Friday, March 1, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4




சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4 (55 முதல் 86 வரை 

  • தெய்வீக அருள் என்பது தானாக நிகழ்வதில்லை. அது உன்மீது பொழிவது தானாக நிகழலாம்.;ஆனால் அதை நீ விரும்பி பெற்றுக் கொள்வது தானாக நிகழ்வதாக இருந்திட முடியாது. நீ உன் இதயத்தைத் திறந்து கொள்வதன் மூலமே இது சாத்தியமாகிறது.
  • மிஷனில் இருக்கும் ஒவ்வொரு அப்யாஸியும் அவருடைய செயல்களில், எண்ணங்களில், நடைமுறைகளில், அவரது வீட்டிலும், சமுதாயத்திலும் அவர் நடந்து கொள்ளும் விதத்தில், மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ வெண்டும்.
  • ஆரம்பத்தில் நாம் கடவுளைத் தேடுகின்றோம்; முடிவில் நாம் நம்மையே கண்டு கொள்கின்றோம். எனவே தன்னை உணர்வதே கடவுளை உணர்வதாகும்.
  • தியானம் என்பது மாஸ்டர் நம்மீது பொழியும் ஆன்மீக அமிழ்தத்தை உள்வாங்கும் ஒரு மகத்தான செயலாகும்.எனவே நாம் தியானம் செய்யச் செய்ய நம்முடைய முன்னேற்றம் துரிதமாகிறது.
  • பிறரை ஒழுங்குபடுத்துவதற்குமுன் நம்மை நாம் ஒழுங்கு படுத்துவதே அன்பு எனப் பொருள் படுகின்றது.
  • ஒருவர் தன்னை சாதனாவில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது அவரிடத்து மாஸ்டர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
  • நம்முடைய திறமையையும் மிஞ்சி ஒன்று கை கூடாது இருக்கும்போது மட்டுமே அதனைச் செம்மாந்து செய்திட கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும்.
  • பிரசாதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது மிகவும் மதிப்புடனும் பணிவுடனும்,பக்தியுடனும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஏனெனில் அது தெய்வீகத்தால் அருளப்படும் தெய்வீகம் ஆகும்.
  • நீ சேவை செய்திடின் பிறர் உனக்கு சேவை செய்வர்.
  • மாஸ்டர் ஆயிரக்கணக்கான மக்களால் சூழப்பட்டிருக்கலாம்.நாம் நம்மிடம் பற்றினை வைக்காது அவரிடம் பற்றினை வைத்திட வேண்டும்.
  • எதனையும் ஏற்காதிருப்பது அல்ல துறவு; லோகாயுத விஷயங்களில் பற்று வைக்காதிருப்பதே துறவு.
  • கழிப்பறையை சுத்தம் செய்வதாக இருந்தாலும், தெய்வீக உணர்வுடன் அது செய்யப்படின்,அப்பணி தெய்வீகப்பணி ஆகின்றது.
  • சரணாகதி அடைவதே நமது கடமை. நம்மை முதிர்வுறச் செய்வது அவரது கடமை.
  • தனிஅமர்வின் போது நீங்கள் கனமின்றி உணர்வது, நிச்சய,மாக பிராணாஹுதியினால் அல்ல;அது சுத்திகரிப்பால் நிகழ்வது.
  • ஆஸ்ரமம் என்பது ஒரு ஓய்வான மனநிலையில் ஆன்மீக நலனையும், ஆன்மீக வளர்ச்சியையும் அடையும் இடமாகும்.
  • ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு உள்ளிருந்து வருவதேயாகும்.வெளியிலிருந்து திணிக்கப்படுவதன்று.
  • சந்தேகம் மன உறுதியைப் பாழ்படுத்துகிறது. நாம் சந்தேகப்பட ஆரம்பிக்கும் அந்தக் கணத்திலேயே மனஉறுதி காணாமல் போய் விடுகிறது.
  • நம்பிக்கை விசுவாசத்திற்கும், விசுவாசம் பற்றுறுதிக்கும் தானாக அழைத்துச் செல்கிறது.
  • நாம் பரம்பொருளை எண்ணும் போது நிறைய அறிகின்றோம்; அதன்பின்பு படித்தறிவதை விட்டுவிடுகின்றோம்.
  • நமது தேவைகளை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைப்பதே எளிமை ஆகும்..
  • வாழ்க்கை என்பது உயர்வு, முன்னேற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையால் உருவாக்கப்படுவதாகும். புலனின்பம், சுயதிருப்தி போன்றவற்றால் சீரழிக்கப்படுவது அல்ல.
  • ஒன்றினை ஒருவர் இப்போது செய்யாவிடின், அதனை அவர் எப்போதுமே செய்ய முடியாதவராகி விடலாம்.
  • மயக்கம் நீ மயங்கும் பொருளில் இருப்பதில்லை: அது உன்னிடத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் எந்த இருவரும் ஒரே பொருளின் மீது மயங்கி வசப்படுவதில்லை.
  • நமது வாழ்க்கை என்பது நமது சம்ஸ்காரங்கள் நம்முன் மடிப்பிழந்து கிடப்பதே!
  • சகிப்பின்மையை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்பது!
  • பழக்க வழக்கங்களில் நல்ல பழக்க வழக்கங்கள் என்றோ. தீய பழக்க வழக்கங்கள் என்றோ எதுவுமே கிடையாது; எல்லா பழக்க வழக்கங்களும் நம்மை அடிமைப்படுத்துகின்றன.
  • முழுமையான நம்பிக்கை., மனத்துணிவு., உறுதிப்பாடு, நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை முழுமை செய்தல் ஆகியவற்றை அடைவதற்காக சுயநலமிக்க, பயந்த., துயரமான, இலட்சியமற்ற வாழ்க்கையை நாம் கொள்வினை., கொடுப்பு வினை செய்து கொள்கின்றோம்.
  • செய்ததை நினைத்து உண்மையிலேயே வருந்துவது என்பது அதனைத் திரும்பச் செய்யாதிருப்பது.
  • உளக்கனிவு, தியாகம், பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு. கருணை, இரக்கம், நேசிக்கின்றோர் தரும் வேதனையின் வலியைத்தாங்கும் வலிமை ஆகியவையின் கலவையே அன்பு ஆகும்.
  • இலக்கில்லா நினைவு தான் துயரம் ஆகும்; எனவே நினைவிற்கு சரியான இலக்கினை அளிக்கவேண்டும்.
  • எதையும் தியாகம் செய்திட தயாராக இருக்கும் தன்மைதான் மிக உயர்ந்த அன்பின் வெளிப்பாடு.
  • நிலையான நினைவு நம்மை தன்னிலை உணர்விலிருந்து மீட்டெடுக்கிறது; அது நிலையாக மாஸ்டரையும். இறைவனையும். ஒருவருடைய சுயத்தினையும் ஒரே நேரத்தில் ஒரு சேர நினைவு கொள்ளச் செய்கிறது.
  • மாஸ்டர் பணியில் கடுக்கரை அ .ஆறுமுகம்பிள்ளை                      தொடர்புகொள்ளவேண்டுமெனில் .....09443281166.


No comments:

Post a Comment