Friday, October 14, 2016

கடுக்கரை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் கண்ணாரக் கண்டு களித்தேன்.
எம்பெருமான் எமக்களித்த வரமல்லவா
நம்மை வாழ்வித்த இறையல்லவா
அம்மா போல் அரவணைத்த ஆதியும்
அந்தமும் இல்லா பரம்பொருளல்லவா
எந்தன் மனம் துள்ளுது சொற்கள் வந்து விழுகிறது
கருடவாகனமுடைய  எம்பிரானே
ஊர் வாழ உங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழ்ந்திட
காத்தருளிய கடுகைப் பெருமாளே ..... வணங்குகிறேன்

தோன்றியது மனதில் எழுதுகிறேன் அதனால் ......
கசடறக் கற்ற மொழியின் வளத்தை தந்தருள்வாய் பெருமாளே....


திருவேங்கடப்பெருமாள் நம்மூரில் நமக்காக நம்மைக் காக்கவே
எழுந்தருளினார் ………..இன்றிருக்கும் எவரும் பிறக்கு முன்னே…….
இன்றிருப்போர் யாரும் அறிந்திலர் அவர் கடுகையுறைத் திருநாளை
ஊர்கூடித் தேர் இழுக்க  அவருக்கோர் தேர் இல்லை வீதியிலாக் காரணத்தால்
வானுக்கு எல்லை இல்லை …  வானுயர் கோபுரம் இரண்டினை
தைத்திருவிழா காணும் ஏழுமலையான் கண்டான் இத்”தை” ஏழாம் நாளிலே….
ஊர் கூடி உயர்த்தியதால் எல்லோர் மனமும் பாரினில் உயர்ந்ததே
கிட்டாத பாக்கியம் கிட்டியது போல் கோபுரம்கண்ட எல்லோர் மனமும்                  குளிர்ந்ததே.
மட்டிலா மகிழ்ச்சியால் துள்ளாத மனங்களெல்லாம் துள்ளியதே….

குறைந்த நாட்களில் செயற்கரியதோர் செயல்தனை நிறைவாய் முடித்த
பொறுப்பாளர் அனையோர் பெயர்களும் ஊர் உள்ளவரை எல்லோர்
உள்ளங்களிலும் நிறைந்திருக்கும்……..
எல்லாப் புகழும் நயினார் திருவேங்கடப்பெருமாளுக்கே

------------------------------------**********************************************************----------------------------------------
  இறைவா  எல்லோரும் இன்புற்றிருக்க அருள் புரிவாயே......
-------------------------------------___________________________________________------------------------------------ 

     கல்லூரியில் நண்பர் ஒருவர் நான் எழியப் பிவு ஒன்றினப் பைப் பித்ேன் என்றார் வாய் மொழியால்..... ன்றாக இரந்தாகும்ொன்னார் உடல் மொழியால்..... 

  என் விகள் புக்காக்கப்பேண்டும்  ோன்ிில்....ால்.... எனு பப் பிவுகில் இவ்விும் இடம் பெறட்டுமே........
எனை கருவாக உருவாக்கிய என் தாய் தந்தையில்லை என்ற குறையறியாமல் இன்றும் எனை வாழ்வித்துக் கொண்டிருக்கும் என் உயிர் அவள். அவள் இருக்கும் வரை நானும் அவளுக்கு ஒரு பிள்ளையே....அவள் இருக்கையில் நான் மறைய வேண்டும்... நான் அவள் இல்லாமல் வெறும் பூஜ்யம் என்பதை உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறதே... உன்மை....உளறு மொழியல்ல.....இந்த வயதிலும் இதனைச் சொல்லாவிட்டால் இனிமேல் எந்த வயதிலும் சொல்ல முடியாதோ.....மனிதம் இல்லா மானுடன் என்ற கூற்றுக்கு ஆளாகிவிடுவேனோ.... இறைவா என் இல்லாளை இன்று போல் என்றும் காப்பாற்று என வேண்டுகிறேன்..... இன்று......நானும் அவளை வாழ்த்துகிறேன்.... இன்று அவள் பிறந்த நட்சத்திரம் “ தை கார்த்திகை “
_________________________________________________________________________________



வாழ்க்கை......வேடிக்கை.....ஒருவரின் வாழ்க்கை போல் இன்னொருவனின் வாழ்க்கை அமைவதில்லை.  தேடி உனையடைந்த வசந்தத்தை  வசமாக்கப் பழகிக்கொள்.  மானுடத்தை நெஞ்சினில் வைத்திரு.  பணிப்பெருமையை தலையில்   சுமையாய்  வைக்காதிரு. எந்த இடத்தினால் நிம்மதி கிடைக்குதோ அந்த இடத்தை நேசித்திரு. அடங்கிப் போவது அவமானமெனக் கருதாதிரு.. கண்ணியமாக இருப்பதும்  கட்டுப்பாடுடன் கடமையாற்றுவதும் சாலச் சிறந்தது என்பதை மறவாதிரு.  சமுதாயம் தந்த வாழ்வுக்கு நன்றிக் கடனாக திருப்பி ஏதாவது செய்யக் காத்திரு.. வாழ்வதும் தாழ்வதும் நம் கையில் இல்லை  என்பதனை உணர்ந்திரு . இருக்கின்ற நாளில் இனிமையாகப் பழகு எளியோரிடம்..... அவன் சிரிக்க நீ பேசு... இயன்றதைக் கொடு அவன் பசியாற... இறைவனை எங்கும் தேட வேண்டாம். அவன் சிந்தும் கண்ணீர் மறைந்து  சிரிப்பானே..... அந்தச் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....


No comments:

Post a Comment