Saturday, December 1, 2012

ஓர் இதய அஞ்சலி----- யாத்திரையின் நடுவில்


ஒன்றாம் தேதி அதிகாலை ...... ஒரு பெண்ணின்  அழுகுரல் என் காதில் விழுந்தது .அதிர்ச்சியில்  எழுந்து பார்த்தேன். விசயத்தைப் புரிந்து கொண்டேன் ..நதியில்  துள்ளி ஓடும் மீன்களில்  ஒன்று   தரையில் தவறி விழுந்து துடி துடித்தது  போல் , எங்களுள் ஒருவர் உயிர் ஓடும் ரயிலில் பறந்து விட்டது. இரவிபுதூர் குழுவில் வந்தவர். அவரது அன்பான           நடவடிக்கையால் அனைவரையும் அவர் எல்லோருக்குமே அறிமுகமானவராய் இருந்தார் ....தாய் அருகில் இருக்கும்போது நடந்த சோகம் எல்லோரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது ...... பறக்கும் விமானத்தில் ,ஓடும் ரயிலில் ,பஸ்ஸில் ..... ஏன்  இந்தக்   காலன் வருகிறான்.
இந்த சோகத்திலும் அவரது தாய் உட்பட உறவினர்கள் ,ஊருக்கு செய்தியை அறிவித்த முறை , குழுவில் உள்ள அத்தனை பெரும் உதவி செய்ததைக் கூறி யாருக்கும் எந்த மன நெருடல் வராதவாறு சொன்ன பாங்கு என்னை உலுக்கியது. என் இதயத்தை நனைத்தது. கண்களில் கண்ணீர் . என்ன செய்ய......

பாதிவழியில் அவரது உடல் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டது. பின்னர் சட்டபூர்வ நடைமுறைகள் முடிந்து விமானத்தில் சொந்த ஊருக்கு .........  

No comments:

Post a Comment