Friday, March 8, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..5



  1. காத்திருத்தல் தான் மிகச் சிறந்த தவமாகும்.
  2. நிறைய காரியங்களை செய்வதற்கு ஒரே வழி எதனையும் செய்யாது தியானம் மட்டுமே செய்வதாகும்.
  3. சீடனுக்கு மிக மிக உயர்ந்தவர் குரு மட்டுமே. எல்லா நினைவுகளும் அவரைச் சுற்றியே இருந்திடவேண்டும்.
  4. முன்னேற்றம் என்பது நான் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆக விழுமம் கொள்வது; எது எனக்கு துணை புரியுமோ அதற்கு என்னை உட்படுத்துவது; எது என்னைப் பின்னுக்குத் தள்ளுகின்றதோ அதனைத் தவிர்ப்பது.
  5. உனக்காக நீ வேண்டும் போது அது யாசகம் ஆகின்றது; பிறருக்காக நீ வேண்டும் போது அது பிராத்தனை ஆகின்றது.
  6. நாம் மாஸ்டருக்கு செய்திடும் சேவை அன்பு,பக்தி,சரியான பயிற்சிமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவைகள் மட்டுமே நாம் எப்படி ஆக வேண்டும் என மாஸ்டர் விரும்புகின்றாரோ அப்படி ஆகிட நமக்கு உதவுகிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தான் உண்மையான சேவை என முத்திரையிடப்படுகிறது.
  7. திருப்தியடைதல் என்பது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகும். நாம் எப்போதும் துடிப்போடு இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் "ஆம், நான் சாதித்து விட்டேன்" என்ற மனநிறைவு கொள்ளக்கூடாது.
  8. ஒரு ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை, ஒரு ஆரோக்கியமான உள்ளத்தையும், ஆரோக்கியமான உள்ளம் ஆரோக்கியமான உடம்பையும் உருவாக்குகிறது
  9. ஒரு அப்யாஸி ஆன்மிக வாழ்க்கை மிக முக்கியமானதென்று புரிந்து கொண்டால், அவர் சத்சங்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பார்.
  10. மாஸ்டர் உனக்கு தெரியாமலேயே உன்னுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் உண்மையான உண்ர்வுகளால் உன்னைத் தூண்டச் செய்தல் போன்ற நிறைய செயல்களைப் பரிவுடன் செய்கின்றார்.
  11. சரணாகதி என்பது ஒரு படகில் உட்கார்ந்தவாறு அதனை நீரோட்டம் எப்படிக் கொண்டு செல்கின்றதோ அப்படி அனுமதிப்பது போலன்றி வேறு எதுவுமல்ல.
  12. சுத்திகரிப்பு சம்ஸ்காரங்களை நீக்குகிறது. பிராணாஹதி குருவினுடைய அருள் எப்படி இருக்கின்றதோ அதனை அப்படியே உன்னுள் கொண்டு வருகிறது. தியானம் உன்னுடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. நிலையான நினைவு அன்பைத் தோற்றுவிக்கிறது.
  13. உண்மையான ஆன்மிகப் பயிற்சி நம்முடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தோற்றுவித்து, நமது புலன்களிலும், செயல்பாடுகளிலும் சமநிலையைக் கொணர்ந்து, நம்முள் ஒரு இலகுத்தன்மையை உருவாக்குகிறது.
  14. ஒத்துழைப்பு என்பது சரணாகதியை நோக்கிச் செல்லும் பல படிகளுக்கு நம்மைத் தானாக எடுத்துச் செல்லும் முதல்படி.
  15. நிலையான நினைவின் மூலம் அன்பு உருவாகி அந்த அன்பு இறுதியாக உன்னை உன் அன்புக்குரியவரை நோக்கி முன்னேற்றிச்செல்கிறது.
  16. ஒழுங்குக் கட்டுப்பாடு இன்றி அன்பு இருந்திட முடியாது. அன்பும், ஒழுங்குக் கட்டுப்பாடும் இணைந்தே செல்கின்றன.
  17. அர்ப்பணிப்பு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அதனுடைய அர்த்தம் என்னவெனில் இறைப் பணியை இறைவனது நினைவோடு, இறைவனுக்காகச் செய்வதே!
  18. தண்டனையோ, வெகுமதியோ – நாம் எதற்குத் தகுதியானவர்களோ அதனையே நாம் பெறுகின்றோம்.
  19. இங்கெ இருக்கும் நீங்கள் ஒவ்வோருவரும் உங்களைத் திருத்திக் கொள்ள விரும்பவில்லையெனில், மற்றவர்களைத் திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையும், திறமையும் கிடையாது.
  20. முன்னேற்றத்தின் ரகசியம் கீழ்ப்படிதலில் தான் இருக்கிறது.
  21. உன்னுடைய மனம் தவறாகச் சென்றால் அதனைப் போன்று உன்னை முழுமையாக அழித்திட வேறு எதனாலும் முடியாது;
  22. நமது இலட்சியத்தை நோக்கி நாம் பயணிக்கையில் நம்முடைய செயல்பாடுகளால் மாஸ்டருடைய ஆசிர்வாதங்களை நாம் முயன்று பெறும்போது அது நமக்கு பயனை விளைவிக்கின்றது.
  23. என்னுடைய இதயத்தில் ஒன்றுமே இல்லாதிருக்கும் போது, அது அவருடையதாகிறது. அதன் பின்பு அவர் அதனுள் வரும்போது, "அவர்தான் வேலை செய்கிறார், நான் அல்ல" என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.
  24. மனிதநேய ஒருமைப் பாட்டிற்கு முன் கணிப்பே மாபெரும் எதிரி.
  25. ஆசை நெருப்பினைப் போன்றது – அது எரிந்து கொண்டிருப்பதற்காக மேலும், மேலும் எரிபொருளை வேண்டிக் கொண்டே இருக்கும்.
  26. யோகக்கல்வி, யோக சாதனா, யோக கலாச்சாரம் – இவைகளின் நோக்கம் என்னவெனில் நாம் இறந்தபின்பு திரும்பவும் பிறவாதிருப்பதே..
  27. வகுத்துரைத்தபடி விருப்பத்தை வளர்த்துக் கொள்வதும், திரும்பத் திரும்பச் செய்யும் செயல்பாடுகளால் அந்த விருப்பத்தை உறுதி செய்வதுந்தான் சகஜ மார்க்கத்தின் முழுமையான அடிப்படைக் கோடபாடாகும்.
  28. மாஸ்டர் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்தாமல், மாஸ்டரித்து மட்டுமேஅன்பு செலுத்துவது விபரீதமான காரியம்.
  29. செய்ததை எண்ணி வருந்துதல் என்பது திரும்பவும் அதனைச் செய்யாதிருந்திட மனத்திண்மை கொள்வதே!
  30. நாம் மாஸ்டரை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் கீழானவற்றிற்கு பயன்படுத்த விழைந்தால், அது முழுக்க, முழுக்க மூடத்தனமான செயலாகும்.
  31. அன்பின் பரிசு அன்பிற்குரியவரே!
  32. கீழ்ப்படிதலே ஆன்மிகத்தின் முதல் விதி. நான் அதனை அன்பிற்கும் மேலான இடத்தில் வைப்பேன்; ஏனெனில் உண்மையான கீழ்ப்படிதல் அன்பிலிருந்து மட்டுமே தோன்றுகிறது.
  33. நாம் தியானம் செய்கையில், ஆற்றல் மிக்க செயற்பாங்காய் அது இருந்திடும் போது இலட்சியம் எப்போதும் நம் பார்வையில் தொடர்ந்து தோற்றமளிக்கும்.
  34. நாம் சேவை செய்கின்றோம்; ஆனால் நாம் யாருடைய சேவகர்களுமல்ல. பணியாளர்கள் பணத்திற்காகவும், பயத்திற்காகவும், பிழைப்பிற்காகவுமே வேலை செய்கின்றனர். நாம் சேவை செய்வது நாம் அன்பு செலுத்துவதால்!
  35. மாஸ்டர் நமக்கு அருளியுள்ள உயர் மனநிலையில் தொடர்ந்து மூழ்கியவாறு நம்முடைய தினசரி வாழ்வினை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  36. நீ முழுமையான தன்னிலை மாற்றத்தை அடைய விரும்பினால், சரணாகதியின்றி அது நடந்திட சாத்தியமில்லை.
  37. ஆன்மீக முன்னேற்றமும், ஆன்மிக வளர்ச்சியும் மாற்றம் சம்பந்தப்பட்டது. முன்னேற்றம் என்பது மனோபாவாத்தை நல்லதாக மாற்றுவது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.
  38. மாஸ்டரிடம் நாம் வைத்திருக்கும் பக்தி, நம்மை மாஸ்டருடைய பக்தர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மாஸ்டருக்கு சேவை செய்ய வைக்கிறது.
  39. ஆன்மிகத் தளத்தில் மட்டுமே மனித குலத்திற்கு சேவை செய்திடும் வாய்ப்பு உள்ளது. மற்ற ஒவ்வொரு தளத்திலும் குழு அல்லது தனிநபர்களே ஆதிக்கம் செய்கின்றனர்.
  40. மாஸ்டரித்து அன்பு அல்லாத ஆன்மிக முன்னேற்றம், முன்னேறாத நிலையினைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது.
  41. தெய்வீக சக்தியைப் பயன்படுத்தவதே பிராணாஹுதி என விளக்கப்படுகிறது.
  42. நல்லது எது, தீயது எது என்பதைப் பாகுபடுத்தி அறிந்துக் கொண்டு நல்லதைச் செய்யும் மனப்பாங்கை நம்முள் வளர்த்தவாறு தீயதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.
  43. மாஸ்டரை நேசிக்கும் அப்யாஸியால் மட்டுமே உண்மையில் அவருக்குச் சேவை செய்திட முடியும்.
  44. நான் சம்ஸ்காரங்களின்றி இருக்கும் போது, ஒரு கண்ணாடி அதன் முன்பு நிற்கும் முகத்தைப் பிரதிபலிப்பதைப் போலாகின்றேன்.
  45. நீ அனைத்தையும் நீக்கி விட்ட பின்பு எஞ்சி இருப்பதே இறைவன்.
  46. ஒழுக்கக் கட்டுப்பாடே ஒத்துழைப்பதற்கான சாவி. எங்கு ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லையோ அங்கு ஒத்துழைப்பு இருக்க வாய்ப்பு இல்லை.
  47. இயற்கையில் "படைப்பு" என்று எதுவும் கிடையாது. எதுவுமே படைக்கப்படுவதில்லை. எது செயலற்று, ஆனால் செயல்பட தாயாராக இருக்கின்றதோ அதைத்தான் செயல்பட வைக்க முடியும்.
  48. ஒவ்வோரு செயலினையும் செய்ய வேண்டிய நேரத்தில் கட்டாயமாகச் செய்வதே ஒழுங்குமுறை எனப்படும்.

மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

No comments:

Post a Comment