Monday, October 31, 2011

சபரிமலை யாத்திரை

கழிந்த வருடம் நான் தனியே சும்மா இருந்து என் மனம் போன போக்கிலே மனதை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். ஓய்வு பெற்ற பின் எனக்கு வந்த ஒரே கடிதம் ஞாபகத்துக்கு வந்தது.அதை எழுதியது சென்னையில் இருந்து ஓய்வு பெற்ற காந்தியண்ணன்.என்னை பாராட்டியும் நான் கல்லூரி முதல்வர் ஆகவில்லையே என்ற தன் ஆதங்கத்தையும் எழுதிவிட்டு ஓய்வு பெற்றபின் எப்படி வாழ வேண்டும் என்பதனையும் எழுதியிருந்தார்.INDIAN EXPRESS க்கு Letters to the Editor க்கு எழுத அறிவுரையாக வேண்டியிருந்தார். 80 கடிதங்களுக்கும் அதிகமாக எழுதிய எனக்கு ஏனோ அதில் ஈடுபாடு வரவில்லை.

அடுத்து மனைவியை அவள் விரும்பிய வெளியூர் கோயிலுக்கெல்லாம் அழைத்துப் போக எழுதியிருந்தார். இதனை சரியாக செய்தேனா ....பல இடங்களுக்கு நாங்கள் இருவரும் போய் வந்திருக்கிறோம்.

என் தனிமையைக் கலைத்தாள் என் மனைவி. அவளிடம், “நீ போணூம்னு நினச்ச கோயிலுக்கெல்லாம் போயாச்சுல்லா.புதுசா ஒண்ணும் சக்திவிகடன்ல பாக்கல்லியா...” கேட்டேன்.

“அய்யப்பன் கோயிலுக்குப் போணும்.நான் சாகதுக்குள்ள ஒரு தடவை எப்படியாவது கூட்டிற்றுப் போயிருங்கோ”

“சபரிமலைக்கு என்னால நடந்து வர முடியும்னு தோணல்ல.உனக்கு முடியுமா ? முடியும்னா நீ காரில் துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப் போ.”

“போனா உங்களோடுதான் போவேன்.உங்களுக்கு மலையெல்லாம் ஏற முடியும்...வாங்க எனக்கு வேண்டி... இந்த ஒரு தடவை தானே”. கேட்டதும் எனக்கு இரக்கமாய் இருந்தது அவள் முகத்தைப் பாக்க.

கார்த்திகை மாசம் போனாலும் மகரவிளக்குக்கு போனாலும் கூட்டமா இருக்கும். ஃபெப்ருவரி மாதம் அவ்வளவு கூட்டம் இருக்காது.

புதன்கிழமை அல்லது சனிக்கிழமை சாமியை கும்பிடணும். மாசிமாதம் நடைதிறப்பு எந்தத் தேதியில் எனப் பாத்து 12-ம் தேதி போகலாம் என முடிவு பன்ணினோம். உடனே நான் என் மாணவர் ராஜேஸ்வரனிடம் பேசி ரூமுக்கு arrange பண்ணச் சொன்னேன்.அவர் ஒரு கடிதம் தந்தார்.இப்பம் மாதம் கார்த்திகை இன்னும் 3 மாதம் இருக்கிறது.லெக்‌ஷ்மணனும் கூட வருவதாக் கூறினான்.ஆனால் அவன் முதல்தடவை போவதால் 41 நாள் விரதம் இருந்து கார்த்திகை மாதம் தான் போகணும் என்பதால் வரல்லன்னு சொல்லிட்டான்.

எங்கள் காரில் போவதென முடிவு செய்து விட்டோம்.ராமு கார் ஓட்டுவான்.அவனும் நம்முடன் கோயிலுக்கு வருவான்.

தை மாதம் விரதம் இருக்க ஆரம்பித்தாள் என் மனைவி. என் மனைவி, “சிவகோல மதினியும் நம்முடன் அய்யப்பன் கோயிலுக்கு வாறாளாம்.” என்றாள்.

“அவளுக்கு முட்டு வலி இருக்குல்லா...மலை ஏறி நடந்து வர முடியுமா....”

“அவ ரொம்ப ஆசப்படுகா....நாம் கூட்டிற்று போலாமே”

“சரி...வரட்டும் ...மெதுவாப் போனா போயிரலாம்” என்றேன்.

ஃபெப்ருவரி 11-ம் தேதி Armed Reserve Police Camp-ல் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் நானும் என் மனைவியும் மாலை போட்டோம்.
அன்று இரவு எங்க வீட்டில் வைத்து இருமுடி கட்டினோம்.குருசாமி அய்யப்பன். நெய் அடைக்கும் போது எங்களுடன் சேர்ந்து சரணம் சொல்லிப் பாடி பாபு,மீனா,அய்யம்ம மதினி,புஷ்கலை எல்லோரும் உதவி செய்தனர்

காலை 5.45 மணிக்கு நடேஷின் காரில் போனோம். போகும்போது திருவனந்தபரத்தில் குமாரியின் வீட்டுக்குப் போய் ரூமுக்கு லெட்டர் வாங்கிற்றுப் போனோம்1.30 மணிக்கு பம்பையில் போய் சேர்ந்தோம். நடேஷின் காரில் வந்ததால் மிகவும் வசதியாய் இருந்தது. கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டோம்.சரியாக 2.15க்கு மலை ஏற ஆரம்பித்தோம்....

இரண்டு பேர் எங்கள் பின்னாலேயே வந்து, “சாரே....வெயில்ல மலை ஏறுவதற்கு உங்களால முடியாது. டோலியில் போலாம்...” என தலையாளத்தில் பேசிக் கொண்டே வந்தான்.

நான் அவனிடம் என்ன ரேட்டு எனக் கேட்க , “ மேல ஏறுவதற்கு 750 ருபாய். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் 1300/-” என்றான்.

அம்ம ரெண்டு பேருக்கும் ஏற முடியாது என்று கூற என் தங்கை,“ எது வரை ஏற முடியுமோ அது வரை போவோம்.ஏற முடியல்லண்ணா திரும்பீருவோம்.” எரிச்சலுடன் கூறினாள்.

கொஞ்ச தூரம் மேலே போனதும் நாங்கள் அவர்களது சுமையை வாங்கினோம். ஒரு பெரிய ஏற்றம் வந்தது.கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மேலே ஏறலாம்.....பைனாப்பிள் துண்டுகள் வாங்கிச் சாப்பிட்டோம். எம்மா....டோலி வேணுமா என்ற சத்தத்தை கேட்டு என் தங்கச்சிக்கு கோபம் வந்து அவனை கடும் சொற்களால் திட்டினாள்.....

ஏற ஆயத்தம் ஆனதும் சார் ஒரு பத்து ருபா தாங்கோ...அவன் ஏச்சுப் பட்டவன்....அதனால் நான் ருபா கொடுத்தேன்.மிகவும் நிதானமாக ஏற்றங்களில் ஏறி சன்னிதானத்தை அடையும் போது மணி 5.15.

3 பேரிடம் இருந்து ரூமுக்காக கடிதம் வாங்கிக் கொண்டு போனோம். லெட்சுமணன் தந்த கடிதத்தால் அழகான ரூம் கிடைத்தது....18 படிகள் ஏறி சாமிதரிசனம் முடிந்து காலையில் நெய் அபிசேகத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு கடைகளுக்கு பொருள் வாங்க கிளம்பினோம்.திரும்பவும் பக்கவாட்டுப் படிவழியாக போய் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டோம்.கீ செயின்,பாசி எல்லாம் வாங்கிவிட்டு ரூமில் படுத்து உறங்கினோம்

அதிகாலையில் அபிஷேகம் பண்ணியபின் சாமி கும்பிட்டு விட்டு மிகவும் திருப்தியுடன் கடையில் போய் காப்பி,தோசை சாப்பிட்டொம்.

ரூமுக்குப் போனோம்.....நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கிட்டத்தட்ட 18 தடவை சபரிமலைக்கு வந்திருக்கிறேன் .ஆனால் இது போல் வசதியாக வந்ததே இல்லை.

நான் என் மனைவியிடம், “ என்ன திருப்தி தானா ! சிவகோலம் தான் சிரமம் இல்லாமல் மலை ஏறினா..எனக்கு கொஞ்சம் தெவங்கிச்சு...நீ கஷ்டப்படிவியோன்ணு நினச்சேன்...பரவாஇல்ல...அதிகம் கஷ்டப்படல்ல....திருப்தி தானா” ...

“ ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க லெட்சுமணனுக்குப் போண் பண்ணி thanks சொல்லுங்கோ..... அடுத்த வருசமும் இதே மாதிரி ரூமுக்கு ஏற்பாடு பண்ணணும்னூம் சொல்லி வச்சிருங்கோ”....

சிரித்துக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தோம். கடுக்கரைக்கு வந்து தங்கச்சியை அவள் வீட்டருகில் இறக்கி விட்ட பின் பொன்னப்பர் காலனிக்கு சாயந்திரம் 4 மணிக்கு வந்து சேர்ந்தோம். காரை மிகவும் பாதுகாப்பாக ஒட்டிய ராமுக்கு நன்றி சொல்ல காரை நடேஷின் வீட்டில் கொண்டு விட்டுப் போனான்.

நாங்கள் கொண்டுபோன சாப்பாடு மிக அதிகம்.அடுத்த நாளுக்குள்ளதை யாரிடமோ கொடுத்தோம். 10 ருபாய்க்கு நல்ல காப்பி கிடைத்தது.இட்லி,தோசை,சப்பாத்தி என எல்லாமே கிடைத்தது.ருசியாகவும் இருந்தது.

நாங்கள் மகரவிளக்கு முடிந்த உடன் போனதால்.கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.இனிமேல் போவதாய் இருந்தால் ,சாமியின் கருணையும் அருளும் இருந்தால் மார்ச்சு மாதம் அதாவது பங்குனி மாதம் சபரிமலைக்கு நானும் அவளும் போகணும்.


சாமியே சரணம் அய்யப்பா.

No comments:

Post a Comment