Saturday, October 29, 2011

Mathematics Association meeting and myself

MATHEMATICS ASSOCIATION க்கு ஒரு தடவை துணைத் தலைவராக என்னை இருக்கும்படி மிகவும் எங்கள் HOD வற்புறுத்தியதால் சம்மதித்தேன். சாதாரணமாக students secretary தான் வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் கூட்டத்துக்கு வெளிக் College ல் வேலை பாக்கும் maths lecturer or HOD ஐ பேசுவதற்கு அழைத்து வருவான்.அதுக்காக ஒரிரண்டு நாள் வகுப்புக்கு வராமல் தன்னுடன் 2 அல்லது 3 பேரைக் கூட்டிக் கொண்டு போயிருவான்.

நான் பொறுப்பேற்றபின் மாணவச் செயலாளரை அழைத்தேன். அவன் நல்ல படிக்கக் கூடிய மாணவன்தான். “ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்.Chief Guest யார் ?” எனக்கேட்டேன்.

‘சார், நீங்களே சொல்லுங்கோ.....உங்களுக்குத் தெரிந்த Lecturer யாராவது இருந்தால் நீங்களே fix பண்ணீரலாம். ’ என்று சொன்னான்.

“இங்க நாங்க நாள் பூராவும் கணக்குப் பாடம் தானே சொல்லித் தருகிறோம்.ஒரு மாற்றத்துக்காக Bankல இருந்து யாரையாவது கூப்பிடலாமா....உங்களுக்கு கொஞ்ச நேரம் பயன்படும் படியாக பேசினால் நல்லா இருக்கும்லா” என்றேன்.

அவன் போய்விட்டான் அடுத்தநாள் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு.

அவன் வந்து சரி சார்...நீங்க சொன்னபடியே செய்திருவோம் என்றான்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளரை சந்தித்து பேசி தேதி, நேரம் எல்லாம் குறித்து விட்டு அந்த மாணவனிடம் ஒரு மரியாதைக்காக கல்லூரி விட்டபின் சாயந்திரம் அவரை சந்தித்துப் பேசச் சொன்னேன்.

எல்லாம் முடிந்த உடன் துறைத்தலவரிடம் கூட்டம் பற்றி மாணவச்செயலாளர் சொன்னதும்
“சரி, எப்பம் போய் சொன்னீங்க...class -கட் அடிச்சுட்டு போனீங்களா. என் வகுப்பில் ஆப்சன்டே இல்லையே...”

“AP சாரே பாத்துப் பேசி முடிச்சுட்டாரு. 4 மணிக்கு மேல் போய் மேலாளரை நாங்க கொஞ்சம் பேர் பாத்துட்டு வந்தோம்.”

சொன்ன நாளில் கூட்டம் நடந்தது. வந்தவர் கணித மாணவர்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்பை விவரித்தார். மாணவர்களின் பேச்சு திறனை(Communication skill) வளர்க்க வேண்டும்.கிராமத்து மாணவர்களுக்கு ஒரு பிர்ச்சினை ஏற்படும்.கல்லூரியில் படிச்சிருக்கானே இவனுக்கு எல்லாமே தெரியும் என்று மணி ஆர்டர் ஃபாம்,வங்கியில் பணம் கட்ட ,வாங்க என்ன செய்யணும் என்றெல்லாம் கேட்பார்கள். சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடங்களில்,ஆங்கிலப் பாடத்தில் எதையாவது தெரியாது எனக் கேட்டு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தெரிந்திருக்கணும்.....

‘P.G படித்த பையன் ஒருவன் பணம் அனுப்ப வங்கிக்கு வந்தான்.ஒரு செல்லான் எடுத்து எம்டி என எழுதி அனுப்பவேண்டிய ஆளின் பெயர்,அவரது வங்கி எண் பூர்த்தி செய்து கொண்டு வாருங்க....அவன் செல்லானில் M.T என எழுதுவதற்குப் பதில் empty என எழுதிக் கொண்டு வந்தான்.....’

தினமும் பத்திரிகை படிக்கணும் , general knowledge ஐ வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பேசி தன் பேச்சினை முடித்தார்....

அடுத்த வருடமும் இதே சுமை மறுபடியும் என் தலையில் விழுந்தது. இப்பொ வந்து பேசியது Auditor A.குளத்தூரான் பிள்ளை...அவர் பேசியது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் வேலை செய்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டு. நன்றாக வேலை செய்யா விட்டாலும் ஒருவனை வேலையில் இருந்து நீக்கவே முடியாது....ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படி இல்லை.வேலையை சரியாகச் செய்யாவிட்டாலும் செய்யத்தெரியவில்லை என்றாலும் வேலை போய்விடும்....

இங்கு ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் மாதம் தோறும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்,அலுவலர்கள் .....ஆசிரியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதின் அளவுகோல் வெற்றி பெற்ற மாணவர்களின் என்ணிக்கைதான்.ஆகவே நன்றாக படித்து வெற்றிபெற வாழ்த்திவிட்டு பேச்சினை முடித்தார்.

நான் HOD ஆன பின்னும் கூட்டம் நடத்தப்பட்டது என்றாலும் எனக்கு முழுமையான திருப்தி இல்லை. ஒரு தடவை என்னையும் திடீரென பேச அழைக்க நான் பேசினேன்.அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’படித்து முடித்த நேரமது.அப்போ அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவில்லை.அவரது அனுபவங்கள், அவரால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பெருமை,தந்தை,தாய்,ஆசிரியர்,அவரது ஊர் மீதெல்லாம் கொண்ட அவரது பிடிப்பு.... எல்லாவற்றையும் கூறி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாமை படிங்க என பேசினேன்...

நான் ஒய்வு பெற்றபின் M.Sc Mathsல் 100 மார்க்கு எடுத்த மாணவர்களுக்கு ராஜையன் சார் ஒரு கிராமின் விலையை செக்காக என்னைக் கொண்டு கொடுக்க வைத்தார்.நான் வெறும் கையுடன்
போகக் கூடாது என நினைத்து 3 அக்னிச் சிறகுகள் புக்,3 பென் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.

இன்றும் சோர்வு ஏற்படும் போதெல்லாம் நான் படிக்க எடுக்கும் நூல் அக்னிச் சிறகுகள்.

No comments:

Post a Comment