Wednesday, December 17, 2014

சிங்கப்பூர் --3 வீடு அதன் உள்புறம் வெளிப்புறம்......

மணியின் வீடு ஒரு ஹால்.  அந்தப் பெரிய அறையின் அற்றத்தில் கண்ணாடிச் சுவர்.நடுவே இழுத்து அடைக்கும் கதவு. அதனுள்ளேயுள்ள அறைதான் அடுக்களை.  அதன் ஒரு புறம் இரு பக்திகளாகப் பிரிக்கப்பட்டு குளிப்பதற்கு ஒன்று,டாய்லெட்டுக்கு ஒன்று  என அமைக்கப்பட்டிருந்தது.
ஹாலின் இடது பக்கம் இரண்டு அறைகள் உள்ளன. அதில் முதல் அறை விருந்தினர்களுக்கு அல்லது மணி அதனை அலுவலகமாக பயன்படுத்துவான். 
மணியின் வீட்டு வராந்தாவில் நின்று பார்த்தால் நேர் எதிர்புறம் உள்ள கட்டிடம் மூன்றோ அல்லது நான்கோ தளமுள்ள கட்டிடம் என்பதால்,அந்தத் தளத்தில் ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரிந்தது......வேறு சிலர் யோகா போன்ற உடற்பயிற்சியில் மும்முரமாக இருந்தனர். அந்தத்தளத்தின் மறு அற்றம் கட்டிடம் உள்ளதாக அமைந்திருந்தது. அதில் ஒர் அறை சின்னஞ்சிறு சிறார்களுக்கான பள்ளிக்கூடம். காலை உணவையும் மதிய உணவையும் அருந்தி விட்டு எங்கே போவது என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும்போதே மணி சொன்னது மகிழ்ச்சியாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மணிக்கு ஓய்வுநாள் என்பதால் மணி எங்களை வெளியே அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினான். சிங்கப்பூர் நேரப்படி மூன்று மணிக்குப் போகலாம்.....திட்டமிட்ட படியே அன்று பல இடங்களுக்குப் போனோம்....மறுநாள் நானும் ராசப்ப அத்தானும் தனியாகவே  யூனிவேர்சல் ஸ்டுடியோவுக்குப் போய் பார்த்து வந்தோம்...

எப்படி எழுதுவது.....முதல்நாள்.....இரண்டாம் நாள்......வரிசைப்படுத்தவா....

வேண்டாம் வேறுமாதிரி எழுதலாம் என்ற நினைப்பில்  தொடர்கிறேன்......

சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடு.50 வருடங்களுக்கு முன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்த நாடு. இன்று வளம் மிக்க நாடு, செல்வச் செழிப்பில் உலகில் மூன்றாம் தரவரிசையில் உள்ள நாடு....முதல் பிரதமர்  லீ குவான்யூ செய்த முயற்சியின் காரணமாகவும் கடுமையான உழைப்பாலுமே நாடு முன்னேறியது...
1959 முதலாக 31 வருடங்களில் வேலையில்லாப் பிரச்சினையை சமாளித்தார்.
தொடக்க காலத்தில் இருந்த வேலையில்லாதன்மை இன்றில்லை...இன்று இரண்டு சதவீத இளஞர்களே வேலையின்றி இருக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் உயர்ந்ததும் பெரும் அளவு  வீட்டுப்பிரச்சனை தீர்ந்திட பல வீட்டமைப்புத் திட்டங்கள் அமைக்கபட்டன.நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன.
 அந்நிய நேரடி முதலீடு அந்நாட்டை புதியபொருளாதார நாடாக மாற்றியது. அந்த நாட்டுப் பொருளாதாரம் முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் வணிகக் கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளதால் 7000-க்கும் அதிகமான பல நாடுகள் சிங்கப்பூரில் முதலீடு செய்தார்கள்.
இதன் காரணமாக சிங்கப்பூர் செல்வம் நிறைந்த நாடாக மாறியது. அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.. 

இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; சிங்கப்பூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக  சமய  இன நல்லுறவைக் கூறிகிறார்கள்.


சுற்றுலாத்துறை பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது

சிங்கப்பூர் நாணயம் வெள்ளி என்று சொல்வார்கள் நாம் ருபாய் என்று சொல்வது போல். ஆங்கிலத்தில் சிங்கப்பூர் டாலர்..... (SGD)

 100,50,20,10,5,2 பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக்
நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன....ஒரு டாலர் நோட்டு

உண்டுமா தெரியவில்லை........

கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் காரணமாக 1960ல் 581.5 ச.கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன.

நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது .

சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் மழை உண்டு.நவம்பரில் கூடுதலாக வும் ஃபெப்ருவரியில் குறைவாகவும் இருக்கும். பக்கத்தில் உள்ள இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் சிங்கப்பூரில் வானம் மங்கலாக காணப்படும். அதனால் வரும் காற்றில் உள்ள மாசுவால் உடல் அரிப்பு ஏற்படுவதாகச் சொன்னார்கள்.
ஒரு நாட்டின் ஜனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் உலகளவில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர்.
.
நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது.
குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.




.

No comments:

Post a Comment