Tuesday, January 27, 2015

நன்றி.....அன்புக்கு நன்றி.......

சிங்கப்பூர் சென்றநாள் ஞாயிற்றுகிழமை....அன்று விடுமுறை..அதனால் மணியுடன் நாங்கள் வெளியே செல்லலாம் என்ற ஒரு வாய்ப்பு அமைந்தது.. மதிய உணவு வீட்டில்...... நாங்கள் மூன்று மணியளவில் வெளியே சென்றோம்....நடந்தே சென்றோம்.....அதிசயம் ஆனால் உண்மை..... சுத்தம்...சுத்தம்......சுத்தமான நடைபாதை....பசுமையான மரங்கள்.....பழுத்த இலைகள் கூட கீழே தெருக்களில் வீழ்ந்திட அஞ்சுமா......எங்கும் ... எந்த ஒரு இடத்திலும் இலைச் சருகுகள் கூட கண்ணில் படவில்லை... நாய்கள் உள்ளன....ஆனால் அனாதை நாய்கள் இல்லை. நாய் மிகவும் கம்பீரமாகத் தன் எஜமானனுடன் செல்வதைக் காணலாம்......அதுகூட தெருக்களை அசுத்தம் செய்ததாகத் தெரியவில்லை....அதிசயமாய் இருந்தது......அது தெருவில் இருக்க முயலும்போதே ஒரு பிளாஸ்டிக் பை மூலம் அதன் கழிவுகளை எடுத்து ஆங்காங்கே இருக்கும் குப்பைத் தொட்டிகளில் போட்டு விடுவார்கள் .....


கீச்செயின் கவர் படம்......அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று பார்த்தேன்.
      துப்பினால்....புகைபிடித்தால்......இப்படியே எட்டு விதமான தவறுகள் செய்தால் 500 சிங்கப்பூர் டாலர் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.....
Singapore a real FINE place......இரு பொருள் தரும் வாசகம் அது....

முக்கியமான பல இடங்கள் ...... இந்திய உணவு.....மிருக காட்சி ச்சாலை ,
,பல நாட்டுப் பறவைகள்,..... கண்டோம்...

சரியான சமயத்தில் வரும் இரயில்கள், பஸ்கள்..... எனக்கு ஆச்சரியமாய் இருந்தது....

சொர்க்கமே ஆனாலும் நம் நாடு போல் இருக்குமா.... ஏழு நாட்களுக்கு மேல் வீட்டைத் தேடத்தொடங்கிற்று என் மனம்....

நம் நாடு மிகப் பெரிய நாடு......பல்வேறு கலாச்சாரம்.......பலமதம்.....பல இனம்...உலகில் இரண்டாவது பெரிய ஜனத்தொகை.....பல நகரம் ..... வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் நாடுதான் நான் நாடும் நாடு.....

அது சுற்றுலாத் தலம்.... அதிகம் படித்தவர்களுக்கு சொர்க்கம்....  நமக்கு போய்ப் பார்த்து கொஞ்ச நாட்கள் இருந்து ரசிக்கலாம்......

சிங்கப்பூர் ஒரு அழகு நகரம்.....சுய கட்டுப்பாடு....... தனித்தன்மை கொண்டவர்கள்..... ஒரு சிறிய நாடு......அமைதியான நாடு......எந்த விளைச்சலோ.....பயிர் வகைகளோ.... கிடையாது.....ஆனாலும் கலப்படமற்ற உணவுகள் கிடைக்கும்....


தமிழ்  தழைக்கும் இடம்...... சிங்கப்பூர்......பெருமையாக இருக்கிறது தமிழன் என்பதால்.......
23-ஆம் தேதி நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்...... வாழ்வில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என்னால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
ஆண்டவனுக்கு நன்றி......