம் பேரு ரெஜி-ல்லா....தாத்தாக்குப் பேருல்லா வச்சுருக்கணும்....

நான் “அப்பா கட்டின வீட்டுக்கு பேர் ‘ஈஸ்வரி பவனம்’தானே. அது அவங்க அம்மாவின் பேர் தானெ”

“கடுக்கரையில் வச்சு தட்ல நான் இருந்தேன்லாம்மா. அப்பம் மேசையில் ‘பகவதி பவனம்’ என எழுதி வைத்திருந்ததைப் பாத்துட்டு அப்பா என்ன சொன்னா தெரியுமா...ஏய் தங்கம்!...நான் வீடு கட்டி எங்க அம்மையின் பேரை வச்சிருக்கேன்.... நீயும் அதுபோல வீட்டக் கட்டிட்டு ஒன் அம்மையின் பேரை வைக்கணும்”

“ அப்பாவின் கனவை நினைவாக்கினது நான் தானேம்மா.....ஒம்பேர வைக்கச்சொன்னதே ஓம் மாப்பிள்ள தானெ அம்மா....” அம்மா மிகவும் ரசித்துச் சிரித்தாள்.

“ எம்மா... ஓங்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன்...அப்பா எப்பவும் நீ கேட்கும்படி சொல்லுவாள்ளா...பாப்பாத்தி நான் போன பிறகு இருக்க மாட்டா. என் உசிரு போனதும் அவ உயிரும் போயிரும்..ஒரு பயலையும் நம்பி அவ இருக்க மாட்டா...அப்பா போய் பத்து வருஷம் ஆச்சேம்மா.....” மிகவும் ரசித்து வாய்விட்டு பழசை நினைத்து மகிழ்ந்தாள்.

“எம்மா உனக்கு எந்த மகனப் புடிக்கும்...”

“எல்லாரும் என் வயத்தில தான பிறந்தா......ஆனா தவசிருந்து பெத்தது முருகன்லா....ஒன் வீட்டு பால்காய்ச்சுக்கு வரல்லியே...”..அம்மையின் கண்ணில் நீர்....தமாசாய் பேசியது திசை மாறிப் போனதால்.....எல்லோருமே அமைதியாய் விட்டனர்.

என் மனம் பின்னோக்கிச் செல்கிறது....என் அப்பா எனக்கு வந்த ஒரு கடிதத்தில் வெளிநாட்டுக்கு ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினால் வேலை கிடைக்கும் என்பதைப் பார்த்து விட்டு என்னைத் தனியே அழைத்துப்போய்,“எங்கைய்ல சத்தியம் பண்ணு
இந்துக்காலேஜ விட்டு எங்கேயும் போகக்கூடாது....எனக்கு வயசாச்சு...எத்தனை நாள் இருக்கப் போறேனோ....எனக்கு அப்புறம் அம்மைய சரியா யாரும் பாக்கமாட்டா...நீ தான் அம்மையப் பாக்கணும்.அவளுக்கு உன்னதான் ரெம்பப் பிடிக்கும். தோப்பை அம்மாவுக்கு அப்புறம்தான் நீங்க யாராவது எடுக்கணும்....அவள் கை நிறைய காசிருக்கும்...நான் போனபின் யாரிட்டயும் கையேந்தக் கூடாது”....

அப்பா சொன்னது போல் தான் எல்லாமெ நடந்தது. மகாராணி போல் தான் கடைசி வரை வாழ்ந்தாள்.நான் அம்மைக்கு ஏதாவது வாங்கினால் ஏன் காசை இப்படி செலவாக்குக என்பாள்.

அவளிடம் தான் பிள்ளைகள் நாங்கள் வாங்கினோம்.

அந்த மகாராணியின் உயிர் வாடகை வீட்டில் போகக்கூடாது என அடிக்கடி என் மனைவி சொல்லிக் கொண்டிருப்பாள்.

கடுக்கரையில் அரண்மனை போன்ற வீட்டை தான் இருக்கும்போதே மாற்றி அமைக்க அனுமதித்தாள் எனது அம்மா.அது 3 தனி வீடாய் மாறியது. நல்லபெருமாள் காலனியில் ஒரு சின்ன வீட்டில் எனது அம்மா,நாங்கள் இருந்தோம்.ராசியான வீடு.

நச்சரித்துக் கொண்டே இருந்த என் மனைவியின் நியாயமான கனவு நனவாகி “பகவதி” என்றபெயரில் உருவானது. பகவதி என் அம்மா பாப்பாத்தியின் இன்னொரு பெயர்.

1989 ஆவணி மாதம் கல்போட்டு 1990 ஆவணி மாதம் பால் காய்ச்சினோம்.

வீட்ட கட்டிப் பார்......கட்டி விட்டேன்...எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் என் தாயை நான்தானே கடைசி வரை பார்த்தேன் என்பது எனக்கு மன நி்றைவாய் இருக்கிறது

Wednesday, September 14, 2011

1983-ல் B.Sc Mathematics படித்தவர்கள் 25 வருடத்திற்குப் பின் சங்கமமான நாளில் நான்

2008-ல் ஒரு நாள் காலையில் நான் வீட்டில் இருக்கும்போது என்னுடைய மாணவரும் என்னுடன் வேலை பார்த்தவருமான கணிதப் பேராசிரியர் சுவாமினாதன் என்னைப் பார்க்க வந்தார்.அவருடன் இன்னொருவரும் இருந்தார்.

“சார்,இவர் உங்க ஸ்டுடெண்ட்.என்னுடன் B.Sc Maths படிச்சான்”

“ரொம்ப சந்தோசம்..என்ன விசயமா வந்தீர்கள்”

“நாங்கள் 25 வருடத்திற்கு முன்னமே இந்துக் காலேஜ்ல பி.எஸ்ஸி படிச்சவங்கள் எல்லோரும் நாரூல்ல ஒரு இடத்தில் கூடப்போகிறோம்.சாயந்திரம் ஒரு 6 மணிக்கு மீட்டிங்க் நடத்துறோம்.அதில் நீங்கள் கலந்துக்கணும், வீட்ல மேடத்தையும் கூட்டிட்டு வரணும்”

எப்படி இது சாத்தியமாயிற்று என நான் கேட்டேன்.

“4 மாதங்களாகவே இதற்கான வேலைய ஆரம்பிச்சுட்டோம். எல்லோரையும் contact பண்ண முடியல...”

“ ரொம்ப ஆச்சரியமா இருக்கே சாமினாதன் நாம் தினமும் M.S University Study Centre-ல சந்திக்கிறோம். சொல்லவே இல்ல”

”நான் கண்டிப்பா வரணுமா.....நீங்க ரொம்ப strict -ஆக இருப்பதால் உங்களுக்கு தெரியுமே.படிச்ச எல்லோருக்குமே என்ன புடிக்குமா..? நான் அடிக்கக் கூட செய்திருக்கேன்.அதனால நான் வரணுமா சாமினாதா......”

“அப்படிச் சொல்லாதீங்கோ...நீங்க அப்படி இருந்ததனாலதான் சார் நாங்க இப்பம் நல்லா இருக்கோம்.நாங்க எங்க குடும்பத்தோட வந்து உங்கள் எல்லோரையும் அவர்களிடம் எங்கள் ஆசிரியர்கள் இவர்கள் எனக் காணிப்பதற்காகவே தான் சார் இந்த மீட்டிங்கை நடத்துறோம்”

“முடிந்தால் வருகிறேன்.....கண்டிப்பா வர முயற்சி செய்வேன்...”

அந்த நாளும் வந்தது. அக்சயா ஹோட்டலில் நடந்த கூட்டத்துக்கு ராமு,நான்,எனது மகன் முருகன் மூவரும் காரில் போனோம்.கொஞ்சம் நேரம் ஆனதால் கூட்டம் ஆரம்பித்து விட்டது.

எல்லோரும் பேசினார்கள்....எனது முறை வந்தது. “......மனக் கவலையோடு வந்த நான் உங்கள் ஒவ்வொருவரின் முகங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.....”

நினைவுப் பரிசு தந்தார்கள். கூட்டம் முடிந்தது. சாப்பிட ஆரம்பித்தோம். எல்லோரும் வந்து நலம் விசாரித்தார்கள்.அசோக் பத்மராஜ்,சுசீந்திரம் தாணுபிள்ளை,தனலட்சுமி....தங்கள் பிள்ளைகளயும் அழைத்து வந்து ,”இது எங்க சார்” எனக் கூறுவதைக் கேட்ட என் மனது நனைந்தது.

கல்லூரி விழா ஒன்றில் நான் ஒரு பரிசு வாங்கியது பற்றி ஒரு மாணவன் ஞாபகப்படுத்தினான்.
Analytical Geometry-பாடத்தில் அனைவரும் பாஸானதால் எனக்கு ஒரு புக் கிடைத்தது.

எனக்கு நாம் மிகவும் strict -ஆக இருந்தது விட்டோமோ....சில பழைய மாணவர்களைப் பார்த்த போது பழைய சம்பவங்களும் ஞாபகத்துக்கு வந்து மனசைக் கஷ்டப்படுத்தின.

சார், நீங்க அப்ப என் பென்னை என்னிடம் இருந்து பறித்து வெளியே எறிந்து விட்டீர்கள் ....
உங்க கிளாஸ் அமைதியாய் இருக்கும்லா. நான் என்னை அறியாமலே பாள்பாயிண்ட் பென்னை வைத்து சத்தம் வரும் படியாக க்ளிக்...க்ளிக்...என ப்ரஸ் பண்ணிக் கொண்டிருந்தேன்,......

சார்,என் நோட்ட மாத்ரம் பாத்து கையெழுத்துப் போடமாட்டீங்க சார்... ஏன் என்றால் ஒரு தடவை நான் Home Work -ஐ அடுத்த நோட்டப் பாத்து எழுதினத கண்டு புடிச்சிட்டீங்க

சார்,நீங்க என்னிடம் ஒரு மாசத்துக்கும் அதிகமாக பேசவே இல்ல....நீங்க போட்ட டெஸ்ட் நான் எழுதாமல் சினிமா பார்க்கப் போனது உங்களுக்கு தெரிந்து விட்டது....

சார்,நான் இப்ப ஆசிரியரா இருக்கேன்....நான் உங்களைதான் follow பண்றேன்.

என் மனம் லேசானது இதையெல்லாம் கேட்கும் போது....

சார், நான் என் தங்கிச்சியை B.Sc maths ல தான் சேர்த்தென்.எங்க அப்பா பெண்கள் கல்லூரியில் சேர்க்கணும்னு நினைச்சா...நான் தான் இந்துக் காலேஜ்ல maths department மட்டும் தான் ரெம்ப strict என அப்பாட்ட சொன்னேன்.....

எனக்கு எந்த விருதுகளும் கிடைக்க வேண்டும் என விரும்பிய தில்லை.ஆனால் விருதை விட மகிழ்ச்சி தரும் விமர்சனங்கள் ரொம்பவே சந்தோசத்தைத் தந்தது. நம்மை நம்பி சேர்க்கும் மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றக் கூடாது என்பது தான் என் எண்ணமாய் இருந்தது.

சக ஆசிரியர்கள் என்னை விமர்சிப்பது உண்டு.நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை.

எனது ஆசிரியர் ஒருவர் R.S.P. அவர் பிஸிக்ஸ் ஆசிரியர். ஒரு நாள் என்னைப் பார்த்து , “ பொன்னப்பா....நீ என்னோட மாணவன். ஒரு பயலும் நம்மள கண்டா பயப்படமாட்டாங்கான்.
உன்னக் கண்டா பயப்படுகான். எப்படிடே....நீ ஆளும் கட்ட....சின்னப் பையன் போல இருக்க. இத்தனைக்கும் எங்கிட்ட ரிக்கார்டு நோட்டுக்கு மார்க்கு வேற இருக்கு....நீ நல்ல prepare பண்ணி க்ளாஸ் எடுக்க....நல்ல பேரு இருக்கு உனக்கு...keep it up. I am very proud of you.”

என்னை ஊக்குவித்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

எனது சொந்தக்காரர் ஒருவரும் ஆசிரியர். அவரும் ஒருநாள் தன் சக ஆசிரியர்களிடம் என்னை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.என்னிடம் , “மச்சினா....வந்து 2 மாசம் கூட ஆகல்ல....பொழி பொழிண்ணு பொழிக்கியே.....”

எங்கள் துறைத் தலவர்கள் அனைவருமே எனக்கு ஊக்கமே தந்தாரகள்.

போற்றுபவர் போற்றட்டும்.... தூற்றுபவர் தூற்றட்டும்.....என்ற கவியின் வாக்குதான் எனக்கு தாரக மந்திரமாய் இருந்தது.என் மனச்சாட்சிப் படியே என் பணிதனை முடித்தேன் என்பதும் உண்மை.

என் அப்பா இந்துக்கல்லூரி நிர்வாகி்யாய் இருந்ததினால் நான் எப்படி வேலை செய்கிறேன் என்பதை அறிந்து என்னிடம், “ தங்கம்.... நீ நல்ல க்ளாஸ் எடுக்கியாம்..நல்ல பேரு இருக்கு. ஆனால் 3 மணியான உடனே வீட்டுக்கு புறப்படுகியாமே....இனி அப்படி செய்யாதே”

என் அப்பா ஆசைப்பட்டதால் தான் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தேன்.....இன்றும் ஒரு ஆளாய் இருக்கேன்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தானே.....

என் குவைத் பயணம்..............4

நானும் என் மனைவியும் கத்தார் ஏர்வேய்ஸ்-ன் இரண்டாவது விமானத்தில் ஏறி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் போய் அமர்ந்தோம். இப்போ அவள் ஜன்னல் பக்கம்.நான் நடு சீட்டில்.என் பக்கத்தில் எந்த நாடென்றே தெரியாத ஒருவர்.

மணி 1.விமானம் கிளம்ப வேண்டிய நேரம்.ஆனால் புறப்படவில்லை.1.25 மணிக்கு அப்புறம் தான் விமானம் பறக்க ஆரம்பித்தது....இது போல் காலையில் காத்திருந்து எங்களை சுமந்து போகாத விமானத்தை மனதுக்குள் திட்டினேன். காலையில் நடந்த தாமதம் யாரால் எப்படி ஏற்பட்டது.....எல்லாமே என்னால்தான்...50 நிமிட இடைவெளியில் ஒரு கணக்டட் ஃப்ளைட் இருந்தால் அதனை சூஸ் பண்ணியது நான் செய்த குற்றம் தானே....அனுபவம் இல்லாமை..
பாடம் ஒன்று படித்தோம்.கத்தார் ஏர்வேய்ஸ் மிக அழகாக என்னை சமாதானப்படுத்தியமுறை எனக்கு மிகவும் பிடித்தது.

குடிக்க தண்ணீர் தந்தாள் விமானப் பணிப்பெண்....சூடாக சேண்ட்விச் தந்தாள்....


நான் என் மனைவியிடம்,“ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் போது உன் பக்கத்தில் இருந்த அந்தப் பெண் யார்? எனக் கடைசியில் தானே தெரிந்தது.”

அவளது பெயர்......ஓய்வு பெற்ற IAS Officer-ன் மகள். ஊர் திருவனந்தபுரம்.ஒரு கான்ஃப்ரன்ஸுக்காக அமெரிக்கா போகிறாள். நாகர்கோவில் டாக்டர் ராமசாமியின் உறவினர். என் மனைவி அவளுக்கு தெரிந்த உறவினர்களின் பெயர்களைச் சொல்லவே அவளும் மகிழ்ந்தாள்...

என் மனைவி அவளிடம்,“ ஏன்... நெற்றியில பொட்டு வைக்கல..”

அவள், “ நான் ஜின்ஸும் பனியனும் போட்டதால் தான் பொட்டு வைக்கல்ல?” .

மனம் அசை போட்டது.

நேரம் சரியாக 2.25-க்கு குவைத்துக்கு விமானம் வந்து சேர்ந்தது....என் பை,அவளது பை
இரண்டையும் எடுத்து நான் முன்னே செல்ல அவள் பின்னால் வந்தாள்.

ஒரு பக்கம் Escalator.அதனை அடுத்து படிக்கட்டு. படிக்கட்டின் வழியே கீழே இறங்கி வந்தோம் .வெளி நாட்டவர் என அறிவிப்பு பலகை இருந்த இடத்தின் முன்னே நின்ற வரிசையில் நாஙகளும் சேர்ந்து கொண்டோம். என் முறை வந்தது.எங்களது பாஸ்போர்ட்,விசா எல்லாம் கொடுத்தேன்.அது உங்கள் மனைவியா எனக் கேட்டாள்.....

மேசையின் மீதிருந்த ஒரு மெஷினில் விரலை வைக்கச் சொன்னாள். பின் அடுத்த விரலை வைக்கச் சொன்னாள்.என் மனைவியும் விரலை வைத்தாள்.சீல் வைத்து எல்லாவற்றையும் தந்தாள். ஒரு விசில் சத்தம் கேட்டது. எதிரே இருந்த ஒரு சின்ன உயரம் குறைந்த கதவைத் திறந்து லக்கேஜை எடுக்க எங்கே போகணும் என கண்களால் தேடினேன்.

conveyar belt ஒன்றின் பக்கத்தில் எங்களோடு வந்த ஆட்கள் நின்றிருந்ததைப் பார்த்தேன். நானும் அங்கே போய் நின்றேன்.....லக்கேஜ் வரவில்லை....பகீரென்று இருந்தது.

நான் லக்கேஜ் வரவில்லையே என அங்கேயெ நின்று எழுதி கொண்டிருந்த ஒருவரிடம் கூற .’ எந்த ஃப்ளைட்’ என்றான். தோஹா என நான் சொல்ல அவன் இது அது இல்லை.
அவர் சுட்டிக் காட்டிய இன்னொரு இடத்திற்குப் போனோம்.

நின்றோம். எல்லாப் பொருள்களும் வந்து அவரவர்கள் பெட்டியை எடுத்துச் சென்றனர்.அவளையும் கிட்ட வந்து நிக்கச் சொன்னேன். ஒரு பேக் நகர்ந்து தாண்டிய பின் தான் தெரிந்தது அது எங்கள் பேக் என.நான் அதன் பின்னே போக எத்தனிக்கும்போது என் பக்கத்தில் நின்றவன்,”நில்லுங்கோ.....திரும்பவும் வரும்...” அது வந்தது. எடுத்தேன். ஒரு அட்டைப் பெட்டியும்,பேக்கும் வரவில்லையே..!

அதோ வருகிறது....நாங்கள் கட்டிய கயற்றின் நிறம் அடையாளம் காட்டியது தூரத்தில் வரும்போதே.....பெட்டி வந்தது....கடைசியில் சிறிது நேரம் கழிந்து பேக்கும் வந்தது...அப்பாடா.....நிம்மதி பெரு முச்சு விட்டேன். நல்ல காலம்.....

ஒரு ட்றாலியை எடுத்து அதில் லக்கேஜையும் கையில் இருந்த பைகளயும் வைத்து வெற்றிப் புன்னகையோடு நகர்ந்தோம்.

நீண்ட வரிசை....அதன் பின்னே நாங்களும் போய் நின்றோம்...

Scan பண்ணும் இடத்தில எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்....எங்கள் கண்கள் தினேஷைத் தேடியது....கணட உடன் நான் அவளிடம் கூற அவள், தினேஷ் அன்னா நிக்கான் என கூறிக்கொண்டே வந்தாள்.

எங்கள் அருகே வந்ததும் தினேஷும் சுதாவும் காலைத்தொட்டு வணங்கி வரவேற்றார்கள்.

தினேஷின் பக்கத்தில் ஒருவர்....அவர் தான் தோவாளையில் இருந்து மாதவன்....அவர் குரலைப் போணில் கேட்டிருக்கேன்.....அவர் கார் இருக்கும் இடத்திற்கு சாமான்களை தினேஸும் மாதவனும் எடுத்து வர நாங்கள் அவர்கள் பின்னால் போய் காரில் ஏறினோம்.

மாதவன் என்னிடம் வெயில் எப்படி இருக்கு எனக் கேட்க நான் அடுப்பின் பக்கத்தில் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்றேன்.

கார் போய்க்கொண்டிருந்தது. 120 கிலோ மீட்டருக்கு மேல் இங்கே போகக்கூடாது.குறிப்பிட்ட சில இடங்களில் கேமரா இருக்கும்.அது கூடுதல் வேகத்தில் போனால் பதிவு செய்து 20 K.D Fine காரின் உரிமையாளர் கட்ட வேண்டியதிருக்கும்.

சாமியிடம் போன் பண்ணி அவரிடம் நான் குவைத்துக்கு வந்த விவரத்தைக் கூறினேன்.அவருடைய ஹோட்டல் உடுப்பி -க்கு ஓணச் சாப்பாட்டு-க்கு வரச் சொன்னார்.போய் அவரைப் பார்த்தோம்.அன்பாக உபசரித்தார்.கடுக்கரை ராஜேஷ்-ஐப் பார்த்து நலம் விசாரித்தேன். சாப்பிட்டோம்....நன்றாக இருந்தது...

தினேஷ் இருக்கும் மங்காஃப்-க்கு வந்து சேர்ந்தோம். 103-ம் நம்பர் 9 மாடிக் கட்டிடம் முன்னே கார் நின்றது. லிஃப்ட் -ல் போய் 8-ம் தளத்திற்குப் போனோம்.

மாதவன் விடை பெற்றுச் சென்றார்.

பேரன் கிட்ட வரவே இல்லை.

சோர்வும் நிம்மதியும் சேர்ந்தால் வருவது தூக்கம் தான்.

உறங்கினேன் நன்றாக........

Tuesday, September 13, 2011

என் குவைத் பயணம்...............3

..குவைத் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் தொடர்ச்சி

விமான செக்கிங்க் முடிந்ததும் உள்ளே போனோம். அப்பொழுது ஒருவர் நீங்கள் கத்தார் ஏர்வேய்ஸ்-பயணிதானே. அதோ அந்தக் கேட் வழியே போங்கள் என்றார். நாங்களும் போனோம்.வாசலில் நின்றவர் அணிந்த உடையை வைத்து இவர் கத்தார் ஏர்வேய்ஸ் ஸ்டாஃபாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து அவளிடம் நான்,எங்கள் போர்டிங்க் பாஸைக் காண்பித்து எனக்கு தோஹா வரைதானே பாஸ் தந்திருக்கிறார்கள்.குவைத்துக்கு பாஸ் எப்பம் தருவாங்க ? எனக் கேட்டேன்.உடனே அவள் யாருக்கோ போண் பண்ணிக் கேட்டு என்னிடம் உங்களுக்கு தொஹாவில் தருவார்கள் எனக் கூறினாள்.

வேகமாகப் போய் விமானத்தின் வாசலின் அருகே போனதும் அங்கு நின்றிருந்த விமானப்பணிப்பெண்ணிடம் என் மனக்குறையைக் கூறினேன்

”உங்களிடம் இருக்கும் wallet, orange colour border -ல இருக்கும். அதனை தோஹாவில் இறங்கியதும் தெரியும்படி கையில் வைத்துக் கொள்ளுங்க.தோஹா-வுக்கு போகிறவர்கள் ஒருவாசல் வழியாக இறங்குவார்கள். உங்களை அடுத்த வாசல் வழியே இறங்க வழி காட்டுவார்கள். உங்களுக்கு அங்கே வேறொரு போர்டிங்க் பாஸ் தருவார்கள்.”

இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்தது...

விமானம்(எண்;-QR 241 ).....உள்ளே நுழைந்ததும் எங்களுக்கான சீட்டில் போய் இருந்தோம்.அது மூன்று பேர் இருக்கும் சீட்.ஜன்னல் ஓரம் வேறு யாரோ ஒரு பெண்.

35 நிமிடம் லேட்டாய் விமானம் புறப்பட ஆயத்தமானது. என் முன்னே இருந்த ஸ்கரீனில் "WELCOME to QUATAR AIRWAYS" தெரிந்தது.

பணிப்பெண்கள் ஒவ்வொரு சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்டை அணிந்திருக்கிறார்களா எனப்பார்த்து கட்ட வில்லையெனில் கட்டுவதற்கு உதவி செய்து வந்தார்கள்.

என் மனைவி என்னிடம்,“முதன் முதலாக இவர்களை பார்த்ததும் பொம்மண்ணுல்லா நினைத்தேன்”

32000 அடி உயரம் வரை விமானம் வானில் பறக்கும் என கேப்டன் அறிவித்தது என் காதில் விழுந்தது.கொஞ்சம் கொஞ்சமாக வானில் பறக்கும் உயரம் அதிகமாகி 32000 அடி வந்ததும் அதன் பிறகு அதே உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.சூடாய் இருந்த துணி(Hot wipes) தந்தார்கள். எதற்கு அது....! முகத்தை யாரோ துடைப்பதைப் பார்த்தேன்.

காலை உணவினை அந்த பொம்மைகளே கொண்டு வந்து தந்தனர்.

ரவஉப்புமா ,பன்னு,சாம்பார்,அடைப்பாயசம்,பைனாப்பிள்,பப்பாளி,தர்பூசனி,க்ரேப்ஸ்,மேங்கோ ஜூஸ்,ஜாம்,சீனி,மில்க்,.....எல்லாமே இருந்தது. சீனி இருந்த அந்த உருண்டை வடிவ பேக்கிங்கே பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கை துடைக்க துணி,குடிக்க தண்ணீர் எல்லாமே தந்தனர். Liquor தருவார்கள் கத்தார் ஏர்வேய்ஸ்ல என்றெல்லாம் சொன்னர்களே....!

எல்லோரும் டி.வி பார்க்கத் தொடங்கினர்.எனது பக்கத்தில் இருந்தவர்கள் மலையாள சினிமா,இந்திப் படம்,விஜய் நடித்த காவலன் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனோ தெரியவில்லை...எனக்கு எதிலும் இண்ட்ரெஸ்ட் இல்லை.டச் ஸ்க்றீன் தானே. ஒவ்வொன்றாய் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்......கத்தார் ஏர்வேய்ஸ் கண்ணில் பட்டது.

அதன் பிறகு நான் பார்த்தது இதுதான்

Flight Status----Time to Doha......3.36,

Distance to Doha.....1836 mile.,

Estimated Arrival Time......7.07 a.m

Fljght Information------Ground speed.....555 mph,

Altitude....29000 ft(8839 m)

out side temperature.....-27 degree C.

Aftr some time ,I found the particulars as-----

Altitude.....32000ft,seed....538 mph (866 km/h)......

17 நிமிடம் லேட்டாதான் தோஹா போய் சேரும் போல் தெரிகிறது. 7.45க்கு குவைத் ஃப்ளைய்ட்.அரை மணிக்கூரில் நமக்கு போர்டிங்க் பாஸ் கிடைக்குமா ? கிடைக்காட்டா என்ன செய்வது ஒண்ணுமே புரியல்ல......எப்படியும் நம்மை அவர்களே கூட்டிட்டுப் போய்விடுவார்களே....எப்படி நம்மை விட்டுவிட்டுப் போவார்கள்...! பயம் சற்றும் இல்லை...மனம் சமாதானம் ஆனது,

ஏதோ மனைவியிடம் சொல்ல பக்கத்தில் பார்க்க அவள் நிம்மதியாக உறங்கிட்டிருந்தா.....முந்தின நாள் தூங்கவே இல்லைல்லா.....மலர்களைப் போல் மனைவி உறங்குகின்றாள்...உறங்கட்டும்....இன்னும் இரண்டு மணி நேரத்தில் பேரனைப் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம் அவள் ஆள்மனதில் இருப்பதால் நிம்மதியாகத் தூங்குகிறாள்.

என்னுடைய வாச்சைப் பார்த்தேன்.மணி 9. தோஹாவில் லேண்டாகப்போகிறது என்ற அறிவிப்பு......அதன் பிறகு 40 நிமிடம் கழிந்து லேண்டானது.விமானத்தை விட்டு வெளியே வந்ததும் காத்திருந்தோம்.ஒரு பஸ் வந்தது.இன்னொரு இடத்தில் இறக்கி விட்டார்கள். சரியான வழிகாட்டுதலால் ட்ரான்ஸ்ஃபெர் செக்ஸனில் போய் போர்டிங்க் பாஸ் கேட்டேன்.

இடி தலையில் விழுந்தது போல் இருந்தது.the flight has gone.We announced your name. Where did you go?

என் முகம் பேயறைந்தது போலிருந்தது.என்னவோ சொன்னேன்.என்ன சொன்னேன் இப்போ வரை சத்தியமாக எனக்கு ஓர்மையே இல்லை.

"You dont worry....you can go to Kuwait by next flight at 1 o'clock.Now the time is 8
come here again by 11.30 .I will give you boarding pass."

வயிற்றில் பால் வார்த்தது மாதிரி இருந்தது இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே...உயிரும் உணர்வும் வந்தது. அய்யோ லக்கேஜின் கதி என்ன ?

அவளிடமே அது பற்றி கேட்டேன்." we took it. it is safe.... dont worry"

அப்பாடா....நிம்மதி.......என்னையே அறியாமல்,”Thank you very much" என்றேன்.

அவள் என்னை கூப்பிட்டாள். "What is your time in your watch.?"

i told "it shows Indian time."

She asked me to adjust the watch to Doha time .I adjusted as she told.

பட படப்புடன் இருந்ததை அவள் கவனித்தாள். அவள் என்னிடம்,“ Go to the right hand side of you and take your breakfast at the restaraunt."

கீழ்படிந்த மாணவன் போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நானும் அவளும் ஒரு இடத்தில் போய் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

என் மனவியைப் பார்த்து,” என்ன பயந்துட்டியா?” கேட்டேன்.அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. ஆனாலும்,” நீங்க ஏங்கூடதானே இருக்கீங்க.நம்மளக் காணாம தினேஷ் பயந்திருவானே.அதான் எனக்கு பயமாக இருக்கிறது.”என்றாள்.

அப்பொழுது அந்தப் பக்கமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் எங்களிடம் தமிழில் என்ன ஃப்ளைட்டை விட்டு விட்டீர்களா எனக் கேட்டான். ஆமாம் என்று சொல்லி விட்டு எந்த ஊர் தமிழ் நாடா ? எனக் கேட்டேன்.ஸ்ரீலங்கா என்றான்.

அவன்,”நீங்கள் சாப்பிட்டீர்களா” கேட்டான். நான் என்னிடம் இந்தியன் மணிதான் இருக்கிறது எனக் கூறவே அவன்,”சாப்பாடு ஃப்ரீதான்...நீஙகள ஒரு துண்டு வாங்கீட்டு போங்கோ” சொன்னான்.

நான் மறுபடியும் அந்தப் பெண்ணிடமே போய் என்னிடம் இந்தியன் மணிதான் இருக்கிறது என சொன்னேன்.

அவள்,” Oh! I am very sorry. I have forgotten..." என்று ஒரு துண்டுத்தாளில்

“KAREN,PLS GIVE HIM 2 VOUCHER thanks !"என எழுதி தந்தாள்.

2 வவுச்சர் வாங்கி கொண்டு ரெஸ்டாரண்டில் கொடுத்தேன். ஒரு ப்ரட் ,முட்டை ஆம்ப்ளேட்,உருளைக்கிழங்கு ஃபிங்கெர் சிப்ஸ் தந்தான்.அன்று திருவோணம் என்பதால் அவள் முட்டை சாப்பிடவில்லை.தந்ததை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியை வேஸ்ட் பாக்ஸில் போட்டோம்.

என் மனவி,” நீங்க அந்த பொம்ப்ளேட்ட போய் சொல்லி தினேஷுக்கு போண் பண்ணுங்கோ.அவ எவ்வளவு அருமையாய் இருக்கா”

டெலிபோண் கார்டு வாங்கலாம்......கத்தார் மணி இல்லையே.....கேட்டுதான் பார்ப்போமே
போய் கேட்டோம். 500/-ருபாய்...20 நிமிடம் பேசலாம்......வேண்டாம்..வேண்டவே வேண்டாம்....

வாச்சைப் பார்த்தேன். மணி 9.இரண்டரை மணிக்கூர் இருக்கிறதே.....என்ன செய்ய...
எப்படியோ மணி 11.30 ஆனது....அந்தக் கௌண்டர் அருகே போனேன்.இப்போ அப்போதிருந்தவள் இல்லை, வேறொரு பெண் இருந்தாள்.

அவளிடம் போய் கேட்டேன்.12 மணிக்கு வாருங்கள் என்றாள். என்னை இந்தச்சமயத்தில் வரச்சொன்னதைச் சொன்ன உடனே போர்டிங்க் பாசைதந்து 16-ம் நம்பர் கேட்டுக்கு 12.15 மணிக்கு போகச் சொன்னாள்.

 


அங்கு போய் இருந்தோம்.12 மணிக்கே கூப்பிட்டார்கள் எல்லாவற்றையும் கொடுத்து லக்கேஜ் பற்றிக் கேட்டேன்.அவன் உடனே கம்ப்யூட்டரில் பார்த்து 3 பெட்டிகள் எனச் சரியாகச் சொன்னதால் மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.

கீழ்த்தளத்தில் எஸ்கலேட்டர் மூலம் இறங்கிக் காத்திருந்தோம்.ஒரு பஸ் வந்து அழைத்துச் சென்றது. விமானத்தில் ஏறினோம்.எண்:QR 140

கடைசி வரிசையில் போய் இருந்தோம்.ஒரு மணிக்குப் போக வேண்டிய விமானம் 1.25-க்கு புறப்பட்டது.

என் மனைவி,”எப்பம் குவைத்துக்கு இது போகும்” கேட்டாள்.

2.45 க்குப் போயிரும்

அவள் முகம் பளிச்சென்று மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.என் மனமும்தான்.

நாடு விட்டு நாடு வந்த முதல் அனுபவம் ,கத்தார் ஏர்வேய்ஸின் முறையான செயல் பாடு...
அனைத்துமே என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்

5 மணிக்கூருக்கும் அதிகமாக தோஹாவில் காத்திருந்த போது 11 மணிக்கு ஒருவர் எங்களிடம் வந்து விசாரித்தார்....லஞ்ச் ரெடியாய் இருகிறது....சாப்பிடலாமே.... வாருங்கள் என அழைத்தது விமானத்தை தவற விட்ட சோகத்தை அடியோடு மறக்கச் செய்து விட்டது...

முந்தின விமானத்தில் நாங்கள் இருந்த சீட்டில் ஜன்னல் பக்கம் இருந்த அந்தப் பெண் ஒரு research scholar.யாரது...? நாங்கள் இறங்கும் போதுதான் தெரிந்தது அவள் எங்களுக்குத் தெரிந்த ஒரு டாக்டரின் சொந்தக்காரர் என.......

 

Monday, September 12, 2011

என் குவைத் பயணம்............2



ஒரு மாத காலமாக குவைத்துக்கு போய் பேரனைப் பார்க்கப் போகும்போது என்னவெல்லாம் கொண்டு போகலாம் எவ்வளவு கொண்டு போகலாம் என விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கூறினார்கள். விமானப் பயணத்திற்கு நான் எடுத்த டிக்கட்டை எடுத்துப்பார்த்தேன். ஒரு நபருக்கு 23 கிலோ லக்கேஜுடன் 7 கிலோ கையில் கொண்டுபோகலாம்,அப்படியானால் 60 கிலோ எங்களுக்கு கொண்டு போகலாமே.

பேரனுக்கு செயின் செய்து சுதாவின் அப்பா எங்களிடம் தந்து கொண்டு போகச் சொன்னார்கள். அதைக் கொண்டு போலாம்,போகக்கூடாது என்று விதவிதமாகக் கூறினார்கள். என்ன ஆனாலும் ஆகட்டும் என்று கையில் கொண்டு போகும் பையில் வைத்து விட்டோம்.

நள்ளிரவுக்குப்பின் புறப்பட்ட கார் ராமு ஓட்ட 2.20-க்கு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது. காரில் தூங்கியதால் சீக்கிரம் வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு.

ராமு ஒரு ட்ராலியை எடுத்து வந்து எல்லாப் பெட்டிகளையும் ஒழுங்காக அடுக்கித் தந்தான் . என் வாச்சைப் பார்த்தேன். மணி 2.30.

CHECK IN என தகவல் பலகையில் காணப்பட்டதால் ட்ராலியை தள்ளிக் கொண்டு முன்னேறினேன். கூட்டம் கூடுதலாகவே இருந்தது.
வாசல் பக்கம் நின்ற ஒருவர் பாஸ்போர்ட், டிக்கட்டைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் எங்களிடம் தந்தார். உள்ளே போனதும் என் வலதுகை பக்கம் போகும்படியாக ஒரு அம்புக்குறி வழி காட்டியது . ஆனால் எங்கள் எதிரே நின்ற ஒருவன் இடது பக்கமாகப் போக கையைக் காட்டினான். சற்றுக் குழப்பத்துடன் அங்கே போனோம் .அங்கு ஒரு மெஷின் பெட்டிகளை ப்ளாஸ்டிக் பேப்பரால் பொதிந்து கொண்டிருந்தது. கட்டணம் 100/-. எனக்கு வேண்டாம் எனத் தோன்றவே அம்பு காட்டிய திசையிலேயேப் போனோம்

ஸ்கேன் பண்ணும் இடத்தில் போய் நின்றோம். அங்கும் வரிசையில் தான் நின்றோம். எங்கள் லக்கேஜ்கள் எல்லாவற்றையும் அங்கிருந்த ஒருவன் எடுத்து வைத்தான். அவையனைத்தும் வைத்திருந்த கண்வேயர் நகர்ந்து அடுத்த நிலைக்கு வந்ததும் இன்னொருவன் ட்றாலியில் எடுத்து வைத்தான்...அடுத்து எங்கே போகணும்....போர்டிங்க் பாஸ் எங்க வாங்கணும்.

என் கண்களில் QUATAR AIRWAYS போர்ட் தெரிந்தது. அங்கேயும் போய் வரிசையில் நின்றோம்.வரிசை நகர நகர நாங்களும் ஊர்ந்து போய் கொண்டிருந்தோம்..ஒருவன் இரண்டு ஃபார்ம் தந்தான் எதற்கென்றே என்னிடம் சொல்லல்ல. வருவதற்கு முன்னமே இதனையெல்லாம் தினேஷ் என்னிடம் கூறியிருந்தான்..சின்னச் சின்ன சந்தேகம் வரவே என் பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன். அவருக்கும் தெரியல்ல

ECR stamp affixed என்பதில் 2 கட்டம் (பாக்ஸ்).ஒன்று Yes....அடுத்தது No. எதில் டிக் பண்ணுவது.எனது பாஸ்போர்ட்டை ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்தேன்.எதிலும் எதுவும் இல்லை. அதனால் ’ ‘நோ’ என்பதில் டிக் பண்ணினேன்........... லக்கேஜ் எடை சம்பந்தமாக கூடுதல் எனக் கூறி திருப்பிக்கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த எனக்கும் சற்று சந்தேகம், நமது எடை மெஷின் காட்டிய அளவு சரியாக இருக்குமா..... கூடுதலா இருந்தா கொஞ்சம் சாதனங்களை எடுக்கணுமே..... எதை எடுப்பது.........

“ஓ நமச்சிவாயா”.......எனது மொபைல்........ராமுதான் பேசினான். அவன் வெளியே நாங்கள் பார்க்கும் தூரத்தில் பார்க்கக் கூடிய இடத்தில் நிற்பதாகக் கூறினான்.. வாருங்கள்......அழைத்தார்கள்..

அந்த மேசையின் அருகில் போய் பாஸ்பொர்ட், டிக்கட் எல்லாம் கொடுத்தேன். விசிட் விசாவில் போகிறீர்களா எனக் கேட்டாள் அலுவலகப் பெண். ஆமாம் எனக் கூறி விசாவைக் கொடுத்தேன்.PCC எடுத்தீங்களா?

அப்படின்னா என்ன அது? என நான் கேட்டேன். police clearance Certificate என்றாள். .’நான் எடுக்கல்ல. அதை எங்க எடுக்கணும்’. சைகையால் வெய்ட் பண்ண சொன்னாள்..

“என்னடா இது புதுக் கொடுமையாய் இருக்கு”.......என் மனைவியைப் பார்த்தேன்....... அவளதுமுகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது. அவளை சமாதானப்படுத்தினேன். இன்னொருவர் அந்த சமயத்தில் அங்கு வந்தார்.எங்க விசாவைப் பற்றியும் பி,சி.சி பற்றியும் கேட்டதில் இப்போ அதெல்லாம் வேண்டாம் என அவர் கூற ,எங்கள் பெட்டிகள் எடை பார்க்கப்பட்டது.

நல்லவேளை தடங்கல் இல்லாமல் 3 பெட்டிகளும் நகர்ந்து போனது.எல்லா பெட்டிகளிலும் டேக் கட்டினார்கள். கைப்பையில் கட்ட 3 ஆரஞ்ச் கலர் டேக் தந்தாள் போர்டிங்க் பாஸ் தந்தார்கள். அதில் TRV to DOHA என்று இருந்தது.

அதைப் பற்றி கேட்டேன். அவர்கள் டோஹா போய் சேர்ந்ததும் அங்கு தருவார்கள் எனக் கூறவே நாங்கள் சற்றுக் குழப்பமானமான மன நிலையிலேயே நகர்ந்தோம். வெளியில் நின்ற ராமுவைப் பார்த்து அவனை போகும்படி கையால் சைகை காட்டிவிட்டு விரைவாக இமிகிரேசன் கௌண்டருக்குப் போனோம்.

ஒரு நீண்ட வரிசை அங்கே போய் நின்றோம். வரிசை நகரவே இல்லை.இடைஇடையே வரிசையில் வராதவர்கள் எங்களுக்கு முன்னமே போய் இமிகிரேசன் முடித்துவிட்டு போய்க் கொண்டிருந்தார்கள். நான் அங்கிருந்த ஒரு ஊளியரிடம் இப்பமே மணி 4-00 ஆகிறது எனக்கு 5 மணிக்கு ஃப்ளைட்டில் ஏறணுமே....எனக் கூறினேன்

ஒருவழியாக கௌண்டர் அருகே வர முடிந்தது. விசிட் விசா.....ரிட்டேண் டிக்கட் இருக்கா எனக் கேட்க நான் எல்லாவற்றையும் கொடுத்தேன். அதன் பிறகு கஸ்டம் செக்கிங்க் முடிந்து 4.40க்கு விமானத்தில் ஏறினோம்........................................

(இன்னமும் முடிய வில்லையே.......தொடரும்).

Sunday, September 11, 2011

என் குவைத் பயணம்.............1



கடுக்கரைக்குப் போவது தள்ளிக் கொண்டே போனது. செப்டம்பர் மாதம் திங்கள் கிழமைப் போகலாம். ஆனால் ஏற்கனவே போட்ட ப்ளான் படி கடையில் போய் இரண்டு மாதத்துக்குத் தேவையான மருந்தினை வாங்க வேண்டுமே .8 -ம் தேதி இரவு ஒரு மணிக்குப் போகணும். அதிகாலை 5 மணிக்கு ஃப்ளைட்.அதற்கு முன்னால் மூன்று நாட்கள் தான் இருக்கு.திங்கள் காலை ராமு வந்தான். அவன் தான் ஒரு ஐடியா சொன்னான்.

“சார்,டேப்லெட்ஸ் நிறைய வாங்கணும்லா.எனக்குத் தெரிந்த கடைக்குப் போலாம்....”

அவன் சொன்னது போலவே கடைக்குப் போனோம்.மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு, “ எல்லாமே வாங்கித் தாறேன்.இப்பம் போயிட்டு 4 மணிக்கு வாங்களேன்” என்றான் ராமுக்கு தெரிந்த அந்த ஆள்.

“ராமு ....என்ன செய்ய எனக்கு 4 மணிக்கு காலேஜ்ல ஜெனரல் பாடி மீட்டிங்குக்கு போணுமே” என்றேன்.

“அதுக்கென்ன சார். நான் உங்கள காலேஜுல கொண்டு விட்டுட்டு மருந்து வாங்கிட்டு வாறேன்”

ஒருவழியாய் மருந்து வாங்கியாச்சு.
செவ்வாய் காலை 10 மணி யளவில் கடுக்கரைக்குப் போகத் தயாரானேன்.

“எங்க போறீங்க கடுக்கரைக்கா .....எனக்கு தெரிசனம்கோப்புக்குப் போணுமே.நானும் வாறேனே..”சொன்னாள் என் மனைவி

ஒரு மணி நேரம் கழிந்தது. தெரிசைக்கு அவளது அண்ணனின் வீட்டுக்குப் போனோம்.அவளும் கடுக்கரைக்கு வருவாள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

“ஓம் நமச்சிவாயா.”..என் மொபைல் சத்தமாய் பாடி என்னை அழைத்தது.

“சார், நான் கோபாலகிருஷ்ணன் பேசறேன்...வீட்டிலதானே இருக்கீங்க”

“நீங்க எங்க இருக்கீங்க கோபாலகிருஷ்ணன்” இது நான்.

“நான் தெரிசனம்கோப்பில இருக்கேன் சார்”

“நானும் இப்ப இங்கதான் பஞ்சாயத்து தலைவர் மணி அண்ணன் வீட்டுல இருக்கேன்”


எனக்கு ஒரே ஆச்சரியம்.


கோபாலகிருஷ்ணன் வந்தார்.பழைய மாணவர் அவர்.மங்களூரில் இருந்து நாலு நாள் லீவில் வந்தவர் என்னையும் அவரது மிக பிஸியான நேரத்தில் பார்க்க நினைத்தது சந்தோசமாக இருந்தது.எனக்கு NHM writer-என்ற ஒன்று இருக்கிறது.அதனை டவுண்லோடு செய்தால் தமிழில் பதிவு செய்யமுடியும் என சொல்லித்தந்தவரே அவர் தான். மேலும் முகனூல் அனுபவமும் அவரிடம்தான் முதன் முதலாய் ஆரம்பம் ஆனது. எனது ஒய்வு நேரம் இனிமையாய் இருக்க மிகவும் உதவியாய் இருப்பது மட்டுமல்ல. என் தமிழ் என்னை சோர்வில்லாமல் வாழவும் வைக்கிறது. பொழுதுகள் ஒருவித அர்த்தத்துடன் எனக்கும் போகிறது.
கொஞ்ச நேரம் பேசிவிட்டு நான் கடுக்கரைக்குப் போக வேண்டியிருந்ததால் கோபாலகிருஷ்ணனிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்.
நான் மட்டுமே கடுக்கரைக்குப் போனேன்.அவள் என்னுடன் வரவில்லை.பிறந்த வீடல்லவா....தனது இருபது வயது வரை வாழ்ந்த,நடந்த,விளையாடிய,பழகிய ஊரல்லவா.......

வடக்குவாச்செல்லி அம்மன் கோயிலுக்குப் போனேன்,போட்டோ எடுத்தேன்.திருப்பணிக்குழு தலைவர் கீழத்தெரு திரு.காந்தி வெயிலில் தன் 80 வயதிலும் நின்று கொண்டு இருந்ததைக் கண்டேன்

ராஜேந்திரன் வீட்டுக்குப் போய் அவர் தந்த மூன்று புஸ்தகங்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி தெரிசைக்கு வந்து ரவியின் வீட்டில் மத்தியானச் சாப்பாடை முடித்து விட்டு எங்க வீடு வந்து சேர்ந்த போது நேரம் மணி 2.40.


வாங்க வேண்டியது இனி ஒன்றும் இல்லை.

நேரம் போனது.

தினேஷ் மருந்துகளும் வேறு சிலவற்றையும் வாங்கி வரச்சொன்னான்

அடுத்த நாள் திரும்பவும் கடைக்குப் போய் தேவையானதை வாங்கினோம்.

ஒருவழியாக எல்லாம் வாங்க வேண்டியதை வாங்கியாச்சு.
பார்சல் பண்ணணும் அது ஒன்றுதான் பாக்கி. வியாழன் இரவு ராமு மற்றும் பேரன்கள் காளீஸ்,அறிதி மூவரும் அழகாக பார்சலை நல்ல முறையில் கட்டி முடித்தார்கள்.
இரவு யாருமே தூங்கவில்லை. 12.45 மணிக்கு காரில் புறப்பட்டுப் போனோம் திருவனந்தபுரத்துக்கு..............................(முடியவில்லை தொடரும்)

மதிக்கப்பட வேண்டிய ஒரு மனிதர்

கடுக்கரைக்குப் போய் வடக்கு வாச்செல்லி அம்மன் கோயில் திருப்பணியைப் பார்க்க வேண்டுமே குவைத்துக்குப் போவதற்கு முன்னால் என்ற என் எண்ணம் ஏனோ தள்ளிப் போய் கொண்டேஇருந்தது.

4-ஆம் தேதிப் போகலாம் என்று நினைத்து கொண்டிருந்த காலையில் ஒரு பெரியவரின் மறைந்த தகவல் வந்தது.அந்தப் பெரியவர் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர். வள்ளியூர்,நாங்குனேரி பகுதியில் வேலை பார்த்தவர்.அவர் அந்தப் பகுதி மக்களின் மதிப்பை அதிகம் பெற்ற ஒரு நல்லவர். ராஜாக்கமங்கலம் தான் அவரது சொந்த ஊர்.

அவர் ஒய்வு பெற்று வீட்டில் ஓய்வாக இருந்த நாளில் அவர் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது. காரில் வந்தவர் பெரும் செல்வந்தர்.சென்னையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு சினிமா தியேட்டரும் உண்டு.அவரது பிறந்த ஊர் நாங்குநேரிப் பக்கம் உள்ள ஒரு சின்ன கிராமம். அவர் அந்தப்பெரியவரின் முன்னே வந்து வணங்கினார்.

“சார்! நான் பள்ளியில் படித்த உங்கள் மாணவன்.என் பெயர்......”

‘நல்ல ஞாபகம் இருக்குப்பா.....நல்லா இருக்கியா? .உன்ன என்னால எப்படி மறக்க முடியும்’

“கணக்குப் பாடத்தில் நான் பாசானது உங்களால் தான்.என் மண்டையில் கணக்கு ஒண்ணுதான் ஏறாது”

‘என்ன விசயமா என்னைப் பாக்க வந்திருக்க....’

“நான் எங்க சொந்த ஊரில் கல்லூரிக் கட்டி நடத்திவருகிறேன்.நான் சென்னையில் இருந்துகொண்டு கல்லூரியை நல்ல முறையில் நடத்துவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நான் தான் கல்லூரிச் செயலாளர்.நீங்கள் கல்லூரிச் செயலாளராக இருந்து எனக்குப் பதில் எனது பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் சார்.எங்கள் ஊரில்
உள்ளப் பள்ளிக்கூடத்தை நல்லமுறையில் நடந்திட காரணமே நீங்கள் அங்கே H.M -ஆக இருந்ததுதான்.”

வற்புறுத்தல் காரணமாக சம்மதித்த அவர்,‘ வருகிறேன்.எந்தப் பணப்பொறுப்பையும் எடுக்க மாட்டேன்.....ஆனால் இனிமேல் என்னால் அங்கெல்லாம் வந்து தங்க முடியாதே...’

“கல்லூரியில் இருந்து கார் தினமும் உங்க வீட்டுக்கே வந்து உங்கள கூட்டிற்றுப் போயிரும். பணப்பொறுப்புக்கு வேற ஆள போட்ரலாம் சார்”

கல்லூரிச் செயலாளர் ஆனார் .அவர் கல்லூரி செயலராக இருந்தபோது என்னை கணிதப் பாடத்துக்கு லெக்சர் தேர்வுக்கு அழைத்தார்.நான் அந்தத் தேர்வு நடத்த அவர் போகும்போது என்னை அவருடன் கூட்டிக் கொண்டு போனார்.காரில் போகும்போதுதான் இந்த விசயத்தை என்னிடன் சொன்னார்.

நல்ல மனிதரின் மறைவு வருத்தமாக இருந்தது.ஆகவே கடுக்கரைக்குப் போகும் எண்னத்தை விட்டுவிட்டு நான் அவரது உடல் இருந்த அவளது மூத்தமகளின் வீட்டுக்கு என் மனைவியையும் அழைத்துக் கொண்டு போனேன்.அந்த வீட்டின் முன்னே இருந்த கூட்டமே அவரது பெருமையயும் பண்பையும் பறை சாற்றிக்கொண்டிருந்தது.

என்னை அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்காமல் பார்த்த என் கல்லூரி நண்பர், “பொன்னப்பா..நீ எப்படி இங்க வந்த....உனக்கு அவரத்தெரியுமா?”கேட்டான்

நான் விசயத்தைக் கூறினேன். அவன் அவரது சொந்தக்காரன்.

அவன் மறைந்தவரைப் பற்றி பெருமையாக சில விசயங்களை என்னிடம் கூறினான்.

அதனைக் கேட்ட எனக்கு பெரியவரின் மீதுள்ள மதிப்பு மேலும் அதிகமானது.

அந்தப் பெரியவருக்கு இரண்டு சகோதரர்கள்.அதில் அண்ணன் காலமான பின்பு  பிறந்தஅண்ணனின் பெண் குழந்தையை தனது மூத்த மகள் போல் வளர்த்து டாக்டருக்குப் படிக்க வைத்தார்.தனது 3 மகளையும் டாக்டராக்கினார்.தம்பியும் ஒரு டாக்டர். தம்பியின் திடீர் மறைவு  மேலும் சுமையைக் கூட்டியது.சற்றும் மனம் தளராமல் தம்பியின் மகனுக்கும் தந்தையாக இருந்து ஒரு மகனுக்குச்செய்ய வேண்டியவற்றை மிகச் சரியாகச் செய்தார்.அவனுக்கு கடுக்கரையில் இருந்து ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து ஒரு படித்த பெண்ணைப் பார்த்துப் பேசி திருமணமும் நடத்திவைத்தார்.அந்த மகன்தான் தந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்தான்.இறந்தவரின் வயது78.அவரது பெயர் ஆறுமுகம்பிள்ளை.

தோன்றினால் புகழோடு தோன்றுக என்ற வாக்கினை மெய்ப்பித்தவர். .தியாகத்தின் திரு உருவமே அவர் தான் என்று கூறும்படி வாழ்ந்த அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இதனை வாசிப்பவர்கள் எல்லோருமே வேண்டி வணங்குவோம்.

மதிக்கப்பட வேண்டிய ஒரு மனிதர்.......இல்லையில்லை......மாமனிதர் அவர்.

Thursday, September 8, 2011

என்னுடன் ஆசிரியராக வேலை பார்த்த என் மாணவர்கள்.

நான் நேற்று 7-9-2011 அன்று காலையில் இந்துக்கல்லூரிக்குப் போனேன்.

தண்ணீர் குடித்தாலோ,சுடு நீர் குடித்தாலோ பல்லில் கூச்சம் இருந்தது.கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் பிரசாத்

ஒருஹோமியோபதி மருத்துவர்.அவரிடம் ஏற்கனவே வாங்கிய மருந்தில் என் பல்லில் எற்பட்ட கூச்சம் போய்விட்டது. அதை அவரிடம் சொல்லி,“இனிமேல் பல் கூச்சம் ஏற்பட்டால் மருந்து வேண்டும். கொஞ்சம் அதிகமாவே தாருங்கள். நான் குவைத்துக்குப் போறேன்” . அவர் உடனே எனக்கு தெவையான மருந்து தந்தார். அதுவும் இலவசமாகவே தந்தார். எனக்கு மட்டுமல்ல..... எல்லோருக்குமே இலவசமாகவே கொடுப்பது வழக்கம் தான்.


என்ன செய்யலாம் குவைத்தில் 2 மாதம் பொழுதைப் போக்க.


கல்லூரியில் பணியாற்றும் காந்திநாதன் தந்த idea படி புஸ்தகங்களை வெளியில் வாங்கி வைத்துக் கொண்டேன். ஆசிரியர் ஆறுமுகப்பெருமாளும் வீட்டுக்கு வந்து கொஞ்சம் புக் தந்தார்.


ஆசிரியர் ராமகிருஷ்ணனைப் பார்த்து நான் விடைபெறும்போது,“ நான் எழுதும் blogg-ஐப் பார்ப்பீர்களா ? நான் என் ஆசிரியர் (உங்க அப்பா) பெயர் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். படியுங்கள் எனக் கூறினேன்.


ஆறுமுகப்பெருமாள் என்னிடம்,“ சார்.... எத்தனை வருடம் உங்களுடன் பழகியிருக்கிறேன். என் பெயர் ஒரு இடத்தில் கூட இல்லையே!” என்றார்.


“ அப்பம் நீஙக எல்லாம் படிச்சீங்களா....” என்று கேட்டேன்.


படித்ததைச் சொன்னார் . குவைத்துப் போகும் சமயம் ஒரு ரசிகர் கிடைத்து விட்டார் . மிக்க மகிழ்ச்சி.


அவரைப் பற்றி என் வரிகள்:-

எனது மாணவர் இவர்.

என்னுடன் பணியாற்றியவர். இப்போ H.O.D of Computer Science.He is a very good teacher. இவர் ஆராய்ச்சி செய்து Ph.D பட்டம் பெற்றவர்.M.S. University Convocation- நிகழ்ச்சியில் ஒரே ஒரு தடவைதான் நான் கலந்து கொண்டேன். அது இவர் டாக்டர் பட்டம் வாங்கிய அந்த ஃபங்க்ஸன் தான்.


இவர் சிங்கப்பூர் செமினாரில் கலந்தது ஒரு முக்கியமான பெருமை தரும் நிகழ்ச்சி.பல செமினார்களை நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரியில் International Seminar ஒன்று நடத்தினார்.

நான் பணியாற்றிய சமயத்தில் என்னுடன் கல்லூரிக்காக முழுக்க முழுக்க ஈடுபாட்டோடு துணை நின்று எங்கள் பணியில் எந்தத் தவறும் ஏற்படாதவாறு

பார்த்துக் கொண்ட சிலரில் இவர் முக்கியமானவர்.


யார் என்ன சொன்னாலும் பொறுமையாக இருப்பவர்.அதிகமாக இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

தன்னுடைய முயற்சியால் இன்னமும் பெரும் புகழ் அடைய ஆண்டவன் அவருக்கு அருள் புரிவான்.

நான் ஓய்வு பெறுவதற்கு முன் என் மன அமைதிக்காக என்னுடன் பல கோயில்களுக்கு வந்தவர்.என் மகளின் திருமணத்துக்கு அவரால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தவர்.


அவரது பெயரும் என் அப்பாவின் பெயரும் ஒன்றே. நான் ஏதாவது அவரைப் பற்றி சொன்னால் ,“ஞாபகம் வச்சுங்கோ என் பெயர் என்னண்ணு, ஒங்க அப்பாவாக்கும்”, என கூறுவதை மிகவும் ரசிப்பேன்


அவரைப் போன்று அவரது மகனும் மகளும் எங்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

என் மாணவர்களில் இந்துக்கல்லூரி ஆசிரியரகள்.

1. Dr.S.ஆறுமுகபெருமாள்

2. P.சுவாமிநாதன்

3.T.தனலெட்சுமி

4.Dr.T.சிதம்பரதாணு

N.Siva is working as Principal of NSK Polytechnic College, Chenbagaramamputhur.

நானும் வெளிநாட்டுக்குப் போறேனே.......

2010 ஃபெப்ருவரி மாதம் ஒரு நாள் காலையில் என் மகன் போண் பண்ணி நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணியாச்சா ? எனக் கேட்டான். இல்லை யென்ற என் பதிலால் அவன் எரிச்சலடைந்ததை நான் உணர்ந்தேன்.

நானும் என் மனைவியும் பாஸ்போர்ட் எடுப்பதுபற்றி ஒரு முடிவெடுத்து நான் பாஸ்போர்ட் வாங்க என்னவெல்லாம் தேவை என்பதைத் தெரிந்து கொண்டேன். என் மனைவிக்கு T.C இல்லை. அதை வாங்க வேண்டும்.

குறத்தியறை பள்ளிக்கூடத்துக்குப் போனேன். நானும் படித்த ஸ்கூல் அல்லவா. இன்று அது வளர்ந்து மேல் நிலைப்பள்ளியாக இருப்பதைகண்டு மனசுக்கு சந்தோசமாக இருந்தது.

ஆபீஸ் வரந்தாவில் இருந்த ஒரு நோட்டீஸ் போர்டில் நன்கொடையாளர் பட்டியலில் என் தந்தையின் பெயர் இருக்கக்கண்டேன். கண்டதும் நான் அடைந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஒரு தந்தையால் ஒரு மகன் அடையும் பெருமை..... இதைவிட என்ன தரவேண்டும் எனக்கு. இதே பூரிப்பில் அலுவலகம் போனேன். என்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன் கடுக்கரை ஆறுமுகம் பிள்ளையின் மகனென்று.

என் தேவையைக் கூறினேன்.அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்... 40 வருடம் முன்னமே படித்தவள் ஏன் இவ்வளவு நாள் certificate வாங்க வில்லையென.

தேடி எடுக்கணும் நாள் ஆகும். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார்கள். விவரமாக அவளது பெயர், படித்து முடித்த வருடம் எல்லாம் எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

எனக்கு சந்தேகம் வந்து விட்டது. நாளானதால் கிடைக்காதோ?

நோட்டறி பப்ளிக்கிடம் ஒரு affidavict வாங்கினால் போதுமே. ஒரு முன்னாள் மாணவர் அட்வகேட் அசோக் பதமராஜ் -ஐப் போய் பார்த்து அதை வாங்கினோம்.அதில் என் மனைவியும் கையெழுத்துப் போடணும். போட்டுவிட்டு திரும்பும் வழியில் அவள், “எப்பமாங்கும் பாஸ்போர்ட் கிடைக்கும். இப்பம் ஒண்ணும் குவைத்துக்குப் போகாண்டாம். பையப்போனாபோரும்” என்றாள்

“இன்னமும் அப்ளை பண்ணவே இல்லையே. நாளக்காப் போகப்போறோம் .பாஸ்போர்ட் கிடைக்கணும். அதுக்கப்புறம் விஸா நமக்கு கிடைக்கணும்.....”

“நான் அதுக்குச் சொல்லல்ல....அவனுக்கு மகனோ மகளோ பிறந்தால் நாம் அங்கு போனால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமா இருக்கும் . இப்பம் அங்க போய் என்ன செய்ய ”... அவளின் ஆதங்கம் என்னை ஊமையாக்கியது.

ஃபெப்ருவரி மாதம் 16-ம் தேதி திங்கள் காலையில் நாங்கள் இருவரும் Collector office-க்குப் போய் பாஸ்போர்ட் அப்ளை பண்ண புறப்பட்டுகொண்டிருந்தோம்.‘ஓம் நமச்சிவாயா....ring tone’ என் போணில் இருந்து வந்தது.

“அப்பா.... நானும் சுதாவும் நேற்றைக்கு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அவளுக்கு காச்சல் இருந்தது. அதுக்கு வேண்டிதான் போனோம் .pregnancy test- பார்த்ததில் positive எனச் சொன்னாங்க......யாரிடமும் சொல்லாண்டாம். ஒரு வாரம் கழிந்து சொல்லலாம்....”

நான் அவளிடம் சொன்னேன். என் தழுதழுத்தக் குரலின் நெகிழ்வு அவள் மனசையும் நெகிழ வைத்திருக்கும். அவள் கண்களில் நீர் தழும்பி வழிந்தது.

Collector office-க்குப் போனோம். முறையாக இருந்ததால் எங்களது விண்னப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. Acknowledgement slip ஒன்று தந்தார்கள்.

வீட்டுக்குத் திரும்பிவரும்போது அவள்,“ பாஸ்போர்ட் எப்பங்க கிடைக்கும்.... சட்டுணு கிடைக்க என்னமாம் செய்ய முடியுமா....? ஏன் பாஸ்போர்ட்ட முன்னாடியே எடுக்கல்ல.... எத்தனை நாளா தினேஷ் சொல்லீட்டிருந்தான். இப்பம் நம்ம அவுக கூட இருந்தா எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்.” தாயுள்ளம்......என்னிடத்தில் குறை காண்கிறது......

‘சரிதானே. நான் எடுத்திருக்கணும்.........நாட்கள் நகர்ந்து அவர்கள் இந்தியா வந்து நாகர்கோவில் Dr. Punitha (George Mission Hospital) உதவியுடன் தாய்க்கு எந்த தொந்திரவும் கொடுக்காமல் சுகமாய்ப் பிறந்தான் எங்கள் பேரன். நான்கு வருடத்திற்குப்பின் 2010 அக்டோபர் 18 திங்களில் எங்கள் மனங்களை மகிழ வைக்க வந்தான் பேரன் பொன்சர்னேஷ்.

பேரன் ஜனுவரி 30-ம் தேதி குவைத்துக்குப் போனான் சுதாவுடன்.

ஜுனில் வந்தான் தாய் தந்தையுடன் இந்தியாவுக்கு மாமா சுதனின் கல்யாணத்துக்கு.

ஜூலையில் அவன் பெற்றோருடன் குவைத்துக்குப் போனான்.

ஜூலை மாதக் கடைசியில் எங்களுக்கு விசா வந்தது.

ஒரு L.I.C agent Mr.Lekhsmanan மூலம் குறத்தியறை பள்ளிக்கூடத்தில் என் மனைவியின் பெயர், வகுப்பு விவரங்கள்

அட்ங்கிய register book கிடைத்து விட்டது என தெரிந்தது.


எனது மனைவியின் பள்ளிக்கூட T.C -ஐப் போய் வாங்கிவந்தோம் .விசா கிடைத்து போலவே இதற்கும் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.நாளைக் காலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து குவைத்துக்கு செல்ல வேண்டும் பேரன்,மகன்,(மரு)மகள்-ஐக் காண.....

போய் வரட்டுமா ?

Monday, September 5, 2011

கடுக்கரையில் ஆசிரியர்கள்

கடுக்கரை ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் .பெயர் அனந்தபுரம் L.P.S

நான் ஒன்றாம் வகுப்பில் 1952-ல் படித்து 1956-57ல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.

அப்பொழுது தலைமை ஆசிரியர் காட்டுப்புதூர் ராமன்பிள்ளை சார்.அவர்களுடன் பூதப்பாண்டி சுப்பிரமணியபிள்ளை சார்,தெரிசனம்கோப்பு பகவதிப்பெருமாள் செட்டியார் சார், ஞானம் சுப்பிரமணியபிள்ளை சார்,திட்டுவிளயில் இருந்து ஒரு ஆசிரியர் இருந்தார்கள்.

தினமும் தேசியகீதம் தனை 5-ம் வகுப்பு மாணவிகள் பாடிய பின் தான் வகுப்புகள் ஆரம்பம் ஆகும்.அப்பொழுதெல்லாம் 5-ம் வகுப்பு மட்டும்தான் காலை,மாலை நேரம் நடைபெறும். 1-2-ஆம் வகுப்புகள் காலை மட்டும் நடக்கும்.3-4 ஆம் வகுப்புகள் மத்தியானத்திற்குப் பிறகு நடை பெறும்.

கடுக்கரை ஊரில் பிறந்த ஆசிரியர்கள்:-

வடக்குத்தெரு வடக்குவீட்டு ரா. சுப்பிரமணியபிள்ளை.

வடக்குத்தெரு வடக்குவீட்டு மா.கோலப்பபிள்ளை

வடக்குத்தெரு வடக்குவீட்டு மா.அணஞ்சபெருமாள் பிள்ளை(முருகன்)

தெக்குத்தெரு பூ.அருணாசலம் பிள்ளை

மேலத்தெரு ஆ.குமார்

மேலத்தெரு க.நாகெந்திரன்பிள்ளை.

தரிசு தங்கப்பன் மகன் வேலாயுதம் பிள்ளை

தெக்குத்தெரு டாக்டர் சொ.பேச்சினாதன்.

வடக்குத்தெரு நீ.தாணுகிருஷ்ணன்

வடக்குத்தெரு சு.மாதேவன் பிள்ளை

வடக்குத்தெரு அ. ஆறுமுகம் பிள்ளை

தரிசு வீட்டு ஆ. பொன்னப்ப பிள்ளை


Friday, September 2, 2011

கடுக்கரையில் ஓவியர்கள்

கடுக்கரையில் மணமேடை அய்யாவு யாரென்று கேட்டால் சின்னப் பிள்ளைகளுக்குக் கூடத்தெரியும். நன்றாகப் படம் வரைவார். அந்தக் காலத்தில் நாட்கருது பானை என ஒன்று உண்டு. அந்தப் பானையில் பல தெய்வப் படங்களை
வரைவார்கள். அதை வரைவதில் திறமையானவர் இவர்தான்.

மணமேடை அலங்காரம், பந்தலில் தாளினால் செய்த பூமாலைகளால் அலங்கரிப்பது எல்லாமே அந்தப் பெரியவர் தான். பெயின்றினால் பெயர் பலகையும் எழுதுவார்.கோயில் வாகங்களில் அழகாக பெயின்ற் அடிப்பார்.

மணமேடை அய்யாவே அதிசயிக்கும் வகையில் அவருடைய படத்தையே வரைந்து அதிசயிக்க வைத்த ஒரு ஓவியர் உண்டு. அவர் தான் கீழத்தெரு சொர்ணப்பன். அவர் ரேடியொ, ஃபேன் போன்றவைகள் பழுதடைந்தால் இலவசமாக சரியாக்கி கொடுப்பார்.கலைச்சுடர் என்ற தே.வே. பகவதியின் கையெழுத்து பத்திரிகைக்கு படம் வரைந்து கொடுத்தவர் இவர்தான்.

முறையாக ஓவியக்கல்லூரியில் படித்து சிறந்த ஓவியராக இன்றும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருப்பவ்ர். தகர வீட்டு அய்யாவு என்ற எம்.எ. பெருமாள். இரண்டு பிரபல கம்பெனியில் ஓவியராகசென்னையில் வேலை பார்த்தார். கைரேகை பார்ப்பதிலும் ஜாதகப் பலன்,வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதிலும் வல்லவர்.அவ்வப்போது பத்திரிகைகளில் பலன்கள் எழுதுவார். 27 நட்சத்திரப் பலன் பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இவர் கடுக்கரை பாஸ்கரனின் மைத்துனர். டாக்டர் ஸ்ரீகுமாரின் மாமனார்.

காந்தி என்ற ஓவியர்தான் கீழகோவிலில் வாசலில் சாமியின் பெயரை பெரியதாக எழுதினார் . இவர் ஆத்துப் பாறை குமரேசன் என்பவரின் மகன்.

கடுக்கரையில் கலைஞர்கள்

கடுக்கரையில் கலைகள் பலவற்றில் திறமையுள்ளவர்கள் பலர் வாழ்ந்தார்கள்.

தகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.
கட்டியாபிள்ளையும் இவருடன் சேர்ந்து இராமாயணத்தை ராகத்துடன் பாடுவார்.

செல்லம்பிள்ளையின் மகள்கள் மீனாட்சியும் பிச்சம்மாளும்( பாஸ்கரனின் மனைவி)நன்றாகப் பாடுவார்கள்.

நிமிடக்கவி உடையார்பிள்ளையின் மகன்கள் இருவர் வில்லிசை பாடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.ஒருவர் கே.ஒ.தங்கப்பா. இவரது தம்பி கே.ஓ.மாதேவன்பிள்ளை.

தங்கப்பா நவாம் டி.எஸ்.ராஜமாணிக்கம் நாடகக் கமபெனியில் நடிகராக இருந்தவர்.

மாதேவன் பிள்ளை அவரது அப்பாவைப் போலவே கவி எழுதும் திறமையுள்ளவர்.

மேலத்தெரு கான். முத்தையன் பிள்ளை அம்மன் பாடலை வில்லிசையில் பாடுவார். அவர் இருந்தவரை சித்தூர் கோயிலில் அவர்தான் வில்லுப்பாட்டு பாடுவார்.

கடுக்கரை கிராமத்தில் வாழ்ந்த கோபால ஐயர் இராமாயண வரிகளை அழகாகப் பாடுவார்.

வடக்குத்தெருவில் வாழ்ந்த கம்பர் ராமன் பிள்ளை இராமாயணத்தைப் பாராமல் பாடுவார்.

இசை படித்தவரும் பாடவும் திறன் படைத்த பாஸ்கரனின் மகள் சொர்ணம் என்ற பொன்னம்மாள் பெருமாள் நடனம் பயின்று நாகர்கோவிலில் ‘ரோஷினி நாட்டியாலயா’ என்னும் நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் தன் தந்தையின் நினைவாக தியாகராஜ ஆராதனை நடத்தி நாஞ்சில் நாட்டு கலைஞர்களை கௌரவப்படுத்துவார்.

சொர்ணத்தின் மகள் நடனமாடத்தெரிந்தவள். டாகடர் ஸ்ரீகுமாரின் மகளும் நாட்டியமும் நன்றாகத் தெரியும். பாடவும் தெரியும். டாக்டரும் நன்றாகப் பாடுவார்.அவரது மகனும் நன்றாகப் பாடுவார்.

கல்லூரிக் கல்வி

காலையில் ஒருநாள் எப்போதும்போல் என் உறவினரான 80 வயதுப் பெரியவர்
காந்தி அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தேன். கல்விமுறையினைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கேட்டார் பி.யு.சி எந்த ஆண்டு ஆரம்பமானது.எந்த ஆண்டில் முடிந்தது.
1955-ல் ஆரம்பம். 1981 -ல் முடிந்தது.

B.A ,B.Sc -ல் major 1 பாடம், ancilliary 2 பாடம் என 3 பாடங்கள் எங்கள் காலத்தில் படித்ததாக நான் கூறினேன்.3 வருடம் படிக்கணும். முதல் வருடம் பல்கலைகழகத் தேர்வு கிடையாது. எம்.எ, எம்.எஸ்ஸி 2 வருடம் படிக்கலாம்.50% மார்க்கு எடுத்தால் தான் பாஸ்.சில பல்கலைகழகங்களில் 35% எடுத்தால் பாஸ்.அது 3rd class. கல்லூரியில் வேலைக்கு போகணுமானால் 50% இருக்கணும்.

1950 களில் கல்லூரியில் Intermediate 2 வருடம் படிக்கணும். அதன் பிறகு B.A,B.Sc
2 வருடம் படிக்கணும்.

B.A(Horns) ல் 3 வருடம் படிக்கலாம். அது எம்.எ -க்கு சமமானது. பாஸாக 40% மார்க் எடுக்க வேண்டும்.

எம்.எ ,2 வருடம் படிக்கலாம் .பாஸாக 35% மார்க்கு எடுத்தால் போதும்.

1954-ல் இண்டர் மீடியேட் லாஸ்ட் பேட்ச்..இரண்டாம் வருடம் தோற்றவர்களுக்கு

மூன்று வருட பி.எ வகுப்பில் சேரலாம்.

1979-ல் தான் PUC last batch.

அதன் பிறகு பள்ளியில் ப்ளஸ் 2 முடித்து பின் பட்டப் படிப்பு கல்லூரியில்

படிக்கவேண்டும். இன்று வரை அது தொடர்கிறது

The Tamil Nadu State Board of School Examination evaluates students' progress by conducting two board examinations - one at the end of class 10 and the other at the end of class 12. The Board conducting class-XII Examinations in the state schools (both Govt. and private affiliated schools) is Tamil Nadu Board of Higher Secondary Education, which functions under the Tamil Nadu State Board of School Examination. The board started its functioning from the year 1982.


At the higher secondary level (classes 11 and 12) there is single unified stream leading to the award of the Higher Secondary Certificate (HSC). The scores from the class 12 board examinations are used by universities to determine eligibility and as a cut-off for admissions into their programmes.