Sunday, December 4, 2011

காதலும் பொய்யாகுமா ?

காதல் அழிவதே இல்லை என்று நான் எழுதிய விசயத்தை விவரமாக எனது நண்பர் பெருமாளிடம் கூறினேன்.சிரித்துக்கொண்டே கேட்ட அவர் என்னிடம் அவரது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்.

அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. வேலை பார்த்த இடம் பஞ்சாப்.அவர் ஒரு பெண்ணை அதுவும் தமிழ் பெண்ணை கண்டார். காதல் மலர்ந்தது.மணமும் வீசியது திருமணம் செய்து கொண்டதால்.காதலுக்கு அடையாளமாக இருவருக்கும் குழந்தை பிறந்தது.

மனைவியின் மீது அன்பு கூடியது. தாஜ்மகால் கட்ட வில்லையென்றாலும் ஒரு அழகான வீட்டை தன் மனைவியின் பெயரிலேயே வாங்கினார்.அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. மனைவியோ போகவேண்டாம் எனத் தடுத்தாள்.

மனைவியிடம் நான் சம்பாதிப்பது யாருக்காக நம் பிள்ளை
யின் வருங்காலம் வளமாக இருக்க வேண்டாமா..... இப்படியெல்லாம் அவளிடம் கூறி அவன் வெளி நாட்டுக்குப் போய் வேலையில் சேர்ந்தான்.

நல்ல சம்பளம். மாதம் தோறும் செலவு போக மீதிப் பணத்தை மனைவிக்கே அனுப்பினான்.

வருடங்கள் 6 கழிந்தன.வெளிநாட்டில் வேலை செய்தது போதும் என நினைத்து தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி தான் வரும் விவரத்தைக் கூறினான்.

அவளோ நம் நாட்டில் நீங்க வாங்கும் சம்பளம் கிடைக்காதே.அதனால் இப்போ வரவெண்டாமே....2 வருடம் கழித்து வந்தால் போதுமே என்கிறாள்.ஆனால் அவன்  நாடு திரும்புகிறான்

மனைவியையும் குழந்தையையும் பார்த்து இனி நான் உங்க கூடத்தான் இருப்பேன். வெளிநாட்டுக்கெல்லாம் போக மாட்டேன் என்று உற்சாகமாக கூறுகிறான்.

தன் பிள்ளையிடம் பேசுகையில் அந்தப் பிள்ளை அடிக்கடி மாமா இங்க வருவாரே ஏன் இப்பம் காணல்ல மாமாவை பாக்கணும் என்று சொல்ல சந்தேகப் பொறி அவனது மனதில் தட்டியது.

யார் அந்த மாமா ?........தலை கிறு கிறுவென சுற்றியது.

அவள் இன்னொருவனுடன் மனைவி போல் வாழ்ந்தது தெரிய வந்தது.

தான் கொடுத்த வீட்டையும் கொஞ்சம் ருபாயையும் எடுத்துக் கொண்டு பிள்ளை தனக்கு வேண்டாம் என பிள்ளையை அவனிடமே விட்டுவிட்டுகள்ளத்தனமாக காதலித்தவனுடன் போகிறாள் .

தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து மனம் குமுறி விவாக ரத்துக்கு கோர்ட்டை அணுகுகிறான் . ஆனால் அவள் அதற்கு மறுக்கிறாள் .

போராடி விவாகரத்தினை பெறுகிறார் .தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் அனைத்தையும் கோர்ட்முலம் பெறுகிறார் .
இப்பொழுது னது பிள்ளைக்காக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .....
பணம் எதுவும் இல்லாததால் அவளைவிட்டு
விலகினான் கள்ளக்காதலன் ....அவள் எப்படி வாழ்கிறாள் ......தெரியாது.
காதலும்  பொய்யாகுமோ .....

No comments:

Post a Comment