Tuesday, October 25, 2011

தீபாவளித் திருநாள்

கடுக்கரையில் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது தீபாவளி சமயத்தில் என்னுடன் விளையாடவரும் பையன்கள் கையில் எறிபடக்கு ,சட சட என தரையில் தேய்த்தால் சப்தம் கேட்கும் குச்சு,குத்து வெடி என பல விதமான crackers வைத்து மகிழ்ச்சியாய் காணிக்கும்போது எனக்கும் ஆசை யாய் இருக்கும்.

அப்பா உங்களுக்கு பட்டாசு வாங்கி அலமாருல பூட்டி வச்சுருக்கா.தீபாவளிக்கு எண்ணெய் தேச்சு குளிச்சுட்டு எல்லாம் கொழுத்தலாம்.வெடிக்ககூடிய எதுவும் இல்லை.கம்பி மத்தாப்பும், தீப்பெட்டி மத்தாப்பும் மட்டுமே. இரவுதான் கொழுத்த வேண்டும். ஒண்ட்ர அடி நீள கம்பு ஒன்றின் முனையில் மத்தாப்பை சொருகி வைத்து கொழுத்தணும். எரிஞ்சு முடிஞ்சதும் அதனை சின்னத் தண்ணீர் தொட்டியில் போடவேண்டும்.வெளியே போக அனுமதிக்க மாட்டார் அப்பா. கொஞ்சம் வளந்த உடன் சின்ன எறிப் படக்கு வாங்கிதந்தா....

தீபாவளி இப்படியே வாழ்க்கை முழுவதும் கழிந்தது. ஆட்டு இறைச்சியும் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் மட்டுமே தீபாவளி என்றாகிப் போனது.

எனது பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக வாங்கிக் கொடுப்பது வழ்க்கமானது. HINDU பேப்பரில் பம்பாயில் இருந்து பிள்ளை என்பவர் எழுதிய கடிதம் crackers கொழுத்தி காசை செலவழிப்பதற்குப் பதில் T.B Hospitalக்கு நன்கொடை கொடுக்கலாம் என அறிவுறித்தியது. இரண்டு வருடங்களாக அவர் இது போன்று எழுதுவதை படித்ததில் எனக்கும் அது பிடித்துப் போனது. பிள்ளைகள் இருவரும் வளந்த உடன் என் கருத்தைச் சொல்லி அவர்களை என் பக்கத்தில் இழுத்து விட்டேன்.ஆனால் மகள் சிறுமியாய் இருந்ததால் அவளுக்கு மாத்திரம் வாங்கிக் கொடுப்போம். என் மனைவியின் முன்னால் வைத்துதான் மகள் பட்டாசு கொழுத்தணும்....

ஒவ்வொரு தீபாவளி தோறும் பிள்ளைகளுக்கும் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கும் துணி மணி எடுத்து கொடுப்பது வழக்கமானது. பக்கத்து வீடுகளுக்கு sweets கொடுப்பதையும் வழக்கமாய் வைத்திருக்கிறோம்.குவைத்தில் இருக்கும் நாங்கள் sweets,வடை,அப்பம் எல்லாம் நாங்கள் இருக்கும் Flat -ன் ஆசிர் Saleem-க்கு கொடுத்தோம். கொடுத்ததை அன்போடு வாங்கியது மனசுக்கு சந்தோசமாய் இருந்தது.

இப்போ படக்கெல்லாம் வாங்கி காசைக் கரியாக்காதே எனச் சொன்னால்
பேரன்கள் என் சொல் கேட்பார்களா? நிச்சயமாய் கேட்க மாட்டார்கள்...இன்று அமெரிக்காவிலே தீபாவளி படக்குகளுக்கு மதிப்பு அதிகமாய் இருக்கிறது.நாம் ஏன் இந்தியப் பேரனைத் தடுக்கணும்......அன்பு தீபாவளி வாழ்த்துகள்.

No comments:

Post a Comment