Friday, August 8, 2014

சில பயணங்களில் சில அனுபவங்கள




இரயில் பயண அனுபவங்கள் பல . எழுதுவதா ? எழுதாமல் இருப்பதா……இப்படி எண்ணியே நாட்கள் நகர்ந்து விட்டன. ஜுலை மாதம் ஒரு தினம் நாகர்கோவில்-பெங்களூர் ரயில் வண்டியில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது…. …. ரயில் போய்க் கொண்டிருந்தது.  இருவர் என்னைக் கடந்து சென்ற போது அவர்கள் கையில் பிளாஸ்டிக் குப்பி…..அது செவனப் அல்லது ஸ்ப்ரைட் குப்பி….ஒன்று இருக்கக் கண்டேன். அதினுள் இருந்தது நிறமற்றதாக இல்லாமல் வேறொரு நிறமாக இருந்தது கண்டு அது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிந்தது. சற்று வெளியே போய் ஓடும் ரயிலில் நின்று புறக்காட்சிகளைப் பார்த்து இரசிக்கலாமே என நினைத்து வெளியே போனேன். அங்கே அந்த இருவரில் ஒருவர் சற்று வயதானவர் நின்று கொண்டிருந்தார்……  சற்று நேரத்தில் கழிப்பறை கதவைத் திறந்து உள்ளிருந்து வெளியே வந்தார். இப்போது அந்தக் குப்பியில் பாதி காலியாய் இருந்தது.  அதனை வயதான பெரியவர் பெற்றுக்கொண்டு அவர்களது ”பார்”-ல் நுழைந்து சிறிது நேரத்தில் வெளியே வந்தவர் காலிக் குப்பியை வெளியே வீசியெறிந்து விட்டு நன்றியோடு மற்றவனைப் பார்க்க அவன், ‘போதுமா…! இன்னும் கொஞ்சம் வேணுமா…” என்று கேட்க அவர், ‘போதும்டா……இதுக்குமேல அடிச்சால் குழப்பந்தான்-----” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டதில் அறிந்தவை………. இரண்டு பேருமே படித்தவர்கள். ஒருவர் ஓய்வு பெற்றவர்.மற்றொருவர் பணியில் இருப்பவர்…. இருவருமே அனாவசியமாக எதுவுமே பேசவில்லை….மிக நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள். என்னை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே வெளியே நகரும் மரம்,கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

இருவருமே தினமும் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள்….. 

யாரைக் குறை கூறுவது…..வீதி தோறும் கடையைத் திறந்து வைத்தவர்களையா ?தூங்குவதற்காகவே குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களையா…? சுதந்திரம்…..ஒருவன் கையை வீசி நடப்பது சுதந்திரம்….அது அடுத்தவன் முகத்தினை இடிக்காத வரை…….. அவர்கள் குடிப்பதுக்கு சுதந்திரம் கொடுத்தது நம் நாடுதானே……சக பயணிகளுக்கு துன்பம் தொந்தரவு தராதவரை.அவர்கள் தூக்கத்தை யாரும் கெடுக்கப்போவதில்லை……..

நடுநிசி இரவுவேளை…..இரயில் வெகுநேரமாய் பொதுவாக நிற்காத ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தது…..படுக்கயைவிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தேன்..நாலைந்துபேர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். நான் வண்டி ஏன் நிற்கிறது என்று அறியும் பொருட்டு நடைமேடையில் இறங்கி நடந்தேன் நின்றிருந்தவர்களை நோக்கி….. அச்சமயம் அடுத்துள்ள நடைமேடையில் ஒரு மோட்டார் பைக்கு ஹெட்லைட் வெளிச்சம் மின்ன வேகமாக வந்து அலுவலக அறை முன்னே நின்றது. 

இறங்கியவர் காக்கிச்சட்டை அணிந்திருந்தார் அவருடன் வந்தவர் சத்தம் போட்டு என்னவோ சொல்ல உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். சத்தம் கூடியது….. என்ன…எது…என்று எதுவுமே புரியவில்லை….சற்று நேரத்தில் பைக்கு அங்கிருந்து வேகமாய் போய்விட்டது. அலுவலக அதிகாரி கோபத்தில் அதிக சப்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இதுவும் தெளிவாகவே காதுகளில் விழுந்தாலும் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை……அவர் பேசியது இந்தி மொழியில்…..

காதிருந்தும் செவிடனாய் இருந்த நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன்…..எங்கள் பக்கம் நின்ற ஒருவர் கீழே இறங்கி தண்டவாளத்தைக் கடந்து எதிர்பக்கம் போய் அந்த அதிகாரியிடம் என்ன விசயம் என்று கேட்டு திரும்பவும் அங்கிருந்து சாடி ஓடி வந்து ஏறினார்…. என்ன விசயம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவரைச் சுற்றி  அவர் சொல்வதைக் கேட்க  ஆவல்மிகுதியாய் நின்றிருந்தோம். அவர் இந்தி அறிந்தவர்.
சற்று முன்னால் ஒரு காண்ஸ்டபிள் பிளாட்பாரத்தில் பைக்கில் வந்திருக்கிறார். ….இரவு வேளைகளில் பைக்கின் பின்புற சிவப்பு வெளிச்சத்தைக் காணும் இரயில் ஓட்டுனர்கள் திணறிப்போவார்கள்..அதற்காக அதனைத் தடுத்த அதிகாரியைத்தான் இவர்கள் திட்டிவிட்டுப் போனார்களாம். சற்றுப் போதையில் தான் இருந்தாராம். என்ன செய்வது …… 

பணியில் இருக்கும்போது போதையில் இருந்தது மட்டுமல்ல. கடமையை சரியாய் செய்த அதிகாரியைத் திட்டி அவரை மன உளச்சலுக்கும் ஆளாக்கிவிட்டாரே….மனம் வேதனையுடன் என் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன்.
டொரோண்டோ இரயில் போனபின்புதான் நம்ம இரயில் கிளம்பும்………. மூன்று மணி நேரம் கழிந்தபின் இரயில் ஓடியது……….


தனிமனித ஒழுக்கம் வேண்டும்…..இல்லையென்றால் எந்தச் சட்டமும் மதிப்பிழந்து போகும்………

No comments:

Post a Comment