Tuesday, December 13, 2011

வடக்குத்தெரு ராமன் பிள்ளை செய்த மோர்

கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன். அங்கு ராமன் பிள்ளையும் மற்றும் சிலரும் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பாத்ததும் ராமன் பிள்ளைக்கு ஒரே சிரிப்பு ... நான் என்னா.. என்னப் பாத்ததும் சிரிக்கீங்க .... என்ன விசயம்...என்று கேட்டேன்.

ராஜேந்திரன்," ஒண்ணுமில்லே. அந்த மோரு செய்த கதையை உங்ககிட்ட சொல்லியாச்சா என்று மாமா கேட்கவும் நீ வரவும் சரியாக இருக்கிறது" என்றார்..

ராஜேந்திரன் சொல்ல ஆரம்பித்ததும் அதை நினச்சு நினச்சு சிரித்துக் கொண்டே இருந்தார்.

கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் அனவரும் கீரிப்பாறைக்கு சென்றனர்.பொன்னீலன் சார் தான் அனைத்து ஏற்பாடுகளைச் செய்தார். ராஜெந்திரனை அழைத்து சமையலுக்கு ஒரு ஆளை அழைத்து வரச்சொன்னார்.கீரிப்பாறையில் உள்ள Tourist Bunglow -ல் தான் எல்லோரும் அமர்ந்து கலந்துரையாடினார்கள்.சமையல் பெரையில் சமையல் காரர் ராமன் பிள்ளை தான் வாங்கி வந்த காய்கறிகள் , பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னீலன் சார் ராமன்பிள்ளையிடம், “ ஐயா! மோரு வாங்கினீங்களா....வானமாமலை சாருக்கு மோர் கண்டிப்பா வேணும்...”

’அய்யோ... மறந்து போச்சே... மோரு வாங்கல்லியே...’ ராமன்பிள்ளை சொன்னார்.

பொன்னீலன் சாரின் முகம் வாடியதைக் கண்ட ராஜேந்திரன் ராமன் பிள்ளையிடம்,“என்ன மாமா இப்படி செய்திட்டீங்க....இப்பம் என்ன செய்ய....என்னை ஏன் இப்படி கஷ்டப் படுத்துறீங்க”....

“மருமகனே , ஏன் வருத்தப்படுகீங்க....மோர்தானே வேணும் ....செய்துட்டாப் போச்சு”

“என்னது... மோரை செய்வீங்களா....”

“நீங்க ரெண்டு பேரும் இப்பம் இந்த ரூமை விட்டுப் போங்கோ. சமையல் எல்லாம் முடிஞ்சு மோரு செய்த பின் உங்கள கூப்பிடுகேன். மோரை ருசி பாத்தபின் சொல்லுங்கோ எப்படீன்னு.”

சாப்பிடும் நேரம் நெருங்கியது. “சாப்பாடு ரெடியா..... மாமா என்ன ஆச்சு.. மோருக்கு என்ன செய்தீர். எங்கிட்ட மோர் எப்படி செய்வீர் எனச் சொல்லும். நானும் தெரிஞ்சிக்கேனே” ராஜேந்திரன் சொல்லவும் பொன்னீலன் சாரும் சமையல் பெரைக்குள் வந்து விட்டார்.

“ மருமகனே, நீங்க கொஞ்ச நேரம் உள்ளே போங்கோ.....தயவு செய்து நான் கூப்பிட்ட பின் வாங்கோ....”

நேரம் வந்ததும் ராமன்பிள்ளை அழைக்கவே ராஜேந்திரனும் பொன்னீலன் சாரும் போனார்கள்.

பொன்னீலன் சார் குடித்தார். அவர் முகத்தில் ஒரே மகிழ்ச்சி...ரொம்ப நல்லா இருக்கு .. மோரைப் போலவே ருசியாய் இருக்கிறதே என்றார்.

எல்லோரும் நன்றாக ருசித்துச் சாப்பிட்டார்கள். வானமாமலை சார் மட்டும், ‘ இது மோர் இல்லையே... வேறு என்னவோ போல் இருக்குதே’ என்றார்.

ராஜேந்திரன், “ ஏன்.. நல்லா இல்லையா?” கேட்டார்.

“மோரை விடவும் நன்றாக இருக்கு” சொன்னார்.

நான் ராமன் பிள்ளையிடம் ,“ எனக்கு நீங்க மோர் செய்து தரணுமே..... நாக்கில் நீர் ஊறுகிறதே.”

அது என்ன பெரிய காரியமா... செய்துட்டாப் போச்சு

No comments:

Post a Comment