Sunday, October 23, 2011

குவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து.......1

t
 
Posted by Picasa


20-10-2011 ஸீஸர்ஸ் பேக்கரியில் order பண்ணின கேக்கை வாங்கீட்டு விழா நடக்கும் ஹோட்டலுக்குப் போனோம். lift -ன் பக்கத்தில் அறிவிப்பு சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.அது :- HAPPY BIRTHDAY PONSHARNESH PARTY ON 2nd FLOOR ......கோஹினூர் ஹோட்டலில் இரண்டாம் தளம் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. நீண்ட செவ்வக வடிவம் .வாசலின் பக்கத்தில் உள்ள சுவரில் தெர்மோ கூல் அட்டையில் HAPPY BIRTHDAY எழுத்து வடிவத்திலும் PONSHARNESH என ப்ரிண்ட்டவுட்டும் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. ஹாலில் பத்துக்குமதிகமாக மேசை விரிப்புடன் ஒவ்வொரு மேசையின் முன் 5 செயர்களும் மற்றும் வெறும் செயர்களும் போடப்பட்டிருந்தன. சாப்பாடும் தயாராய் இருந்தன.

மேடையில் பட்டுத்துணியால் விரிக்கப்பட்டு அதன் மேல் கேக் பிரதானமாய் இன்னும் சிறிது நேரத்தில் உணவாகக் காத்துக் கொண்டிருந்தது. 6.30 மணிக்கு இருபது பேர் வந்தனர். அவர்களை தினேஷ் வரவேற்று இருக்கும் படி வேண்டினான்.

டேனியல் சார் தன் குடும்பத்துடன் வந்தார். அவரைக் கண்ட சர்னேஷ் அவரிடம் போக அழ அவர் வந்து இவனை எடுத்தார். 20 நாட்கள் கழித்துதான் அவரைப் பார்க்கிறான். அவரிடம் இருந்து அவன் எங்களிடம் கொஞ்ச நெரம் வரை வரவே இல்லை.

நான் வெளியே நின்று வரவேற்கலாமே என்ற எண்ணத்தில் கீழே வராந்தாவில் போய் நின்று கொண்டேன். தினேஷ் வந்து என்னை மேலே வந்து இருக்கும்படி கூறினான். நம் ஊர்ப் பாணியில் வரவேற்கவே நான் இங்கு நிற்கிறேன் என்று சொன்னவுடன் அவனும் மகிழ்வுடன் அங்கீகரித்த மனதோடு போய் விட்டான்.7-15 க்குப்பின் ஒவ்வொருவராக வந்து கொண்டே இருந்தார்கள்.அவர்களுடன் வந்த ஸ்ரீதர் என் கூடவே நின்றார். நாங்கள் அனைவரையும் கை கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தோம்.

எல்லோரும் வந்து விட்டனர். மணி 7.35….பிள்ளை தன் குடும்பத்துடன் வர நான் அவரை வரவேற்று அவருடன் Lift-ல் போனேன்.எல்லோரும் வந்தாச்சா…. சாமியை இன்னமும் காணவில்லையே என தினேஷிடம் கேட்க அவர் வந்து கொண்டிருக்கிறார்;பத்து நிமிஷத்துல வந்துருவார் எனச் சொன்னான்.

உடனே நான் அவரை அழைத்து வரலாமே எனக் கீழே போய் நின்றேன், சமயம்தான் போனதே தவிர அவரைக் காணவில்லை.இன்னொரு வாசல் இருக்கிறது என்று அதைத் தேடிப் போனேன். அப்போ தினேஷ் வந்து, அவர் வருவதர்க்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும். அவர் நாம் இருந்த வீட்டுக்குப் போய் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.
அப்பம் அவர் வந்த பின் கேக் வெட்டினால் நேரமாயிருமே. வந்தவர்கள் காத்திருப்பதால் ஒன்றுமில்லையா எனக் கேட்டேன் தினேஷிடம். No problem.இப்பம் வந்த்ருவாரு.
நான் தினேஷிடம்.” என்னை கேக் வெட்டும்போது மேடைக்கு அழைக்காதே.சாமியைப் பெருமைப்படுத்த அவரை மேடைக்கு கூப்பிடு.
நாம் தான் 18-ம் தேதி பிறந்த நாளன்று கேக்வெட்டி கொண்டாடியாச்சுல்லா
நான் சொல்படி நீ செய்யணும். நன்றி மறப்பது நன்றன்று., நாம் நம் நன்றியை காண்பிக்க நான் சொல்வது போலச் செய் என்றேன். அவனும் நான் சொன்னதைக் கேட்டு அவன் அவனுடைய உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். நானும் முழு மனதுடன் சம்மதித்தேன்.
“ நீ போய் starter-ஐக் கொடுக்கச் சொல்லிவிட்டு வா”, எனச் சொன்னேன். அவன் போய் அது போலவே எல்லாம் சொல்லிவிட்டு மறுபடியும் கீழே என்னுடன் வந்து நின்று கொண்டான். சாமியும் வந்தார்.அவருடன் ஹாலுக்குப் போனோம்.
மேடைக்கு வந்து கேக் வெட்ட தயாரானார்கள்.

நாங்கள் மேடையில் ஏறி நிற்க தினேஷ் கேக் வெட்டும்போது எல்லோரும் எழுந்து நின்று கை தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை காண்பித்தனர். ஸ்ரீதர் உற்சாகமாக கலந்து கொண்டார்.அவர் தான் உருளை வடிவமான ஒன்றை இயக்க கலர் பேப்பர் துண்டுகள் அழகாக பறந்து மேலே போய் பூக்கள் போல் எல்லோர் தலையிலும் விழுந்து மின்னியது. தோவாளை மகாதேவனின் கேமராவில் மணிகண்டன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.தினேஷின் கேமராவில் மகாதேவன் எடுத்துக் கொண்டிருந்தார்............

No comments:

Post a Comment