Friday, July 6, 2012

காரும் நானும்

கார் ஓட்டத் தெரியாதவன்லாம்  எதுக்கு கார் வைத்திருக்கணும் ? நியாயமான கேள்விதானே .
சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் சைக்கிள் வைத்திருப்பதில்லை . scooter ஓட்டத் தெரியாதவனும் scooter வாங்க மாட்டான் .
எனக்கு கார் ஓட்டத்தெரியாது.
பலரும் என்னைப் பார்த்து கார் ஓட்டத்தெரியுமா? என்று கேட்பார்கள் .
கார் ஓட்டிப் படிக்க வேண்டியது தானே ! என்றும் நானே ஓட்டக் கற்றுக் கொண்டேன் நீயும் படிக்கலாமே என்றும் பலரும் பலவிதமாக என்னிடம் சொல்வார்கள்..
நானும் பதில் ஒவ்வொருவிதமாக சொல்லிக்கொண்டிருப்பேன் ....
நான் வங்கியில்நின்று கொண்டிருந்தேன் .
ஒருவர் கையில் பேனாவை வைத்துக் கொண்டு ஒரு வங்கி செல்லானை என்னிடம் தந்து அவர் சொல்வது போல் எழுதித் தரும்படி கேட்டுக் கொண்டார்.
நான் அவரிடம் ," நீங்களே  எழுத வேண்டியது தானே ...."என சொன்னேன்
அவர் என்னிடம் ,"எனக்கு எழுதத் தெரியாது ......."என்றார்.
சற்று ஆச்சரியத்துடனும் குறும்புடனும் அவரிடம் இருந்து பேனாவை         வாங்கிக் கொண்டே," அப்பம் எதுக்குப் பேனாவை வைத்திருக்கீங்க ....." சொன்னேன்.
அவர் சொன்னார் ," எனக்குத்தானே எழுதத் தெரியாது .......உங்களுக்குத்  தெரியும்லா ...."
அவர் சொன்ன பதில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.
எனக்கும் காருக்கும் பொருந்துமல்லவா.....
ஒரு குருடன் விளக்குடன் இரவு நேரம் நடந்து போய்க்கொண்டிருந்தான் .....
 எதிரே வந்தவன் ,அவரிடம்," உமக்குத்தான் கண் தெரியாதே ....எதுக்கு விளக்கை சுமந்து கொண்டு வருகிறீர்..     "எனக் கேட்டான்..
அவர்,,"இந்த விளக்கு எனக்கில்லை ....உனக்கு..  நீ என்மேல் மோதிவிடக்    கூடாதல்லவா......."


எனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாத காலம் .எங்க வீட்டில் எனது சின்னப்பா அவருடைய ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு போவார்.


ஒருநாள்  காலையில் வீட்டுக்கு வந்து ஸ்கூட்டரை துணியால் துடைத்துக் கொண்டிருந்தார் .....
நான் சின்னப்பா விடம் ," இப்பம் எதுக்கு தொடைக்கணும் .....போகும் போது தூசி படத்தானே செய்யும் ....."என்றேன்.


நான் சொன்னதைக் கேட்டு சத்தம் போட்டு சிரித்து விட்டார் அவர்..


ஏன் சின்னப்பா சிரிக்கிறீங்க...!


"அடப் பைத்தியக்காரா  நீ எங்காவது வெளியில் போனால் அழுக்காகி விடும் என்று அழுக்கு சட்டையும் பேண்டும் தான் போட்டுட்டுப் போவாயா ..."  என்று கேட்டார்.


உனக்கு scooter ஓட்டத்தெரியுமா ? என்று என்னைக் கேட்க நான் தெரியாது என சொன்ன உடன் ," MSc வரை படிச்சுட்டு இன்னமும் ஸ்கூட்டர் படிக்காம இருக்கியே ! வா ,இண்ணைக்கு படிக்கலாம் ....எனச்சொல்லி  ஸ்கூட்டரை வெளியே எடுத்தார்.


என் கையில் ஸ்கூட்டரை தந்து ஏறி இருக்கச்சொன்னார் .நான் ஏறி இருந்து கொண்டே இருகைகளாலும்  ஹான்பரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.
இறுக்கி பிடிக்கவேண்டாம் ...சற்று free யாக பிடித்துக் கொள் . என்று சொல்லி
kick  starter -ஐ மிதித்து ஸ்டார்ட் பண்ணினார் .
வண்டி நகராமல் சத்தம் பூத்துக் கொண்டே இருந்தது. இப்போ வண்டி Neutral -இல் இருக்கு என சொல்லித்தந்தார் .


எல்லாம் சொல்லித் தந்துவிட்டு,என்னை கியர்-ஐ போடசொல்ல  நானும் என்னவோ செய்ய அது jump -ஆகி தென்னை மரத்தில் மோதாமல் போய் நின்றது.


பயந்து விடாதே என சொல்லி என்னை வெளியே அழைத்துக் கொண்டு சீதப்பால் போய் அங்கே இரண்டுமணி நேரம் ஓட்டிப் பழகினேன் .


50 வயதான எனது சின்னப்பா 23 வயதான எனக்கு ஸ்கூட்டர் -ம் தந்து தானும் வந்து  ஸ்கூட்டர் ஓட்டப் படிக்க சொல்லித்தந்ததை மிகப் பெரிய பெருமையாக நான் இன்றும் நினைத்து மகிழ்கிறேன்.


அதன் பிறகு தான் அவருடைய மகன் சுரேந்திரன் அதே ஸ்கூட்டர்--இல் ஒட்டிப்படித்தான் .......


நான் ஸ்கூட்டர் படித்ததை பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும்போது என் உறவினர் அடித்த comment :-" அவருக்கே சரியா ஓட்டத்தெரியாது ....அவரு  இவருக்கு சொல்லிக்கொடுத்தாரா ....!"


நான் ஸ்கூட்டர்--இல் தான் தினமும் கடுக்கரையில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன் ...... ஆனால் தினமும் அதில் போய் வந்தது என் அப்பாவுக்கு  பயமாய் ,அதனால் நான் போய் வருவது வரை நிம்மதி இல்லாமல் இருப்பதை அறிந்து ஸ்கூட்டர்--ஐ கொடுத்து விட்டேன்.


என்றும் பொல தினமும் BUS  என்னை சுமந்து சென்றது.....அப்பாவுக்கும் நிம்மதி ......சாலையில் செல்வோருக்கும் நிம்மதி .....


இவர்கள் எல்லோரையும் விட ஒரு உயிர் மிகவும் நிம்மதியாய்,ஆனந்தமாய் துள்ளி விளையாடியது..... ஆம் அந்த மனத்துக்கு சொந்தக்காரர் யாராய் இருக்க முடியும் என் மனைவியைத்தவிர .....    '

No comments:

Post a Comment