Thursday, December 29, 2011

மண்டல பூஜை நாளில்.....

கடுக்கரை நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் பாலமோர் சாலையில் பயணித்தால் சேர்ந்து விடும் ஒரு அழகான சிறிய கிராமம். மன்னர் ஆட்சியில் கடுக்கரை ஒரு முக்கியமான கிராமமாக இருந்தது. அரசியல் ரீதியாக பார்த்தால் ஜீவா,பிரட்டீஷ் அரசு அவரைக் கைது செய்ய போலீஸ் தேடிக் கொண்டிருந்த வேளையில் கடுக்கரையில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவர். தி.மு.க தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடுக்கரையில் அவரது கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக வந்திருக்கிறார்.

கோட்டைச் சுவர் போல் வடக்கு கிழக்கு மேற்கு மலைகள். ஊரை வலம் வரும் ஆறு. ரம்மியமான பசுமையான வயல். இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த அழகு. இது தான் கடுக்கரை.
இயற்கையாக அய்யப்பனின் ஆலயம் அமைந்த இடம் சபரிமலை.கடுக்கரையில் ஒரு உய்ர்ந்த பாறையில் சின்ன குன்றின் மீது அய்யப்பனின் கோவில் இருக்கிறது. 18 படிகள் பாறையிலேயே செதுக்கி எடுக்கப்பட்டு அமைந்திருக்கின்றன.

அய்யப்பன் சாமியைப் பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு அழகு.

30 வருடங்களுக்குப் பின் மண்டலபூஜை நாளில் நானும் என் மனைவியும் அய்யப்பன் சாமியை தரிசித்து விட்டு வந்தது மனசுக்கு சந்தோசமாக இருந்தது

No comments:

Post a Comment