Saturday, February 7, 2015

வயதானபின் கணவன் மனைவியரில் யார் முதலில்.......... தாலிகட்டியவனா?.....தாலி அணிந்தவளா?......

தாயோடு அறுசுவை போகும்,தந்தையோடு கல்வி போகும்,
மனைவியோடு எல்லாமே போகும் என ஆசிரியர் வகுப்பில் சொன்னது அடிக்கடி என் நினைவில் வந்து போகும்..... மனைவியின் பிரிவால் ஏற்படும் நிலை ஒரு வயதான மனிதனுக்கு ஏற்படவே கூடாது. மனைவி இருந்து கணவன் போனால் அந்தப் பெண் வாழ்க்கையை மகனுடன் .மகளுடன் அனுசரித்துப் போய் எஞ்சிய வாழ்வைக் கடந்து விடுவாள்.....ஆனால்,  ஒரு ஆணால் அது போன்று அவ்வளவு எளிதாக வாழ்க்கையை இனிவாய் முடிக்க முடியாது. ஆசிரியர் சொன்ன விளக்கம் இது.

அனைவருக்கும் வயதான காலத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுமோ என்னவோ.....தெரியவில்லை....

எனது வயதான தந்தை தன் இறுதிக் காலத்தில் சொல்வார்....  தாங்கள் இருவருமே ஒரே சமயத்தில் இறையடி சேரணும்.... சேர்ந்தால் இருவருமே யோகம் செய்தவர்கள்.ஒருவர்போய் மற்றொருவர் இருந்தால் அவமானப்பட வேண்டியதிருக்கும்.... ஆனால்

என் தந்தை மறைந்தபின் என் தாயர் எங்களுடன் 15 வருடங்கள் ராஜா இல்லா ராணி போல் வாழ்ந்து மறைந்தாள்..... என்பதுவே உண்மை....

வரும் வாழ்க்கையை அதன் போக்கிலேயே போகவிட்டு, இரவு தூங்கப் போவதும் மறுநாள் கண் விழித்தபின்னால்தான் உயிரோடு இருப்பதை உணர்வதாகவும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.....

வறுமையும் வெறுமையும் வயோதிகத்தில் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் கணவனும் மனைவியும் சேர்ந்தே உயிரோடு இருந்தால் மட்டுமே இயலும். இயற்கை இதற்கு உதவி செய்வதில்லை....சேர்ந்தே வாழ விரும்பும் எவரும் ஒரே நாளில்  மறைவதில்லை....

யார் முதலில் இறப்பது......?  ஆண் .....அதுவும் முதியவயதினர்.....மனைவிக்கு முன்னால் போனால் பாக்கியம் செய்தவன்.....

ஒரு கதை......மங்கையர் மலர்.....பெப்ருவரி 1-15 இதழில்  இறையன்பு எழுதிய
” அவள் ஏன் அப்படிச் சொன்னாள் ?’.... படித்தேன்..... ஆச்சரியம்......எனக்குப் பிடித்த..... ரசித்த கதையாய் அமைந்தது.....

சுருக்கமாகச் சொல்வதானால் .............

கதை நாயகி பெயர் சபர்மதி....வயது எழுபது.... அந்த ஊர் அரங்கத்தில் ஒரு மகான்....அவரை தரிசித்து வணங்க வரிசை வரிசையாய் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்கிறார்கள். சபர்மதியும் வணங்குகிறாள்....மகான்,’’ தீர்க்க சுமங்கலியாய் வாழ்க.......என வாழ்த்த, பதறிய சபர்மதி .” அப்படி மட்டும் வாழ்த்தாதீங்க சாமி. அவர் எனக்கு முன்னாடி போயிடணும்”......... என வேண்டுகிறாள். இப்படி ஒரு கிராதகியா என அவளை கரப்பான்பூச்சியைப் பார்ப்பதைப் போல அரங்கத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். அவள் ஏன் அப்படி சொன்னாள் ? .......

 இதனை அறிய வேண்டுமானால் அந்த அழகு கதையத்தான் படிக்கவேண்டும்.........




No comments:

Post a Comment