Sunday, July 8, 2012

என்னவோ நினைத்தேன் .....எதனையோ எழுதினேன்

கன்னியாகுமரி ரொம்பத்தான் மாறிப்போய்விட்டது . மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை தெரிந்தபின்னும் , மாறிய கன்னியாகுமரி மனதை மகிழ்விக்க மறுப்பதேன்.
வீட்டின் மாற்றம் நம்மால் விரும்பி ஏற்கப் படுகிறது . தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் மாறிப் போயே போய்  விட்டது. எனக்கு தரையில் இருந்து சாப்பிட ஆசைதான். ஆனால் பரிமாறுவதற்கு வசதியாய் இருப்பது மேசை  சாப்பாடு என்று பெண்கள் சொல்வதால் எனது ஆசை நிறைவேறாமல் இருக்கிறது .
                                                                                                                                                                                                                                                                                                           நானே எடுத்துச்சாப்பிடப்  பழக வேண்டும்.இந்தப் பிறவியில் சாத்தியப்படுமா ..
முயற்சிக்கிறேன் .......

உடை மாறித்தான் போயிற்று ..... கல்லூரி ஆசிரியர்கள் அணியும் கட்டம் போட்ட ஆடையும் , இறுக்கமாக அணியும் ஜீன்ஸ் பான்ட் -உம் பிடிக்கவே இல்லை. பெண் ஆசிரியர்கள் ....... எழுதவே  கைகள் தயங்குகிறது.

                              பயிலும்  மாணவ மாணவிகளுக்கு சீருடை.... மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது.

ஆசிரியர்களும் மாற வேண்டாமா ...... Hand Kerchief எனது பான்ட் பாக்கட்டில் இருந்தது வெளியே தெரிந்தது என்பதற்காக துறைத் தலைவரின் கண்டனத்திற்கு ஆளானேன் நான். உலகெங்கும் டிரஸ் கோடு பின் பற்றப்படுகிறது . மாறவேண்டிய மாற்றம் ..... எப்போ  மாறும்.

ஆசிரியைகளுக்கு  கண்டிப்பாய் வேண்டும் சீருடை.

 பணிதல் பயிலுபவர்களுக்கு மட்டுமல்ல ....பணியாற்றுபவர்களும் பேண வேண்டிய ஒன்று பணிதல் . பணிவான பண்பே உயர்ந்தது .

எதையோ எழுத நினைத்து இதை எழுதுகிறேன்...... இதுவும் உரக்க சொல்ல வேண்டிய சிந்தனை தானே... இருந்து விட்டுப் போகட்டுமே இந்த வரிகளும்.....

கடுக்கரையும் மாறிப் போயிற்று..... இந்த மாற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது..

மாற்றமே இல்லா மலைகளை அரணாகக் கொண்டு மாறிய இரு அம்மன் கோவில்களும் வடக்கேயும்      நுழைவாயிலிலும் காட்சி தரும் மாற்றம் எனக்குப் பிடித்திருக்கு.

ஊரு விட்டு வேறோர் ஊருக்குப் போய் வாழ்ந்தாலும் ,தான் பிறந்த ஊரை ,
வேரை மறவா இளைஞர்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன்.

கோவில் புதுப்பித்தல் , குடும்பக் கோவில் கொடைவிழா ...... எதுவானாலும் சிறப்பாய் நடந்து முடிவதற்கு காரணமாய் இருப்பவர்கள் வெளியூர்வாள் கடுக்கரை மக்களால் தான்.. அவர்கள் தான் முதுகெலும்பு ......

உள்ளேயே இருக்க ஆசைபட்டால் கருவறையில் இருந்து வெளியே வராமல்
இருக்கலாமே....வெளியே போனால் தான் வளர முடியும்.

கருவறை தந்தவளைத்  தவிக்க விடாமல் ,உன்னிடம் தன்னைத் தந்தவளையும் ,சின்ன வயதில் அறிவூட்டிய ஆசானையும் மதித்து வாழ்ந்தால் உன் வாழ்வு மெருகுறும். ஊர் .....அதுதான் வேர்..... அந்த வேரை மறவா எம்மூர்
சின்னவர்களை போற்றுவதில் என் மனதுக்கு சந்தோசமாய் இருக்கிறது .

கடுக்கரை மாறித்தான் போயிற்று..... மாறட்டும் ..... மாற்றம் ஒன்றுதானே நிரந்தரம்.

என்னவோ நினைத்தேன் .....எதனையோ எழுதி முடித்தேன் ..... நானும் மாறி விட்டேனோ....... ஆம்  மாறிவிட்டேன் .... எப்படி எழுதக்கூடாது என்பதற்கு
என் வரிகள் சாட்சியாய் இருந்து விட்டு போகட்டுமே....

No comments:

Post a Comment