Sunday, October 23, 2011

குவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து.......2

 
Posted by Picasa


தினேஷ், சுதா, விழாநாயகன் பொன்சர்னேஷ் கேக் வெட்டத் தயாராக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்னால் உடுப்பி இண்டெர்நேசனல் உரிமையாளர் திரு.வெங்கட்ராமன் போற்றி,புத்தேரி திரு மகாதேவன் பிள்ளை, திரு.சக்திவேல் நின்று கொண்டிருந்தனர். நான் மிக மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிள்ளையின் மனைவி திருமதி சுபா சர்னேஷின் தாத்தா நீங்க இங்க நிக்கீங்க பேரனுடன் போய் நில்லுங்கோ என்று அன்பாக சத்தம் போட்டுக் கூற நானும் போய் நின்று கொண்டேன். தினேஷ் கேக் வெட்ட HAPPY BIRTH DAY SONG CD பாட எல்லோரும் கைதட்டி ஆரவரம் செய்தார்கள்.
மகிழ்ச்சியும் பெருமிதமும் கலந்த உணர்வோடு அங்கும் இங்கும் போய் வந்தவர்களில் தெரிந்தவர்களிடம் போய்ப் பேசிக்கொண்டிருந்தேன்.

கடுக்கரை ராமனாதனை அழைக்கவேண்டும் என நாங்கள் மிகவும் விரும்பி அழைத்தோம். வந்திருந்த அவனிடம் பேசினேன்.அப்பொழுது தினேஷ் ஒருவரை அழைத்து இவர்தான் மகாராஜபிள்ளை என அறிமுகப் படுத்தினான்.அவரது மனைவி சரஸ்வதி இந்துக்கல்லூரியில் IGNOU STUDY CENTRE ல் வேலை பாத்ததாக சொன்னார்.இப்போ இருக்கும் பாலாவின் கணவர் மாதேவன் பிள்ளையின் உறவினர் எனவும் சொன்னார்.

சாப்பிட ஆரம்பிக்கலாமே…….buffe system . ஒவ்வொருவரையும் அழைத்தாலும் யாரும் முதலில் வர முற்படவில்லை…….கேக் நன்றாக இருந்தது.அப்பொழுது தான் அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். கேக்கை வைத்து கொடுக்க நாங்கள் plate ,spoon வாங்கிவைத்திருந்தோம்.ஆனால் ஹோட்டல் பணியாளர்கள் எதுவுமே எங்களிடம் கேட்காமல் கேக்கை வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள்..அதற்கு முன்னால் தந்த கட்லெட்-ம் நன்றாக இருந்தது.

ஒரிஸ்ஸாவில் இருந்து ஒருவரிடம் பேசினேன்.புவனேஸ்வர் போன கதையை அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன்.பூரி ஜெகந்நாதர் கோயில் பற்றியெல்லாம் பேசினோம். குஜராத்துக்காரர் ஒருவரும் வந்தார். தூத்துக்குடி சிவராமனிடம் பேசிவிட்டு டேனியல் சார்,சக்திவேல் சார் எல்லோரையும் பாத்துப் பேசினேன். திருச்சி,கண்ணூர், என பல ஊர்க்காரர்கள் வந்து சிறப்பித்தனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகள் என் மனதில் தோன்றின. ஜாதி,மத பேதமில்லா மாநில வேறுபாடற்ற மொழி வித்தியாசமின்றி உறவுக்காரர்கள் போல் அன்போடும் ஈடுபாட்டோடும் கலந்து கொண்டது எனக்கு ஒரு வித்தியாசமான சங்கமம் போல் தோன்றி உற்சாகத்தைத் தந்தது.

ஒரு வழியாக பெண்கள் எல்லோருமே வரிசையாய் நின்று தேவையான அளவு naan,pepper chicken, butter chilly chicken,fried rice,vegetable salad, gopi manjuurian,curd rice-ல் விரும்பியதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நம்மூர் பந்தியில் விசாரிப்பது போல் நான் என் பேரனின் விருந்துக்கு வந்தவர்களை ஒவ்வொரு மேசைஅருகிலும் போய் நின்று பேசியும் சிரித்தும் பெருமைப் படுத்திக் கொண்டிருந்தேன்.

பூரித்துப் போய் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த என் மனைவியை அழைத்து சாப்பிட சொல்லி இருவரும் சாப்பிட்டோம்.எல்லாமே சுவையாக இருந்தன.Soft drinks, fruit salad with ice cream ருசித்து மகிழ்ந்தோம்.

பிரியுமுன் எல்லோரும் என் மகன்,மருமகள்,பேரனுடன் இருந்து போட்டோவும் எடுத்து விடைபெற்று சென்று கொண்டிருந்தனர்.

கடைசி வரை இருந்து மண்டபத்தை விட்டு நாங்கள் போகும்போது எங்களுடன் வந்தது புத்தேரி மாதேவன்பிள்ளை,தோவாளை மகாதேவன் ,ஆஸ்ராமம் மாதவன் குடும்பத்தினர்.

வெளிநாட்டில் நடக்கும் பேரனின் ஒரு வயது பிறந்தநாள் விருந்தில் நாங்கள் கலந்து கொண்டது ஆண்டவன் அருளினாலும் கருணையினாலும் மட்டுமே.

எல்லோரது அன்பை பெற்றிருக்கும் என் மகனை நினைத்து பெருமையாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.

எல்லாப் புகளும் இறைவனுக்கே.
நடப்பவை எல்லாம் இறைவனாலே.

No comments:

Post a Comment