Monday, February 20, 2012

என் தாய் நினைவு நாள் 20-02-2012

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணத்தியாறு பெப்ருவரியில்
எண்பத்திஎட்டு வயது என் தாய்க்கு .....எட்டு எட்டாய் வாழ்ந்து பதினோராவது
எட்டில் நாம் விரும்பாத எட்டாத வீட்டுக்கு பறந்து விட்டாள் அந்த மாத 20 -ல் .
ஆம் எனை ஈன்ற என் தாய் போய் இன்றோடு பதினாறு வருடம் ஆகிவிட்டது .

என் தாயவள் பெயர் பகவதியம்மாள்.அந்த புண்ணியவதியின்
பெயர் பெற்றதால் என்வீடும் என் தாய் வீடாய் ஆனது .என்றும்
என் "பகவதி" இல்லம் அவள் பெருமையையே பாடும் .

என் தாய் பெயரை என் மகளுக்கு இட்டு அழகு பார்ப்பதை
என் தாயால் காணமுடியாது என்பதால் தானோ என்னவோ
என் தாயிருக்கும்போதே வீட்டையும் கட்டி வீட்டுக்கு
என் தாயின் பெயராம் பகவதி என்று பெயர் வைத்தேனோ !

அம்மா .....அம்மா .....உன் பேரன் பேத்திகள் பாக்கியசாலிகளம்மா.....
அன்பை... உன்னன்பை உணர்ந்தவர்கள் எங்களைப்போல் அவர்கள்.
அம்மா...எனக்கொரு வருத்தம் உண்டு....  என்பேரன்கள் உட்பட மருமக்கள் யாரும் உனைக் காணும் பாக்கியம் தனை கொடுக்காமல்
ஏனம்மா இறைவன் உனை அழைத்தான் ....
என் தந்தையைக் காண சென்றாயோ .......

இறையருளால் இவ்வுலகம் உய்யட்டும் ,என் தாய்
இறைவடிவாய் எமைக் காக்கட்டும் ......

உலகில் உயர்ந்தது சிறந்தது தாய்மையே ....

No comments:

Post a Comment