Sunday, October 16, 2011

நான் வளர்த்த பப்பி

1990-ல் பொன்னப்ப நாடார் காலனியில் வீடுகட்டி தாமசஅத்துக்கு வந்தோம். அந்த பகுதியில் வீடு அதிகம் இல்லாத சமயம். காவலுக்கு பட்டி ஒண்ணு வேணும் என எல்லோருமே சொன்னார்கள்.தெரிசனம்கோப்பில் இருந்து குட்டி நாய் ஒன்றை மாமா அன்னக்கிளி மூலம் கொடுத்து அனுப்பினார்.

நாயே பிடிக்காது என் மனைவிக்கு...பயம்.என் வற்புறுத்தல் காரணமாக இரு மனதுடன் சம்மதித்தாள்.சங்கிலி ,அது வசதியாக பகல் படுக்க சாக்கு எல்லாம் உண்டு.சாப்பாடு தினமும் அவள் கொடுப்பதால் அவளையே சுற்றுச் சுற்றி வரும்.குட்டியாய் இருக்கும்போதே வந்ததால் அதற்கு பப்பி என்று பெயர் வைத்தோம்.எப்போதும் கட்டியே போடப்பட்டிருக்கும்.

அது வளர்ந்து பெரியதானதும் கட்டிப் போட்டால் சத்தம் போட்டுக் கொண்டே இருந்ததால் கட்டிப் பொடுவதை நிறுத்தினோம். கேட்டின் அடியே நுழைந்து வெளியே போய்விடும்.

என்னைக் கண்டால் பயந்து போய் பதுங்கி பதுங்கிப் போகும்.வெளியே அது போய்விட்டால் ஒரே ஓட்டம்....பின் மெதுவாக வரும். தீபாவளி சமயம்,கிறிஸ்மஸ் சமயம் வெடிச் சத்தத்துக்குப் பயந்து வீட்டுக்குள் வந்து படுத்து விடும். தண்ணீரை எடுத்தால் வெளியே ஓடிரும். என் பிள்ளைகளை கிண்டல் பண்ணுவதற்காக அடிக்கடி நான் சொல்வது “ இந்த வீட்டில் நான் சொன்னால் கேட்கும் ஒரே ஜீவன் பப்பி தான்”

அடிக்கடி வெளியே போய் மற்ற பட்டிகளுடன் சண்டை போட்டு கடி வாங்குவது தான் வாடிக்கையானது.பக்கத்து வீட்டுப் பட்டி அறிவான ஒன்று. அது அந்த வீட்டு அம்மாளுடன் எங்க வீட்டுக்கு வரும்.அப்போது பப்பி அதனுடன் சண்டையிட்டு துரத்தி விடும்.அந்த பட்டி ஒரு காலை பப்பியின் மேல் வைத்தாலே பப்பி க்ளோஸ்தான்.

ஒரு நாள் வெளியே போன் பப்பி வரவே இல்லை. சர்க்கஸ் நடந்த நேரம். யாரோ பப்பியை காசுக்கு பிடித்து வித்திருப்பான் சிங்கம்,புலியின் உணவுக்காக.

பல இடங்களில் தேடினோம்......கவலையாய் இருந்த நேரத்தில் மாமாவும் சிவனடி சேர்ந்த கவலையும் வந்தது. இந்தக் கவலை பப்பி இல்லாக் கவலையை சிறிதாக்கி விட்டது

No comments:

Post a Comment