Wednesday, October 19, 2011

18-10-10ல் பிறந்த பேரனின் முதல் பிறந்தநாள் குவைத்தில்

 
Posted by Picasa


18 அக்டோபர் 2010 மாலை 3.20 நான் வீட்டில் இருக்கும்போது தினேஷ் George Mission Hospital-ல் இருந்து சுதா சுகமாக பெற்றாள் என மொபைல் போணில் கூறினான்.என்ன பிள்ளை என அவனும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.பிள்ளை வரம் கேட்டு வந்ததனால் ஈஸ்வரன் பேர் போடணும்னு நினைத்திருந்தான்.குவைத்தில் scan பண்ணிப் பார்த்தால் என்ன பிள்ளையென சொல்லிவிடுவார்கள். இந்தியாவில் சொல்ல மாட்டார்கள்.சொல்ல மாட்டோம் என Hospital -ல் அறிவிப்பு பல இடங்களில் இருக்கிறது.ஆனாலும் எழுதித் தராமல் மனம் இருந்தால் சொல்கிறார்கள்...எப்படியும் வெளியே தெரிந்து விடும்.
என்னிடம் என்ன பெயர் வைக்கலாம் எனக் கேட்டபோது உன் இஷ்டம் எதுவோ அப்படியே செய் எனச் சொன்னேன். என் மகன் முருகன் அவன் பிள்ளைக்கு என்னைக் கேட்காமலே எனது பெயரை எழுதியேக் கொடுத்து விட்டான்.அதன் பிறகு என்ன செய்ய முடியும். அதனால் தினேஷிடம் என் பெயரை வைக்க வேண்டாம்.அம்மையின் பெயரை வைக்கணும்னு என் ஆசையைக் கூறினேன்......

ரோஜா மலரினை எப்படி அழைத்தாலும் அது மணம் வீசத்தானெ செய்யும். எப்படி அழைத்தாலும் அவன் பேரன் தானே. பொன்சர்ணேஷ் எனப் பேரன் அழைக்கப்பட்டான் .எனது அக்காள் மாத்திரம் பொன்னப்பன் என்றே இன்றும் அழைக்கிறாள்....

நேற்று 18-10-2011 எங்கள் பேரனின் முதல் பிறந்த தினம்

No comments:

Post a Comment