Saturday, November 19, 2011

பறக்கையில் பிறந்த ஒருவர் லண்டனில்

கல்லூரியில் படிப்பை முடித்து சும்மா இருந்த போது ஒரு நாள் கடுக்கரை தகரவீட்டில் இருக்கும் எனது அண்ணனைப்(பாஸ்கரன்) பார்க்கப் போனேன். அப்போ அந்த வீட்டின் முன்னால் ஒரு சிறு கூட்டம் வெளியே சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது. அண்ணனும் வடக்கு திசையைப் பாத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

அண்ணன் என்னிடம் ,“ லண்டனில் இருந்து நீலாப்பிள்ளையும் ராமசாமியும் வந்திருக்காங்க.. இப்ப இங்க வருவாங்க.அதான் நான் வெளிய நிக்கேன்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் வந்தார்கள். அகமும் முகமும் மலர அவர்களை வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்.

கொஞ்சநேரம் பேசிவிட்டு அவர்கள் இருவரும் வேறொரு வீட்டில் நடக்கும் விருந்துக்குப் போனார்கள். அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்த அண்னன் என்னிடம் ,“ எங்கிட்ட ராமசாமிக்கு ரொம்ப ப்ரியம்.சங்கீதம் ரொம்ப புடிக்கும் அவர் திருவனந்தபுரம் A.G's office ல வேலை பாத்துக்கிட்டு இருந்தப்போ லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் பதவி கிடைத்ததால் அங்கு குடும்பத்துடன் இருக்கிறார்....” எனச் சொன்னார்.

எனக்கு ஒரெ பிரமிப்பா இருந்தது.கனவில் கூட வெளிநாடு செல்வது நடக்காது அந்த காலத்தில். லண்டனில் குமரி மாவட்டத்தில் பிறந்த ஒருவர் வேலை பார்ப்பது என்பது ஒரு சாதாரணமான விசயமில்லை. எனக்குத் தெரிந்து அந்த காலத்தில் வேறு யாரும் வெளிநாட்டில் வேலை பார்த்ததாகவும் நினவில் இல்லை

அதன் பிறகு அவரை அவரது பெங்களூர் வீட்டில் பாத்து பேசியிருக்கேன்.

சமீபத்தில் 14-11-2011ல் துவரங்காடு ராஜா மண்டபத்தில் சந்தித்தேன்.எனக்குத் தெரிந்து முதல் முதலாக லண்டன் சென்று வேலை பாத்த இவரைப் பற்றி ஒரு Blog எழுதலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.அவரிடம் இதுபற்றிக் கூறினேன்.அவரும் அவருடைய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் .

சொன்னதில் எனக்கு பிடித்தது

Queen Elizabeth II ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த தேதி எது எனத்தெரியாததால் பிறந்த மாதமான ஜூன் மாதமுழுவதும் தினமும் கொண்டாடுவாராம். ஒவ்வொரு நாள் விருந்திலும் முக்கிய பிரமுகர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அழைத்து அவர்களுடன் ராணியும் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள். Buckingham அரண்மனையில் அப்படி நடக்கும் ஒரு விருந்தில் ராமசாமிப் பிள்ளையும் அவரது மனைவியும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

தன்னுடைய பணிக்காலம் முடிந்து இந்தியா திரும்பிய ராமசாமிப் பிள்ளை இந்திய அரசால்
I.A.A.S பணிக்கு உயர்த்தப்பட்டார். His last posting was Financial Advisor to Government of Karnataka which was ruled by H.D.Deva Gowda.

ராமசாமிப் பிள்ளை பிறந்த ஊர் பறக்கை. அவரது மனைவியின் ஊர் கடுக்கரை.

No comments:

Post a Comment