Friday, March 8, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..6


  1. நிலைபேறுடைய மெய்மையோடு கொள்கின்ற இணக்கமே பக்தி எனப்படுகிறது.
  2. கோபம் எனும் கொடிய நோயிலிருந்து ஒருவர் விடுபடாதவரை சமநிலைத் தன்மையை அவரால் எட்டவே முடியாது.
  3. மனதை சமநிலைப்படுத்துவதே உண்மையான சாதனா.
  4. மாஸ்டரிடம் அன்பு ஏற்படும்போதுதான் உண்மையான வளர்ச்சி ஏற்படுகிறது.
  5. மாஸ்டருக்குப் பணிந்து நீ ஒன்றைச் செய்யும்போது அது தோல்வி அடைய முடியாது.
  6. சுத்திகரிப்பு உடல் ஆரோக்கியத்தில் எந்த விளைவினையும் ஏற்படுத்தாது. ஆனால் வாழ்க்கைத் தன்மை மாற்றம் கொள்ளும்.
  7. நீ உடலிலும், உடல் சுகத்திலும் கட்டுண்டு கிடக்கும் வரை துன்பம் தவிர்க்க முடியாதது.
  8. சுத்திகரிப்பு இல்லையெனில் ஆன்மீகப் பயணமும் இல்லை.
  9. அன்பும் சமர்ப்பணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; எங்கு அன்பு இல்லையோ,அங்கு சமர்ப்பணம் இருக்க முடியாது
  10. உயர்ந்த நிலைகளை அடைவதற்கு ஆன்மீகப் பயிற்சியில் பிராணாஹீதியைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
  11. நாம் அன்பாக உருவாகிடும்போது,அதனுடைய தாக்கத்தின் எல்லையில் வருவதனைத்தும் அந்த அன்பினைப் பெறுகிறது, அந்த அன்பினை உணர்கிறது, அந்த அன்பினை உள்வாங்குகிறது, அந்த அன்பினால் எழுச்சியுறுகிறது.
  12. நமது கழிந்த காலச்சுமையே நம்மை அழுத்திக் கீழே தள்ளுகிறது.அதனுடைய தாக்கத்திலிருந்து உன்னால் விடுபடமுடியுமெனில், மலைகள் கூட மண்ணிலிருந்து உயரே பறக்கும்.
  13. அன்பு என்பது வளர்ந்து,அது ஆட்சி செய்யும் போது அதனுடைய வரம்பினுக்குள் வரும் அனைத்தையும் அது ஆரத்தழுவ வேண்டும்.
  14. சுத்திகரிப்பு.என்பது ஏதோ குப்பைகளிலிருந்து விடுபடுவது அல்ல. சுத்திகரிப்பு நம்மை பாரமற்றதாக்குகிறது. ஆன்மாவும் ஜீவிதமும் சுமையில் இருந்து விடுபடுகிறது
  15. ஒருவர் சரியான அன்பெனும் பாதையைப் பின்பற்றி ,கடவுளைப் பெறுவதற்காக அவரைத் தேடிச்செல்ல வேண்டுமே தவிர அவர் கொடுப்பதைப் பெறுவதற்காக நாடிச் செல்லக்கூடாது.
  16. பரிணாம வளர்ச்சி, எது வளர வேண்டுமோ அதனை வளர்த்தெடுப்பதற்குத்தான் துணை புரியும்.
  17. நீ ஒரு சராசரி மனிதன் என்பதை மறந்து அவருடைய நினைவிலேயே வேலை செய்யும்போது அவரது ஆற்றல் உன் மூலம் செயல்புரியும் விந்தை நடக்கின்றது.
  18. குடும்ப வாழ்வில்தான் நாம் மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கிறோம். உண்மையான வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் கல்விக்கூடம் குடும்பவாழ்க்கையே!
  19. ஒரு பக்தன் எப்போதும் பக்தியின் வட்டத்திற்குள்ளே இருக்கும்போதுதான்,மனிதப் பண்பின் உயர்ந்த தன்மை முற்றிலுமாக வெளிப்படுகிறது.
  20. உடல் நலமின்மை உண்மையிலேயே ஆன்மீக நோய்களைக் குணப்படுத்துகிறது. ஏனெனில் அது சம்ஸ்காரங்களில் சிலவற்றைச் சுட்டெரிப்பதோடு சகிப்பித்தன்மையையும் வளர்க்கிறது.
  21. அறுந்து படாத எண்ணச் சங்கிலியோடு நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளிலும், ஒவ்வொரு கணமும் நாம் மிக உயர்ந்த தெய்வீக சக்தியோடு இணைந்திருப்பதை நம்முள் உணர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
  22. காத்திருத்தலும் ஒரு விதமான ஆழ்ந்த கடவுளைப் பற்றிய நினைவுதான்; அது ஆன்மீகத்திற்கு மிகவும் பயன்படும் ஒன்று.
  23. கடவுளை உணரும் இலட்சியப்பாதையில் வெற்றிகரமாகப் பயணித்திட ஆர்வம், நம்பிக்கை,பற்றுறுதி ஆகியவை எளிதாக உதவும் அடிப்படை அம்சங்களாகத் திகழ்கின்றன.
  24. பற்றினில் ஒட்டாமல் அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் ,இந்த வழியில்தான் பற்றினில் பற்றில்லாதிருப்பதை நாம் பயில்கின்றோம்.
  25. தியானத்தின் வாயிலாக நாம் ஒரு தற்காலிகமான தூக்க நிலையினை நம் மனதில் உண்டாக்குகின்றோம். அப்போது மேமபட்டிருக்கும் அமைதி நிலையினில் நாம் தெய்வீக சக்தியோடு தொடர்பு கொண்டு இருக்கின்றோம்.
  26. கடவுளை உணர்வதில் நம்மால் வெற்றியடையமுடியும் என்கிற தன்னம்பிக்கை உண்டாவதுதான் அந்த முயற்சியில் விளையும் முக்கியமான அம்சமாகும். மிக உயர்ந்த அந்த நிலையினை அடைந்திட நாம் பலஹீனர்கள், குறைபாடுடையோர் என ஒரு கணம் கூட முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது.
  27. ஒரு அப்யாஸிக்கு இருக்க வேண்டிய ஒரே முக்கியமான குறிக்கோள் என்னவெனில் அவனுக்குள்ளேயே அவனது இலட்சியத்தைத் தேடுவதுதான்.
  28. பெயர்களிலும், வடிவங்களிலும் சிக்கிக்கொள்ளாது,ஆழமாக உன்னுள் செல்.
  29. நாம் பஞ்சினைப் போன்று இலகுவாய் இருக்கும்போதுதான் ஒரு திறமை வாய்ந்த மாஸ்டருடைய ஒரே ஒரு உந்துதலின் உதவியோடு பரம்பொருளை நோக்கி நாம் பறக்க ஆரம்பிகின்றோம்.
  30. உண்மையான அன்பு இருந்திடின் உடம்பின் ஒவ்வொரு துகளும் ஏழே வருடங்களில் தன்மை மாற்றம் அடைந்து விடும்.
  31. நீ யாரிடத்திலேனும் குற்றத்தைக் காண நேர்கையில் அதிலிருந்து அவர் விடுபட பிரார்த்தனை செய்.
  32. நோய் நொடிகள் அனைத்தும் கடவுள் தரும் வரப்பிரசாதங்கள்.அவற்றில் நிறைய ரகசியங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அவைகள் தரும் துன்பங்களைத் தாங்கும்போது நிறையவே உள் அனுபவங்கள் உண்டாகும்..
  33. கடவுள் உன்னுடைய இதயத்தினுள் மறைந்து கொண்டு உன்னை வெளியே காட்டுகிறார்.. நீ உன்னை மறைத்துக் கொண்டு கடவுளை வெளியே காட்டு.
  34. அவரிடத்து அன்பும் பிணைப்பும் அதிகமாகும் போது அவரை நோக்கி ஒருவர் மேலும் மேலும் முன்னேறிச் செல்கின்றார்
  35. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியினுக்கு நான் என்னை நானாகவே,எனக்காக உட்படுத்திக் கொள்ளும் தேவையை நான் புரிந்து கொள்ளும்போதுதான் உண்மையான ஒழுங்குக் கட்டுப்பாடு என்னுள் வளருகிறது.
  36. நிதானத் தன்மையையும், சமநிலையையும் மீட்டெடுக்கும் போதுதான் கடவுளை உணர்தல் சாத்தியமாகிறது.
  37. அன்பு அனைத்து வேலைச்சுமையையும் எளிதாக்கி, மாஸ்டரின் பேரருள் பொழிந்து கொண்டிருக்கும் வழியை உருவாக்கி இறுதி இலட்சியத்தை அடைந்திடும் பாதையைச் செப்பனிடுகிறது.
  38. நீ முழுமையாக கொடுக்கும்போது. நீ கொடுத்ததை விடவும் கூடுதலாகப் பெறுகிறாய். இதுதான் சரணாகதியின் தத்துவம்.
  39. நம்முடைய வளர்ச்சிக்கும், நம்முடைய வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். பண்பு நலன் வாய்ந்த என்னுடைய உணர்வினையும் என்னுடைய மன நிலையினையும் நான் பேணிப் பாதுகாத்து வந்தால் வெளியிலிருந்து வரும் எதுவும் என்னைப் பாதிக்க முடியாது.
  40. தியாகத்தின் மூலமே அன்பு காட்டப்பட வேண்டும். எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு தியாகமும் இருக்க வேண்டும். ஏனெனில் நாணயத்தின் இருபக்கங்கள் போன்று அடிப்படையில் அவையிரண்டும் ஒன்றே.
  41. ஆன்மீகம், மிகப்பெரிய அளவில் அறிவுப் பரப்பினைக் கடந்து மனிதர்களை அவர்கள் ஒரே இனம் என்ற நிலையில் ஒன்றிணைக்க முயல்கின்றது.. இதயத்தை நோக்கிய தியானப் பயிற்சி மூலம் மனிதப் பண்புகள் பளிங்குக் கட்டிகளாக உறுதியும் ,தெளிவும் பெற்றிட வேண்டும்.
  42. முற்றிலும் அமைவடக்கம் கொண்டு , அனைத்து விஷயங்களிலும் உறுதியான மனப்போக்குடன் இருப்பதே மிக உயர்ந்த வழிபாடாகும்.
  43. நேரத்தை பயன்படுத்துதல் என்பது அதனை நல்ல விதத்தில், ஆன்மீக வழியில், வளர்ச்சியை மையமாகக் கொண்டு தனக்காக ஒருவர் உபயோகப்படுத்துவதாகும்.
  44. ஒவ்வொரு கணமும் முற்றிலும் பிரபஞ்சமளாவிய வாய்ப்புக:ளையும், நிலைபேறுடைய வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருவர் அவைகளை அந்தக் கணத்திலேயே பயன்படுத்திவிட்டால், அவருக்கு அடுத்த கணம் தேவையே இல்லை.
  45. ஒருவர் அவருடைய முன்னேற்றத்திற்காக,அவருடைய பரிகாரத்திற்காக, அவருடைய பாபவிமோசனத்திற்காக, அவருடைய விடுதலைக்காக எதிர்காலத்தைச் சார்ந்திருந்தால், அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றினைச் சார்ந்திருப்பதற்கு ஒப்பாகும்.
  46. ஒருவர் தெய்வீகத்தோடு இணைந்திருக்க உண்மையாக விரும்பினால், அவர் தெய்வீகத்துடன் இங்கேயே, இப்போதே, இந்தக் கணத்திலேயே, இந்த இடத்திலேயே, இந்த நேரத்திலேயே இருந்தாக வேண்டும்.
  47. எங்களுக்கு அருளப்பட்டிருக்கும் திறன்கள் அனைத்தும் எங்களை மேம்படுத்துவதற்காகவே! அதன்மூலம் எங்களோடு இணைப்பினை; ஏற்படுத்துகின்றோரும் மேம்பட முடியும்..
  48. ஒன்றினை நீ கொடுக்கும் வேளையில்தான், கொடுப்பதன் மதிப்பை நீ அறிந்து கொள்கிறாய்..

 

மாஸ்டரின் பணியில்
அ.ஆறுமுகம்பிள்ளை. 09443281166

 


 

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..5



  1. காத்திருத்தல் தான் மிகச் சிறந்த தவமாகும்.
  2. நிறைய காரியங்களை செய்வதற்கு ஒரே வழி எதனையும் செய்யாது தியானம் மட்டுமே செய்வதாகும்.
  3. சீடனுக்கு மிக மிக உயர்ந்தவர் குரு மட்டுமே. எல்லா நினைவுகளும் அவரைச் சுற்றியே இருந்திடவேண்டும்.
  4. முன்னேற்றம் என்பது நான் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆக விழுமம் கொள்வது; எது எனக்கு துணை புரியுமோ அதற்கு என்னை உட்படுத்துவது; எது என்னைப் பின்னுக்குத் தள்ளுகின்றதோ அதனைத் தவிர்ப்பது.
  5. உனக்காக நீ வேண்டும் போது அது யாசகம் ஆகின்றது; பிறருக்காக நீ வேண்டும் போது அது பிராத்தனை ஆகின்றது.
  6. நாம் மாஸ்டருக்கு செய்திடும் சேவை அன்பு,பக்தி,சரியான பயிற்சிமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவைகள் மட்டுமே நாம் எப்படி ஆக வேண்டும் என மாஸ்டர் விரும்புகின்றாரோ அப்படி ஆகிட நமக்கு உதவுகிறது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தான் உண்மையான சேவை என முத்திரையிடப்படுகிறது.
  7. திருப்தியடைதல் என்பது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகும். நாம் எப்போதும் துடிப்போடு இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் "ஆம், நான் சாதித்து விட்டேன்" என்ற மனநிறைவு கொள்ளக்கூடாது.
  8. ஒரு ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை, ஒரு ஆரோக்கியமான உள்ளத்தையும், ஆரோக்கியமான உள்ளம் ஆரோக்கியமான உடம்பையும் உருவாக்குகிறது
  9. ஒரு அப்யாஸி ஆன்மிக வாழ்க்கை மிக முக்கியமானதென்று புரிந்து கொண்டால், அவர் சத்சங்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பார்.
  10. மாஸ்டர் உனக்கு தெரியாமலேயே உன்னுடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தேவைப்படும் உண்மையான உண்ர்வுகளால் உன்னைத் தூண்டச் செய்தல் போன்ற நிறைய செயல்களைப் பரிவுடன் செய்கின்றார்.
  11. சரணாகதி என்பது ஒரு படகில் உட்கார்ந்தவாறு அதனை நீரோட்டம் எப்படிக் கொண்டு செல்கின்றதோ அப்படி அனுமதிப்பது போலன்றி வேறு எதுவுமல்ல.
  12. சுத்திகரிப்பு சம்ஸ்காரங்களை நீக்குகிறது. பிராணாஹதி குருவினுடைய அருள் எப்படி இருக்கின்றதோ அதனை அப்படியே உன்னுள் கொண்டு வருகிறது. தியானம் உன்னுடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. நிலையான நினைவு அன்பைத் தோற்றுவிக்கிறது.
  13. உண்மையான ஆன்மிகப் பயிற்சி நம்முடைய மனதில் ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் தோற்றுவித்து, நமது புலன்களிலும், செயல்பாடுகளிலும் சமநிலையைக் கொணர்ந்து, நம்முள் ஒரு இலகுத்தன்மையை உருவாக்குகிறது.
  14. ஒத்துழைப்பு என்பது சரணாகதியை நோக்கிச் செல்லும் பல படிகளுக்கு நம்மைத் தானாக எடுத்துச் செல்லும் முதல்படி.
  15. நிலையான நினைவின் மூலம் அன்பு உருவாகி அந்த அன்பு இறுதியாக உன்னை உன் அன்புக்குரியவரை நோக்கி முன்னேற்றிச்செல்கிறது.
  16. ஒழுங்குக் கட்டுப்பாடு இன்றி அன்பு இருந்திட முடியாது. அன்பும், ஒழுங்குக் கட்டுப்பாடும் இணைந்தே செல்கின்றன.
  17. அர்ப்பணிப்பு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அதனுடைய அர்த்தம் என்னவெனில் இறைப் பணியை இறைவனது நினைவோடு, இறைவனுக்காகச் செய்வதே!
  18. தண்டனையோ, வெகுமதியோ – நாம் எதற்குத் தகுதியானவர்களோ அதனையே நாம் பெறுகின்றோம்.
  19. இங்கெ இருக்கும் நீங்கள் ஒவ்வோருவரும் உங்களைத் திருத்திக் கொள்ள விரும்பவில்லையெனில், மற்றவர்களைத் திருத்துவதற்கு உங்களுக்கு உரிமையும், திறமையும் கிடையாது.
  20. முன்னேற்றத்தின் ரகசியம் கீழ்ப்படிதலில் தான் இருக்கிறது.
  21. உன்னுடைய மனம் தவறாகச் சென்றால் அதனைப் போன்று உன்னை முழுமையாக அழித்திட வேறு எதனாலும் முடியாது;
  22. நமது இலட்சியத்தை நோக்கி நாம் பயணிக்கையில் நம்முடைய செயல்பாடுகளால் மாஸ்டருடைய ஆசிர்வாதங்களை நாம் முயன்று பெறும்போது அது நமக்கு பயனை விளைவிக்கின்றது.
  23. என்னுடைய இதயத்தில் ஒன்றுமே இல்லாதிருக்கும் போது, அது அவருடையதாகிறது. அதன் பின்பு அவர் அதனுள் வரும்போது, "அவர்தான் வேலை செய்கிறார், நான் அல்ல" என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.
  24. மனிதநேய ஒருமைப் பாட்டிற்கு முன் கணிப்பே மாபெரும் எதிரி.
  25. ஆசை நெருப்பினைப் போன்றது – அது எரிந்து கொண்டிருப்பதற்காக மேலும், மேலும் எரிபொருளை வேண்டிக் கொண்டே இருக்கும்.
  26. யோகக்கல்வி, யோக சாதனா, யோக கலாச்சாரம் – இவைகளின் நோக்கம் என்னவெனில் நாம் இறந்தபின்பு திரும்பவும் பிறவாதிருப்பதே..
  27. வகுத்துரைத்தபடி விருப்பத்தை வளர்த்துக் கொள்வதும், திரும்பத் திரும்பச் செய்யும் செயல்பாடுகளால் அந்த விருப்பத்தை உறுதி செய்வதுந்தான் சகஜ மார்க்கத்தின் முழுமையான அடிப்படைக் கோடபாடாகும்.
  28. மாஸ்டர் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்தாமல், மாஸ்டரித்து மட்டுமேஅன்பு செலுத்துவது விபரீதமான காரியம்.
  29. செய்ததை எண்ணி வருந்துதல் என்பது திரும்பவும் அதனைச் செய்யாதிருந்திட மனத்திண்மை கொள்வதே!
  30. நாம் மாஸ்டரை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் கீழானவற்றிற்கு பயன்படுத்த விழைந்தால், அது முழுக்க, முழுக்க மூடத்தனமான செயலாகும்.
  31. அன்பின் பரிசு அன்பிற்குரியவரே!
  32. கீழ்ப்படிதலே ஆன்மிகத்தின் முதல் விதி. நான் அதனை அன்பிற்கும் மேலான இடத்தில் வைப்பேன்; ஏனெனில் உண்மையான கீழ்ப்படிதல் அன்பிலிருந்து மட்டுமே தோன்றுகிறது.
  33. நாம் தியானம் செய்கையில், ஆற்றல் மிக்க செயற்பாங்காய் அது இருந்திடும் போது இலட்சியம் எப்போதும் நம் பார்வையில் தொடர்ந்து தோற்றமளிக்கும்.
  34. நாம் சேவை செய்கின்றோம்; ஆனால் நாம் யாருடைய சேவகர்களுமல்ல. பணியாளர்கள் பணத்திற்காகவும், பயத்திற்காகவும், பிழைப்பிற்காகவுமே வேலை செய்கின்றனர். நாம் சேவை செய்வது நாம் அன்பு செலுத்துவதால்!
  35. மாஸ்டர் நமக்கு அருளியுள்ள உயர் மனநிலையில் தொடர்ந்து மூழ்கியவாறு நம்முடைய தினசரி வாழ்வினை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  36. நீ முழுமையான தன்னிலை மாற்றத்தை அடைய விரும்பினால், சரணாகதியின்றி அது நடந்திட சாத்தியமில்லை.
  37. ஆன்மீக முன்னேற்றமும், ஆன்மிக வளர்ச்சியும் மாற்றம் சம்பந்தப்பட்டது. முன்னேற்றம் என்பது மனோபாவாத்தை நல்லதாக மாற்றுவது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.
  38. மாஸ்டரிடம் நாம் வைத்திருக்கும் பக்தி, நம்மை மாஸ்டருடைய பக்தர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மாஸ்டருக்கு சேவை செய்ய வைக்கிறது.
  39. ஆன்மிகத் தளத்தில் மட்டுமே மனித குலத்திற்கு சேவை செய்திடும் வாய்ப்பு உள்ளது. மற்ற ஒவ்வொரு தளத்திலும் குழு அல்லது தனிநபர்களே ஆதிக்கம் செய்கின்றனர்.
  40. மாஸ்டரித்து அன்பு அல்லாத ஆன்மிக முன்னேற்றம், முன்னேறாத நிலையினைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது.
  41. தெய்வீக சக்தியைப் பயன்படுத்தவதே பிராணாஹுதி என விளக்கப்படுகிறது.
  42. நல்லது எது, தீயது எது என்பதைப் பாகுபடுத்தி அறிந்துக் கொண்டு நல்லதைச் செய்யும் மனப்பாங்கை நம்முள் வளர்த்தவாறு தீயதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது.
  43. மாஸ்டரை நேசிக்கும் அப்யாஸியால் மட்டுமே உண்மையில் அவருக்குச் சேவை செய்திட முடியும்.
  44. நான் சம்ஸ்காரங்களின்றி இருக்கும் போது, ஒரு கண்ணாடி அதன் முன்பு நிற்கும் முகத்தைப் பிரதிபலிப்பதைப் போலாகின்றேன்.
  45. நீ அனைத்தையும் நீக்கி விட்ட பின்பு எஞ்சி இருப்பதே இறைவன்.
  46. ஒழுக்கக் கட்டுப்பாடே ஒத்துழைப்பதற்கான சாவி. எங்கு ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லையோ அங்கு ஒத்துழைப்பு இருக்க வாய்ப்பு இல்லை.
  47. இயற்கையில் "படைப்பு" என்று எதுவும் கிடையாது. எதுவுமே படைக்கப்படுவதில்லை. எது செயலற்று, ஆனால் செயல்பட தாயாராக இருக்கின்றதோ அதைத்தான் செயல்பட வைக்க முடியும்.
  48. ஒவ்வோரு செயலினையும் செய்ய வேண்டிய நேரத்தில் கட்டாயமாகச் செய்வதே ஒழுங்குமுறை எனப்படும்.

மாஸ்டர் பணியில் திரு .அ .ஆறுமுகம் பிள்ளை ,பேராசிரியர் கடுக்கரை .

தொடர்புகொள்ள வேண்டுமெனில் :------09443281166

Friday, March 1, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4




சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்...4 (55 முதல் 86 வரை 

  • தெய்வீக அருள் என்பது தானாக நிகழ்வதில்லை. அது உன்மீது பொழிவது தானாக நிகழலாம்.;ஆனால் அதை நீ விரும்பி பெற்றுக் கொள்வது தானாக நிகழ்வதாக இருந்திட முடியாது. நீ உன் இதயத்தைத் திறந்து கொள்வதன் மூலமே இது சாத்தியமாகிறது.
  • மிஷனில் இருக்கும் ஒவ்வொரு அப்யாஸியும் அவருடைய செயல்களில், எண்ணங்களில், நடைமுறைகளில், அவரது வீட்டிலும், சமுதாயத்திலும் அவர் நடந்து கொள்ளும் விதத்தில், மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ வெண்டும்.
  • ஆரம்பத்தில் நாம் கடவுளைத் தேடுகின்றோம்; முடிவில் நாம் நம்மையே கண்டு கொள்கின்றோம். எனவே தன்னை உணர்வதே கடவுளை உணர்வதாகும்.
  • தியானம் என்பது மாஸ்டர் நம்மீது பொழியும் ஆன்மீக அமிழ்தத்தை உள்வாங்கும் ஒரு மகத்தான செயலாகும்.எனவே நாம் தியானம் செய்யச் செய்ய நம்முடைய முன்னேற்றம் துரிதமாகிறது.
  • பிறரை ஒழுங்குபடுத்துவதற்குமுன் நம்மை நாம் ஒழுங்கு படுத்துவதே அன்பு எனப் பொருள் படுகின்றது.
  • ஒருவர் தன்னை சாதனாவில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது அவரிடத்து மாஸ்டர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
  • நம்முடைய திறமையையும் மிஞ்சி ஒன்று கை கூடாது இருக்கும்போது மட்டுமே அதனைச் செம்மாந்து செய்திட கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும்.
  • பிரசாதம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அது மிகவும் மதிப்புடனும் பணிவுடனும்,பக்தியுடனும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஏனெனில் அது தெய்வீகத்தால் அருளப்படும் தெய்வீகம் ஆகும்.
  • நீ சேவை செய்திடின் பிறர் உனக்கு சேவை செய்வர்.
  • மாஸ்டர் ஆயிரக்கணக்கான மக்களால் சூழப்பட்டிருக்கலாம்.நாம் நம்மிடம் பற்றினை வைக்காது அவரிடம் பற்றினை வைத்திட வேண்டும்.
  • எதனையும் ஏற்காதிருப்பது அல்ல துறவு; லோகாயுத விஷயங்களில் பற்று வைக்காதிருப்பதே துறவு.
  • கழிப்பறையை சுத்தம் செய்வதாக இருந்தாலும், தெய்வீக உணர்வுடன் அது செய்யப்படின்,அப்பணி தெய்வீகப்பணி ஆகின்றது.
  • சரணாகதி அடைவதே நமது கடமை. நம்மை முதிர்வுறச் செய்வது அவரது கடமை.
  • தனிஅமர்வின் போது நீங்கள் கனமின்றி உணர்வது, நிச்சய,மாக பிராணாஹுதியினால் அல்ல;அது சுத்திகரிப்பால் நிகழ்வது.
  • ஆஸ்ரமம் என்பது ஒரு ஓய்வான மனநிலையில் ஆன்மீக நலனையும், ஆன்மீக வளர்ச்சியையும் அடையும் இடமாகும்.
  • ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு உள்ளிருந்து வருவதேயாகும்.வெளியிலிருந்து திணிக்கப்படுவதன்று.
  • சந்தேகம் மன உறுதியைப் பாழ்படுத்துகிறது. நாம் சந்தேகப்பட ஆரம்பிக்கும் அந்தக் கணத்திலேயே மனஉறுதி காணாமல் போய் விடுகிறது.
  • நம்பிக்கை விசுவாசத்திற்கும், விசுவாசம் பற்றுறுதிக்கும் தானாக அழைத்துச் செல்கிறது.
  • நாம் பரம்பொருளை எண்ணும் போது நிறைய அறிகின்றோம்; அதன்பின்பு படித்தறிவதை விட்டுவிடுகின்றோம்.
  • நமது தேவைகளை எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைப்பதே எளிமை ஆகும்..
  • வாழ்க்கை என்பது உயர்வு, முன்னேற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையால் உருவாக்கப்படுவதாகும். புலனின்பம், சுயதிருப்தி போன்றவற்றால் சீரழிக்கப்படுவது அல்ல.
  • ஒன்றினை ஒருவர் இப்போது செய்யாவிடின், அதனை அவர் எப்போதுமே செய்ய முடியாதவராகி விடலாம்.
  • மயக்கம் நீ மயங்கும் பொருளில் இருப்பதில்லை: அது உன்னிடத்தில் தான் இருக்கிறது. ஏனெனில் எந்த இருவரும் ஒரே பொருளின் மீது மயங்கி வசப்படுவதில்லை.
  • நமது வாழ்க்கை என்பது நமது சம்ஸ்காரங்கள் நம்முன் மடிப்பிழந்து கிடப்பதே!
  • சகிப்பின்மையை சகித்துக் கொள்வதே சகிப்புத்தன்மை என்பது!
  • பழக்க வழக்கங்களில் நல்ல பழக்க வழக்கங்கள் என்றோ. தீய பழக்க வழக்கங்கள் என்றோ எதுவுமே கிடையாது; எல்லா பழக்க வழக்கங்களும் நம்மை அடிமைப்படுத்துகின்றன.
  • முழுமையான நம்பிக்கை., மனத்துணிவு., உறுதிப்பாடு, நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை முழுமை செய்தல் ஆகியவற்றை அடைவதற்காக சுயநலமிக்க, பயந்த., துயரமான, இலட்சியமற்ற வாழ்க்கையை நாம் கொள்வினை., கொடுப்பு வினை செய்து கொள்கின்றோம்.
  • செய்ததை நினைத்து உண்மையிலேயே வருந்துவது என்பது அதனைத் திரும்பச் செய்யாதிருப்பது.
  • உளக்கனிவு, தியாகம், பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு. கருணை, இரக்கம், நேசிக்கின்றோர் தரும் வேதனையின் வலியைத்தாங்கும் வலிமை ஆகியவையின் கலவையே அன்பு ஆகும்.
  • இலக்கில்லா நினைவு தான் துயரம் ஆகும்; எனவே நினைவிற்கு சரியான இலக்கினை அளிக்கவேண்டும்.
  • எதையும் தியாகம் செய்திட தயாராக இருக்கும் தன்மைதான் மிக உயர்ந்த அன்பின் வெளிப்பாடு.
  • நிலையான நினைவு நம்மை தன்னிலை உணர்விலிருந்து மீட்டெடுக்கிறது; அது நிலையாக மாஸ்டரையும். இறைவனையும். ஒருவருடைய சுயத்தினையும் ஒரே நேரத்தில் ஒரு சேர நினைவு கொள்ளச் செய்கிறது.
  • மாஸ்டர் பணியில் கடுக்கரை அ .ஆறுமுகம்பிள்ளை                      தொடர்புகொள்ளவேண்டுமெனில் .....09443281166.