Wednesday, February 27, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்......3


  • எதிர்வினை ஆற்றாமலேயே ஒன்றினைக் கடந்து செல்லும்போது மிக நல்லது நடக்கின்றது; ஒவ்வொன்றிற்கும் எதிர்வினை ஆற்றும்போது நல்லது நடக்காமலே போய்விடும்.
  • நீ எப்படி தியானம் செய்கின்றாயோ, அப்படியே நீ ஆகின்றாய்.
  • யாருக்கு குரு அமையவில்லையோ அவர்தான் பாரம்பரிய மரபைப் பற்றி நிற்கின்றார். யாருக்கு குரு அமைகின்றாரோ,அவருக்கு குருவே மரபாகிறார்.
  • அன்பு, பக்தி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சாதனை புரிகின்றவர்தான் யோகி ஆகின்றார்.
  • எந்தவித உணர்வுமின்றி மனதின் அகத்திலிருந்து மனதின் புறத்திற்கு ஆன்மீகத் தேவையை முழுமையாக அடைவதற்கு விடப்படும் அழைப்புக்குரலே பிரார்த்தனை எனப்படுகிறது.
  • தகுதியான நபர் அவரது அன்புக்கரங்களால் நமக்கு உணவளிக்கும் போது அது தெய்வீக அமிர்தமாகிறது.
  • சார்பின்மை,விருப்பத்தேர்வின்மை,எதிர்பார்ப்பின்மை இவைகளே சேவையின் முக்கியமான அம்சங்கள்..
  • வேலைக்குக் கிடைக்கும் பரிசு இன்னும் கூடுதலான வேலை. அந்தக்கூடுதலான வேலையினைச் சரியாகச் செய்யும்போது கிடைக்கும்பரிசுதான் தலைசிறந்த பரிசு

  • முழுமையான அன்பினில்தான் முழுமையான (மாஸ்டரிடத்து) சார்ந்திருத்தல் உள்ளது. முழுமையான சார்ந்திருத்தலில்தான் முழுமையான சரணாகதி உள்ளது.

  • நாம் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் மாஸ்டரின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றோம்.
  • ஆஸ்ரமம் என்பது ஒருவர் ஆன்மீகத்தில் வளர்வதற்கு மாஸ்டரோடு இருப்பதற்காகச் செல்லும் இடம்..
  • நிலையான நினைவு மட்டுமே எப்போதும் மாஸ்டரோடு இருப்பதற்கு சரியாக உதவும் உபாயம் ஆகும்..
  • இறந்தகாலத்திலிருந்து அளிக்கப்படும் விடுதலையே சுத்திகரிப்பு.
  • உண்மையான அப்யாசி என்பவர் முழுக்கவும் ஒழுங்குமுறையுடன் வாழ்பவர்.
  • பக்திக்கு எடுத்துச்செல்லும் படிக்கட்டாக சேவையை எடுத்துக்கொள்ளலாம்.
  • முழுமையான நம்பிக்கையிலிருந்துதான் முழுமையான கீழ்ப்படிதல் வளரமுடியும்.
  • ஆன்மீகம் என்பது பரிணாம வளர்ச்சிக்கான பாதை; பரிணாம வளர்ச்சி என்பது உணர்ந்து அனுபவிக்கப்படவேண்டும்.

  • ஒரு நல்ல தந்தையாகவோ அல்லது ஒரு நல்ல தாயாகவோ இருக்க முடியாத ஒருவர் ஒரு நல்ல அப்யாசியாக இருக்க முடியாது.
  • தெய்வீக அருள் என்பது தானாக நிகழ்வதில்லை. அது உன்மீது பொழிவதும் தானாக நிகழலாம்.;ஆனால் அதை நீ விரும்பி பெற்றுக் கொள்வது தானாக நிகழ்வதாக இருந்திட முடியாது. நீ உன் இதயத்தைத் திறந்து கொள்வதன் மூலமே இது சாத்தியமாகிறது

மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

No comments:

Post a Comment